வியாழன், 19 மார்ச், 2020

பாலபிரஜாபதி அடிகளார் பார்வையில் பெரியார்

கேள்வி: ‘அய்யாவழி என்பது இந்து மதம்தான்' என்றும், ‘அது தனி மதம் இல்லை' என்றும் உங்கள் எதிர்ப்பாளர்கள் சொல்கிறார்கள். அதை ஏற்கிறீர்களா?

பதில்: ‘‘ராமன் குகனைக் கட்டியணைத்து சகோதரனாக ஏற்றுக் கொண்டார். அப்படிப்பட்ட ராமருக்குக் கோயில் கட்டிவைத்துவிட்டு அவரை நான் தொடக்கூடாது என்று சொல்கிறார்கள். வேடனான கண்ணப்ப நாயனார் சிவபெருமானுக்குக் கண்ணைக் கொடுத்தார். தான் உண்ட உணவை சிவனுக்குக் கொடுத்தார். இன்று நீங்கள் கஞ்சியைக் கொண்டு வைத்துவிட்டு வடமொழியில் சொன்னால்தான் கடவுள் ஏற்றுக்கொள்வார் என்றால் நான் எப்படி அதை ஏற்றுக்கொள்ள முடியும்? யார் இந்து என்று ஒரு வரையறை சொல்லுங்கள். இந்து என்ற வார்த்தையே ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. வேறு வழி இல்லாமல் அந்த வார்த்தையை வைத்திருக்கிறோம்.''

கேள்வி: ‘‘ஒரு சமயத் தலைவரான நீங்கள் ‘இனிமேல்தான் பெரியாருக்கு வேலை' என்று பேசுகிறீர்களே?''

பதில்: ‘‘வைக்கம் போராட்டத்தைப் பெரியார் நடத்தாமல் இருந்திருந்தால் சுசீந்திரம் கோயில் இருக்கும் தெருவுக்கு சில ஜாதியினரால் போக முடியுமா? பெரியார் இன்று இருந்திருந்தால் கருவறை நுழைவுக்காகப் போராடியிருப்பார். எங்கள் தலைமைப் பதியை அரசு எடுக்கக் கூடாது என்று போராடியிருப்பார். என் கொள்கை தடைப்படுகிறபோது, பெரியார் இருந்தால் வெற்றிபெற்றிருப்போம் என்று சொல்கிற உரிமை எனக்கு இருக்கிறது.''

- ‘ஆனந்த விகடன்', 18.3.2020, பக்கம், 101

- விடுதலை நாளேடு 14.3.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக