கழகத் தலைவர் தலைமையில், அன்னையின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்துச் சூளுரை
சுயமரியாதை சுடரொளிகள் நினைவிடத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் (10.3.2020)
அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு பிறந்த நாள்
அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு பிறந்த நாளான இன்று (மார்ச் 10) கழகத் தலைவர் தலைமையில் கழகத் தோழர்கள் அணிவகுத்து வந்து தந்தை பெரியார் சிலை, அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் மரியாதை
அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவுப் பிறந்த நாளான இன்று நினைவிடத்தில் தமிழர் தலைவர் தலைமையில் மலர் வளையம் வைத்து உறுதிமொழி ஏற்பு (10.3.2020)
அம்மா சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவிக்கப்பட்டது
அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவுப் பிறந்த நாளான இன்று சென்னை பெரியார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அம்மா சிலைக்கு தமிழர் தலைவர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. (10.3.2020)
அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு பிறந்த நாள் விழா
அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவிப்பு, நினைவிடத்தில் மரியாதை
சென்னை,மார்ச்10, அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு பிறந்த நாள் விழாவையொட்டி இன்று (10.3.2020) காலை தமிழர் தலைவர் தலைமையில் அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் கழகத் தோழர்கள் சூளுரை எடுத்துக்கொண்டனர்.
திராவிடர் மகளிர் அணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்கள், தோழர்கள் இன்று பெரியார் திடலில் ஒன்றிணைந்து, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் பெரியார் திடலிலிருந்து ஊர்வலமாகச் சென்று பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமையப்பெற்றுள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவித்தார்கள்.
‘தந்தை பெரியாரை 95 ஆண்டு காலம் காத்த அன்னை மணியம்மையார் வாழ்க’ என முழக்கமிட்டனர்.
பெரியார் திடலில் தந்தை பெரியார் 21 அடி உயர முழு உருவ சிலைக்கு மாலை வைத்து, ‘அன்னை மணியம்மையார் வாழ்க’வென கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் முழக்கமிட்டனர்.
நினைவிடத்தில் தமிழர் தலைவர் தலைமையில் சூளுரை ஏற்பு
தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நினைவிடங்களில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடத்தில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உறுதிமொழி கூற, அவரைத் தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி கூறி சூளுரை ஏற்றனர்.
பெரியார் நூலக வாசகர் வட்டம்
பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், செயலாளர் கி.சத்தியநாராயணன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
திராவிடன் நிதி நிறுவனம்
திராவிடன் நிதி சார்பில் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், அருள், வெங்கடேசன் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தொழிலாளர் கழகம் சார்பிலும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
மகளிரணி, மகளிர் பாசறைத் தோழர்கள்
மகளிர் அணி, மகளிர் பாசறையின் சார்பிலும் மலர்வளையம் வைக்கப்பட்டது.
மோகனா அம்மையார், திருச்சி தங்காத்தாள், கழக துணைப்பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி, மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, காப்பாளர் க.பார்வதி, கு.தங்கமணி, பொதுக்குழு உறுப்பினர் சி.வெற்றிச்செல்வி, வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, டெய்சி மணியம்மை, மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, பேராசிரியர் தவமணி, நாகவள்ளி முத்தையன்,பெலா.மு.சந்திரா, வி.வளர்மதி, பி.அஜந்தா, தங்க.தனலட்சுமி, பெரியார் களம் இறைவி, பசும்பொன் செந்தில்குமாரி, பூவை மு.செல்வி, ஓவியா அன்புமொழி, செல்வி முரளி, மோகனப்ரியா, மு.பவானி, வி.யாழ்ஒளி, யாழ்மொழி, சீர்த்தி, பாக்கியா, கனிமொழி, மணிமேகலை, த.மரகதமணி, அய்ஸ்வரியா, அன்புமதி, மேகலா, வெண்ணிலா உள்ளிட்ட மகளிர் அணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
பங்கேற்றோர்
மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன்,மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், துணை செயலாளர் யாழ்திலீபன், பெரியார் சமூகக் காப்பு அணி அமைப்பாளர் சோ.சுரேஷ், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன், கவிஞர் கண்மதியன், வேலூர் மண்டல செயலாளர் வேட்டவலம் பி.பட்டாபிராமன், ஆடிட்டர் இராமச்சந்திரன், தூத்துக்குடி பெரியாரடியான், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் முனியசாமி, இங்கர்சால் பகலவன், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், செயலாளர் தி.செ.கணேசன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், செயலாளர் பாலு, கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் புழல் த.ஆனந்தன், சோழிங்கநல்லூர் மாவட்டச் செயலாளர் பி.சி.ஜெயராமன், கு.சோமசுந்தரம், வே.மணிகண்டன், சைதை மு.ந.மதியழகன், கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், க.திருச்செல்வம், மு.சேகர், ஈ.குமார், மு.சண்முகப்பிரியன், க.வெற்றிவீரன், ச.மகேந்திரன், சைதை எத்திராஜ், வாசுதேவன், புழல் மாறன், ஆவடி கலைமணி, தாம்பரம் சு.மோகன்ராஜ், மா.குணசேகரன், ஊரப்பாக்கம் இராமண்ணா, பி.சீனிவாசன், குன்றத்தூர் திருமலை, அருணாசலம், காரைமாநகர் தே.சுரேஷ், இராமாபுரம் ஜெனார்த்தனன், பெரு.இளங்கோ, இரா.சதீசுகுமார், பொன்மாடசாமி, காரல்மார்க்ஸ், பெரம்பூர் கோபாலகிருஷ்ணன், கே.செல்லப்பன், புரசை சு.அன்புச்செல்வன், ம.டில்லிபாபு, ஆத்தூர் சேகர், பா.முத்தழகு, பெரியார் நூலக வாசகர் வட்டம் க.சேரன், க.செல்லப்பன், ஆ.சீ.அருணகிரி, து.முத்துகிருட்டினன், தீனன், அப்துல் காதர், தொழிலாளர் கழகப் பொறுப்பாளர்கள் நாகரத்தினம், கூடுவாஞ்சேரி மா.இராசு, பெரியார்மாணாக்கன், க.தமிழினியன் மற்றும் சென்னை மண்டலத்தின் பொறுப்பாளர்கள், தோழர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
- விடுதலை நாளேடு, 10.3.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக