பெண்களைப் பற்றி 'தினமலர்', 'துக்ளக்', கும்பலுக்கு என்ன கருத்து என்பது ஊரறிந்த ஒன்று.
பெண்களின் மக்கள் தொகை வீழ்ச்சி, பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து திராவிடர் கழகத் தலைவர் கூறியதற்குப் பதில் அளிக்க முடியாமல் மூச்சுத் திணறும் தினமலர் - பந்தை அடிக்க முடியாத நிலையில் காலை அடிக்கிறது.
இராணுவத்தில் பெண் அதிகாரிகள் குறித்து 'துக்ளக்' ஆத்திரப்படுகிறதே - அது குறித்து குருமூர்த்தி அய்யர்வாளைச் சீண்ட வேண்டியதுதானே!
பெண்கள் அதிகம் படித்தால், கை நிறைய சம்பளம் வாங்கினால் - ஆணுக்கு அடங்கமாட்டார்கள். குடும்பம் சீரழிகிறது என்று கூறும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தைச் சீண்ட வேண்டியது தானே!
வேலைக்குச் செல்லும் பெண்கள் ஒழுக்கக் குறைவானவர்கள் என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கூறியபோது, தினமலரின் பேனாவுக்கு முடக்கு வாதம் ஏற்பட்டதா?
நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களி லும் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது 1996 முதல் நாடாளுமன் றத்தில் நிலுவையில் இருக்கிறதே - அது குறித்து என்றைக்காவது திரிநூல் தினமலர் கண்டித்ததுண்டா?
பெரியார் கல்வி நிறுவனங்கள் பெண்களுக்குத் தொழிற்கல்வி அளிப்பது - ஆத்திகக்காரர்களுக்கு எப்படி தெரியும்?
"மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50 விழுக்காடு எண்ணிக்கையில் உள்ள பெண்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப் புகளிலும் அதே விகிதத்தில் அளிக்கப்பட வேண்டும்" என்றால்,
தினமலரின் அஸ்தியில் ஜூரம் கண்டு கொந்தளிப்பது - அதன் மனுதர்மப்புத்தி யைத் தானே புலப்படுத்தும். என்ன சூடு கொடுத்தாலும் தடித்துப்போன தோலுக்குச் சொரணை மட்டும் வராது - வரவே வராது.
- விடுதலை நாளேடு,11.3.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக