வருமான வரித்துறை தொடர்பான புதிய மசோதாவுக்கு இந்தியில் பெயர் சூட்டுவதா?
வருமான வரித்துறை தொடர்பான புதிய மசோதாவுக்கு இந்தியில் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மாநில மொழிகளிலும் பெயர் சூட்டப்படவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பா.ஜ.க. உறுப்பினர்கள்
புதுக்கரடியை விட்டுள்ளனர்!
நாடாளுமன்றத்தின் மாநிலங்கள வைக் கூட்டத்தில் நேற்று (13.3.2020) உ.பி.யைச் சேர்ந்த இரண்டு பா.ஜ.க. உறுப்பினர்கள் பேசுகையில்,
‘‘இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 8 ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்தி- தேவநகரி எழுத்தில் எழுதினால், பலராலும் புரிந்து கொள்ளப்படும்'' என்ற ஒரு விநோதமான - அதேநேரத்தில் மிகவும் ஆபத்தான மற்ற அத்தனை மொழிகளையும் இந்தி மயமாக்கி, அவற்றை மெல்லச் சாகடிக் கவும், இந்தி மொழி ஏகாதிபத்தியம் தழைத்தோங்கவும் இப்படி ஒரு புதுக்கரடியை விட்டுள்ளனர்!
யாரோ ஒரு உறுப்பினர் கருத்துதான் இது என்று எளிதாக இதை அலட் சியப்படுத்திவிட முடியாது; கூடாது. மத்திய ஆர்.எஸ்.எஸ். அரசின் திட்டத் திற்கு இது ஆழம் பார்க்கும் முன் னோட்டமாகவும்கூட இருக்கக் கூடும்!
எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர் நமது தோழர்கள்
அந்த உறுப்பினர்கள் பேசும்போதே மறுமலர்ச்சி தி.மு.க.வின் பொதுச்செய லாளர் மானமிகு வைகோ அவர்கள் இதற்குக் கடுமையான மறுப்பையும், எதிர்ப்பையும் ஓங்கிய குரலில் ஒலிப்பதிவு செய்துள்ளார்!
அதுமட்டுமா?
நிதிநிலை அறிக்கைபற்றிய விவா தத்தில் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் பேசும்போது, ஒரு மசோதா வைப் புதிதாகக் கொண்டு வந்து நிறை வேற்றும் நிலையில், அதன் பெயர் இந்தியில்தான் - ‘‘விவாத் சீவிஸ்வாஸ்'' (Vivad se vishwas) என இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார். ‘‘பெயர் ஏன் வெறும் இந்தியில் மட்டும் இருக்கவேண்டும்? இது யாருக்குப் புரியும்? ஏன் அந்தந்த மாநிலங்களுக்குரிய மொழிகளில் இருக்கக் கூடாது? அப்போதுதானே இச்சட்டத்தின் நோக்கம் நிறைவேற முடியும்'' என்று திருச்சி சிவா, வைகோ, தி.மு.க.வின் வில்சன் ஆகியோரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள்!
2020 மார்ச் 31 ஆம் தேதிக்குள் வருமான வரி பாக்கிகளை - ஏற்கெனவே நிலுவையில் உள்ள தொகைகளையும் சேர்த்துக் கட்டிவிட்டால், அதற்கான வட்டித் தொகையையும், அபராதத் தொகையினையும் தள்ளுபடி செய் வதற்கு வழிவகுக்கும் மசோதா இம்மசோதா!
இது அந்தந்த வட்டார, மாநில மொழிகளில் இருந்தால்தானே, அதைப் புரிந்து அவரவர்கள் செயல்படும் வாய்ப்பு ஏற்பட முடியும் என்னும் அவர்களது கேள்வியின் நியாயத்தை உணர்ந்து, மற்ற மொழிகளிலும் இச் சட்டம் மொழியாக்கம் செய்து பரப் பப்படும் என்ற உறுதியை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி, நிலவிய சூட்டைத் தணித்துள்ளார்!
நாம் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம்!
கரோனா வைரஸ் (Covid 19) பற்றி கைத்தொலைப்பேசிகளில் வரும் அறிவுரை இந்தியிலும், ஆங்கிலத்திலும் இருப்பதைக் கூட அந்தந்த மாநில மொழிகளில் ஒலிபரப்பினால்தான் அது செய்யப்படும் நோக்கம் நிறைவேறக் கூடும் என்பதைப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர் தமிழ்நாட்டில்.
சற்று அசந்தால், நம் மொழி - மற்ற மாநில மொழிகள் காணாமற்போகும் அபாயம் எப்போதும் தயார் நிலையில் உள்ளதால், என்றும் நம் விழிப்புணர்வு தேவை! தேவை!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
14.3.2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக