சனி, 11 ஜனவரி, 2020

முஸ்லிம்களுக்குக் குடியுரிமை மறுப்பு: அன்று கோல்வால்கர் எழுதியதை இன்று மோடி செய்கிறார்

திருப்பூர் விழாவில் தமிழர் தலைவர் உரை வீச்சு

தொகுப்பு: மின்சாரம்

திருப்பூர், ஜன.10 சிறுபான்மையினர் குடியுரிமையும் இன்றி வாழத் தயாராகவேண்டும் என்று அன்று ஆர்.எஸ்.எஸ். குருநாதர் கோல்வால்கர் சொன் னார்; அதனைத்தான் அவர் வழிவந்த மோடி தலை மையிலான ஆட்சி செய்கிறது என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நேற்று (9.1.2020) திருப்பூரில் நடைபெற்ற ‘விடுதலை' சந்தா வழங்கும் விழா - இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சுப்பராயன் அவர்களுக்குப் பாராட்டு விழாவில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:

 

தோழர் சுப்பராயன் அவர்கள் குறைந்த நேரத் தில் பேசினாலும், அவருடைய பேச்சு மிகவும் சிறப்பானது- அவருடைய பேச்சோடுகூட இந்த நிகழ்ச்சியைக்கூட முடித்துவிடலாம் என்று கருதுகி றேன். அந்த அளவுக்குச் சுருக்கமான சிறப்பான உரை அது.

தேனீக்களாக உழைத்த

தோழர்களுக்குப் பாராட்டு

இந்த நிகழ்ச்சியில் கழகத் தோழர்கள் தேனீக் களாக சுற்றித் திரிந்து சந்தாக்களை சேர்த்து அளித் துள்ளீர்கள். அவர்களுக்கெல்லாம் பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘விடுதலை' என்பது ஒரு கொள்கை ஏடு. ஒரு கொள்கை ஏட்டை 85 ஆண்டுகாலம் நடத்துவது என்பது சாதாரணமானதல்ல. ‘ஜனசக்தி'யை நாளேடாக நடத்த முடியவில்லை; ‘தீக்கதிர்‘ தாக் குப் பிடித்துக்கொண்டு இருக்கிறது; ‘முரசொலி' நடக்கிறது.

நாம் சினிமா செய்திகளைப் போடுவதில்லை. ராசி பலன் போட்டால் காசு பலன் கிடைக்கும்; அதை நாம் செய்ய முடியாது.

‘விடுதலை' வெறும் காகிதமல்ல - ஆயுதம்!

இது வெறும் காகிதமல்ல - கொள்கை ஆயுதம்!

தாமதமாகத்தான் பெரியாரைப் புரிந்துகொண் டோம் என்று ஓர் ஒப்புதல் வாக்குமூலத்தை தோழர் சுப்பராயன் இங்கே கொடுத்தார். தாமதமானாலும் சரியாகப் புரிந்துகொள்வதுதான் முக்கியமானதாகும் (பலத்த கரவொலி).

திருப்பூரில் நடைபெற்ற பாராட்டு விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் அவர்களுக்கு கழகத் தலைவர் பயனாடை அணிவித்து கழக நூல்களை வழங்கினார். திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க.செல்வராஜ் அவர்களுக்குக் கழகத் தலைவர் சால்வை அணிவித்து மகிழ்ந்தார்.

வாக்காளர்களுக்கும் பாராட்டுகள்!

இந்தப் பாராட்டு விழா தோழர் சுப்பராயனுக்கு மட்டுமல்ல; எவ்வளவு அதிகார பலம், ஆட்சி பலம், பண பலம், பத்திரிகைப் பலம் இவற்றையெல்லாம் கடந்து மக்கள் வாக்களித்துள்ளார்களே, அந்த வாக் காளர்களுக்கும், பொது மக்களுக்கும் சேர்த்துதான் இந்தப் பாராட்டு.

அன்று கோல்வால்கர் சொன்னதுதான்!

மேலும் ‘நீட்' தேர்வால் ஏற்பட்டுள்ள அநீதிகள் குறித்தும், மத்திய அரசின் முடிவுகளுக்கெல்லாம் தாளம் போடும் தமிழக அரசு குறித்தும் விரிவாகப் பேசினார் கழகத் தலைவர்.

இன்றைக்குக் குடியுரிமை தொடர்பான சட்டங் களை மத்திய பி.ஜே.பி. அரசு நிறைவேற்றியுள்ளது. ஆர்.எஸ்.எஸின் குருநாதரான கோல்வால்கர் - We or Our Nationhood Defined எனும் நூலில் சிறுபான்மையினர் குடியுரிமையின்றியும் வாழ வேண்டும் என்று எழுதினாரே - அதனுடைய தொடர்ச்சிதான் என்றும் ஆதாரத்தோடு குறிப் பிட்டார்.

(முழு உரை பின்னர்)

 - விடுதலை நாளேடு 10 1 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக