யார் காட்டுமிராண்டிகள் என்பதை குருமூர்த்திகள் சொல்லு வதுதான் கடைந்தெடுத்த நகைச்சுவை.
எண்ணாயிரம் சமணர்களைக் கழுவேற்றிக் கொன்ற கூட்டத்தை எந்த இடத்தில் நிறுத்தலாம்?
450 ஆண்டு கால வரலாறு படைத்த பாபர் மசூதியை ஒரு பட்டப் பகலில் பெரிய மனுஷர்கள் என்று பீற்றிக் கொள்ளும் அத்வானி போன்றவர்கள் தலைமை தாங்கி இடித்துத் தரை மட்டமாக்கினார்களே இந்தக் காவிக் கும்பலை எந்த இடத்தில் நிறுத்துவது?
குஜராத்தில் முஸ்லிம் பெண் என்பதால், கர்ப்பிணி என்றும் பாராமல் அந்தப் பெண்ணின் வயிற்றைக் குத்திக் கிழித்து, அந்தச் சிசுவை தீயில் தூக்கிப் போட்டு குதியாட்டம் போட்ட கூட்டத்தையும் அந்த நேரத்தில் அதிகாரப் பீடத்தில் அமர்ந்திருந்தவரையும் எந்த இடத்தில் நிறுத்துவது?
கண்ணியவான்கள் பட்டியலிலா - காட்டு விலங்காண்டிகள் பட்டியலிலா?
தனது பயணத்தின்போது பிரசவ வலியால் துடித்த பார்ப்பனப் பெண்ணின் அழு குரல் கேட்டு, தன் வாகனத்தை நிறுத்தி, அந்த வாகனத்துக்குள்ளேயே பிரசவம் நடக்க வசதி செய்து கொடுத்தவர் தந்தை பெரியார் -ஆம் அவர் நாத்திகர்தான்!
நாத்திகனுக்கு வைத்தியம் பார்க்காதே என்று சொன்ன மகா பெரியவாள்(?) சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஆத்திகர்தான் -குருமூர்த்தி கும்பல் தூக்கிவைத்துக் கொண்டாடும் ஆசாமிதான் இந்த சங்கராச்சாரியார்.
தீண்டாமை க்ஷேமகரமானது என்று சொன்னவரும் அவரே!
இதில் யார் காட்டுமிராண்டி? குருமூர்த்தி கூட்டமே பதில் சொல் பார்க்கலாம்!
- கருஞ்சட்டை
- விடுதலை நாளேடு 13 3 20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக