சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உல கையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை ஆயிரக்கணக்கில் உயிரிழந்துள் ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரசால் 1.8 லட்சம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தற் போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 276 பேரைப் பாதித்துள்ளது.
கரோனாவால் சீனா வுக்கு அடுத்து கிழக்கு ஆசி யாவில் அதிகம் பாதிக்கப் பட்டுள்ள நாடு தென் கொரியா ஆகும். தென் கொரியாவில் 8000-க்கும் மேற்பட்டோர் கரோனா வால் பாதிக்கப்பட்டு சிகிச் சையளிக்கப்பட்டு வருகின் றனர். இந்தச் சூழலில் தென் கொரியாவின் சியோங்னம் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் சிறப்புப் பிரார்த் தனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட 46 பேருக்கு கரோனா இருப்பதை அதி காரிகள் தற்போது உறுதி செய்துள்ளனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுப்ப தற்காகத் தேவாலயத்தில் நடத்தப்பட்ட பிரார்த்தனை ஒன்றில் மக்கள் கலந்து கொண்டுள்ளனர். அப் போது அங்கு வந்திருந்த வர்களுக்கு ‘புனித நீர்' வழங்கப்பட்டுள்ளது. ஒரே பாட்டில் மூலம் அனை வருக்கும் இந்தப் புனித நீர் வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் அந்த ‘புனிதநீரைக்' குடித்தவர் களில் 46 பேருக்கும் கரோனா இருப்பது தற் போது கண்டறியப்பட்டுள் ளது. இந்த தேவாலயத்தின் போதகர் மற்றும் அவரது மனைவியும் இதன்மூலம் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 90 பேர் வரை கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் மேலும் பல ருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் அதிகாரிகள் அப்பகுதியில் சோதனைகளைத் தீவிரப் படுத்தியுள்ளனர். இந்த விவகாரத்தில் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ள அந்த தேவாலய போதகர் கிம், "இங்கு நடந்தது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். அனைத்து குற்றச்சாட்டு களுக்கும் நான்தான் பொறுப்பு" எனத் தெரிவித் துள்ளார்
இந்தோனேசிய அதிபர் - "பக்கத்து நாடுகளில் எல் லாம் 'கரோனா' பரவிய நிலையில் நம் நாட்டில் மட்டும் பரவாமைக்குக் கார ணம் கடவுளின் கருணையே கருணை" என்று பிரார்த்த னைக் கூட்டத்தில் கூறிய மறுநாளே, மூவர் கரோ னாவால் பாதிக்கப்பட்டனர் என்று இந்தோனேசிய சுகாதாரத்துறை அறிவித்தது தெரிந்ததே!
மதமும் கட வுளும் மக்களுக்கு கேடு என்பதற்கு இன்னும் ஆதார மும் தேவையோ!
- மயிலாடன்
- விடுதலை நாளேடு, 21.3.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக