அரசமைப்புச் சட்டத்தை இயற்றியவர் அம்பேத்கர் அல்ல - "ஒரு பிராமணர்"தானாம்
"பிராமணர்களுக்கு" என்று தனி மரபணு இருக்கிறதாம்!
அகமதாபாத், ஜன.7பிராமணர்களுக்கு என்று தனி மரபணு உண்டு. அவர்கள் தான் அறிவாளிகள், இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை எழுதியவர்கூட அம்பேத்கர் அல்ல --_ ஒரு பிராமணர்தான் என்று பார்ப்பன ஜாதிவெறி தலைக்கேறி உளறிக் கொட்டியுள்ளார் குஜராத் சட்டப் பேரவை சபாநாயகர் (பிஜேபி)
நோபல் பரிசு பெற்ற இந்தியர்களில் அதிகம் பேர் பிராமணர்கள், அவர்கள் மனித குலத்திலேயே உயர்வான மரப ணுவைக் கொண்டவர்கள் என்று குஜராத் சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி கூறியிருக்கிறார்.
குஜராத் மாநிலம், அடலாஜ் நகரில் "மெகா பிராமணர் பிசினஸ் கான்பரன்ஸ்" என்னும் பார்ப்பனர் தொழிலதிபர்கள் மாநாடு நடைபெற்றது. விழாவில் குஜராத் முதலமைச்சர் விஜய்ரூபானி கலந்து கொண்டார்.
விழாவில் அம்மாநில சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி பேசுகையில் பிரா மணர்களின் உடல்களில் வித்தியாசமான மரபணு இருப்பதாக கூறினார். விழாவில் அவர் மேலும் பேசியதாவது:
நாங்கள் பார்ப்பனராக பிறந்திருக் கிறோம். பிராமணர்களின் மரபணு நம் மிடம் உள்ளது. இந்த மரபணுவின் சிறப்பு மற்றவர்களை ஆசிர்வதிக்கவும், உலக மக்களின் நலன்களில் அக்கறை கொண் டவர்களாக மாற்றம் கொண்டுள்ளது..
சட்டத்தை எழுதியது அம்பேத்கர் அல்ல - ஒரு பிராமணரே
அரசியலமைப்பு சட்டம் எப்படி இயற் றப்பட்டது தெரியுமா? அதை இயற்றியவர் அம்பேத்கர் இல்லை. ஒரு பிராமணர் தான் அரசியலமைப்பு சட்டத்தை இயற்றி இருக்கிறார். ,அரசியலமைப்பு சட்டத்தின் வரைவு எப்படி தயாரிக்கப்பட்டது? 60 நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்களை படித்து அதை தயாரித்தது யார்? எல் லோரும் நினைப்பது போன்று அம்பேத்கர் அல்ல; அதை ஒரு பிராமணர் தான் தயாரித்தது. அவர் பெயர் பெனகல் நரசிங்க ராவ். தனித்துவமான மரபணுவைப் பெற்றதால் தான் இவ்வாறான ஒரு அரசமைப்புச் சட்டத்தை எழுத முடிந்தது.
இத்தகவலை அம்பேத்கரே கூறியிருக்கிறார். அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் அவர் பேசும் போது, இந்த பெருமை எல்லாம் இந்த பி.என்.ராவைச் சேரும் என்று அம்பேத்கர் குறிப்பிட்டிருக்கிறார். பிராமணர் எப் போதும் மற்றவர்களை முன்னுக்கு நிறுத்தி, பின்னால் இருந்து செயல்படுபவர்கள் என்பது வரலாறு. அப்படித்தான் அம் பேத்கரை முன் நிறுத்தியவர் பி.என்.ராவ்.
நோபல் பரிசுகளை இதுவரை 8 இந்தியர்கள் பெற்றுள்ளனர். அதில் 7 பேர் பிராமணர்கள். அண்மையில் அதை வென்ற அபிஜித் பானர்ஜி ஒரு பிராமணர். நண்பர்களே, ஆப்ரிக்கா சென்று பாருங்கள். அங்குள்ள மக்களின் நிறத்தை யும், அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதையும் பார்க்கலாம். சீன மக்களை பாருங்கள் அவர்களின் கண்கள் திறந் திருக்கிறதா? மூடி இருக்கிறதா என்று அறியமுடியாது. இதே போன்று தான் ஜப்பானியர்களும்.
ஆனால் நீங்கள் இந்தியா வந்தால், பஞ்சாப் , அரியானா எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். சிலர் அறிவுள்ளவர்களாக இருப்பார்கள்; பெரும்பாலானோர் அறி வற்றவர்களாக (மாடுகள்) இருப்பார்கள். இப்படி தான் நாடு முழுவதும் வித்தி யாசமான காலநிலை, மனிதர்கள் இருப் பார்கள். அதற்கு காரணம், ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் டிஎன்ஏ தான் என்று பேசினார்.
அன்று மக்களவைத் தலைவர் பேசினார்
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோடாவில் 11.9.2019-அன்று அகில பிரா மின் மகாசபா'' நிகழ்ச்சி ஒன்றில் தலை மையேற்று பேசிய மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூறும்போது,
பார்ப்பனர்கள் சமூகத்தில் மிகவும் உயர்ந்த தகுதியைப் பெற்றுள்ளனர். இது பிறப்பால் வந்த தகுதி ஆகும். இது எளிதாக கிடைத்ததல்ல, பார்ப் பனர்களின் அளப்பரிய தியாகம், தவம் போன்றவற்றிற்கு கிடைத்த பரிசு ஆகும். இன்றும் பார்ப்பனர்கள் மிகவும் உயர்ந்த தகுதியைப் பெற்று அனைவருக்கும் தலை சிறந்த வழிகாட்டியாக உள்ளனர் என்று கூறி னார்.
இதையே அவர் தனது சமூக வலை தளத்திலும் பதிவிட்டுள்ளார். மக்களவைத் தலைவரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் குஜராத் மாநில சட்டப் பேரவை தலைவர் பார்ப்பனர்களுக்கு என்று உலக மனிதர்களிடமிருந்தே சிறப் பான மரபணு உள்ளது என்று கூறியுள் ளார்.
குறிப்பிட்ட ஜாதியினருக்கென்று நடத்தும் இந்த மாநாட்டில் அரசமைப்பு சட்டத்தின் படி பதவியேற்ற குஜராத், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட பல மாநில ஆளுநர்கள் கலந்துகொண்டனர்.
- விடுதலை நாளேடு 7 1 20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக