மத்திய சுகாதார துறை நாடாளுமன்றத் தில் அளித்துள்ள விபரங்களின் படி உத்தரப் பிரதேசத்தில் மிகவும் மோசமான பொது சுகாதார அவசர நிலை நிலவுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் மொத் தம் 3,621 மருத்துவர்கள் இருக்க வேண்டும். ஆனால் இருப்பதோ வெறும் 1,344 மருத் துவர்கள் மட்டுமே. காலியிடங்கள் 2,277.
கூடுதலாக 213 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மின்சார வசதி இல்லை. மக்கள் சென்று சேருவதற்கு உரிய சாலை வசதி 459 ஆரம்ப சுகாதார நிலையங்க ளுக்கு கிடையாது. 270 சுகாதார நிலையங் களுக்கு தண்ணீர் வசதி இல்லை. இவை அனைத்தும் அங்கே அமைக்கப்பட்டுள்ள 942 ஆரம்ப சுகாதார நிலையங்களை அடிப்படையாகக் சொல்லப்பட்டவை ஆகும். ஆனால் உண்மையில் உத்தரப் பிரதேசம் இந்தியாவின் பெரிய மாநிலமா கும். ஏறக்குறைய தமிழ்நாட்டை விட இரண்டு மடங்கு பெரிது. அங்கே மொத்த நாடாளுமன்ற தொகுதிகள் 80. நியாயமாக அங்கே இருந்து இருக்க வேண்டியது 5,000 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 15,000 துணை சுகாதார நிலையங்களும் ஆகும். ஒப்பீட்டளவில் தமிழ்நாட்டில் 1,835 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 8,712 துணை சுகாதார நிலையங்களும் உள்ளன. மருத்துவர்கள் தோராயமாக 5,500 பேர் இவ்விடங்களில் பணியாற்று கின்றனர். காலி பணியிடங்கள் ஏதுமில்லை.
தமிழகத்தில் தொடர்ந்து திராவிட ஆட்சியில் தமிழ் நாடு சீரழிந்து விட்டது, குஜராத் மாடல் உத்தரப்பிரதேச மாடல் என்று எல்லாம் மதவாதிகள், ஜாதியவாதி கள் மற்றும் பிரிவினைவாதிகள் தொடர் பொய் பரப்புரைகளைச் செய்து வருகின்ற னர். தற்போது யூ டியூப் மற்றும் முகநூலில் பலர் இரவு பகலாக இதே வேலையாக இருந்து வருகின்றனர். சிலர் இந்த வேலை யைத் தொடர எனக்கு பணம் அனுப்புங் கள் என்று வெளிப்படையாகவே கேட்டு வருகின்றனர்.
இவர்கள் எல்லாம் ஒன்று திருத்தணி எல்லையைகூட தாண்டாதவராக இருக்க வேண்டும், இல்லையென்றால் மன நோயாளிகளாக இருக்கவேண்டும் என் பது குறிப்பிடத்தக்கது.
- விடுதலை ஞாயிறு மலர் 30 11 19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக