புதன், 11 மார்ச், 2020

இந்தூரில் என்ன நடந்தது?டாக்டர் கிருபாநிதி பதில்:

தமிழா தமிழா (ஏப்ரல் 2003) ஏட்டுக்கு டாக்டர் கிருபாநிதி அளித்த பேட்டி.
கேள்வி: இந்தூரில் என்ன நடந்தது?
டாக்டர் கிருபாநிதி பதில்: தேசிய கவுன்சில் கூட்டம் இந்தூரில் நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காகச் சென்றேன். இல. கணேசனும் வந்திருந்தார். கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு நான் தங்கியிருந்த தாஜ் ரெசிடென்சியல் ஹோட்டலுக்குக் கிளம்ப வேண்டும். காருக்காக போர்டிகோ அருகில் காத்திருந்தேன். அப்போது அங்கு இல. கணேசன் அவசரமாக வந்தார். நீ என்ன பெரிய ஆளா? உன்னை ஒழித்திடுவேன் என்று பேசியவர் ஜாதி ரீதியாகவும் என்னை இழிவாகப் பேசினார்.
நான் அவர்கிட்ட பொறுமையா பேசுங்கன்னு சொன்னேன். ஆனா, அவர் எதையும் கேட்கிற நிலையில இல்லை. நிதானம் இழந்து காணப்பட்டார். யார் கிட்டப் பேசுறோம், என்ன பேசுறோம்னு உணருகிற நிலையில் - நிலைமையில இல்லை. ஒரு கட்டத்தில் என் கையைப் பிடிச்சி முறுக்கி அடிச்சிட்டார்.
கேள்வி: இல கணேசன் உங்கள்மீது அவ்வளவுக் கோபமாவதற்கு என்ன காரணம்?
டாக்டர் கிருபாநிதி: என் பதவிக் காலம் முடியப் போகிறது அதற்கு முன் கட்சி கணக்கு வழக்குகளை சரி பார்த்து ஒப்படைக்கணும். அதனால் கணக்கு வழக்குகளை ஆராய்ந்தபோது பல குளறு படிகள் நடந்திருப்பது புரிந்தது. மாநிலச் செயலாளராக இருந்த இல. கணேசன் தேசியச் செயலாளராக ஆன பிறகும் மாநில கட்சி நிதியை கையாண்டு கொண்டி ருந்தார். இதை நான் தடுத்ததால் ஆத்திரப் பட்டு என்னை அடிக்கும் அளவுக்குப் போய் விட்டார்.
கேள்வி: நீங்கள் தமிழக தலைவராக பதவியேற்றதிலிருந்தே பலவித அவமானங் களை சந்தித்து வந்தீர்கள் அல்லவா?
டாக்டர் கிருபாநிதி: ஆமாம், தலைவர் என்கிற முறையில் கட்சிப் பணிகளைக் கவனிக்க எனக்கு அடிப் படை வசதிகள்கூட செஞ்சு தரலை ஃபேக்ஸ் மிஷன் நானே சொந்தமாக வாங்கினேன். டைப் அடிக்கணும் என்றால் வெளியில் கொடுத்து அடிச்சிக்கிட்டேன். இப்படி கட்சிப் பணிகளுக்குச் சொந்த பணத்தை செலவழித்தேன். கட்சியின் மாநிலத் தலைமையகத்திலேயே (கமலாலயம்) ரங்கநாதன் மற்றும் ராஜசிம்மன் ஆகிய இருவரும்தான் ஆட்டிப் படைக்கிறார்கள். இவர்களை இயக்கும் சூத்ரதாரி இல. கணேசன்தான். கமலாலயத்துக்கு வரும் கட்சிக்காரர்கள் தலைவர் இருக்கிறாரா என்று கேட்டால் சரியான பதில்கூட சொல்ல மாட்டார்கள். எவ்வளவோ அவமானங்கள்.
கேள்வி: உங்கள் கட்சியில் சாதீய உணர்வு தலைவிரித்து ஆடுகிறது என்று பலமாக செய்திகள் வருகின்றன. நீங்கள் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர் என்ப தால்தான் அவமானப்படுத்துகிறார்களா?
(சற்று மவுனத்திற்குப்பிறகு) நடக்கிறதை எல்லாம் பார்க்கும் போது அப்படித்தான் நினைக்க வேண்டியிருக்கு. தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவன் தலைமைப் பதவியில் இருக்கிறதை அவங்களால ஜீரணிக்க முடியல என்று கூறினார்.
- நாச்சியாள் சுகந்தி முகநூல் கருத்து , 11.3.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக