புதன், 1 செப்டம்பர், 2021

கழகக் குடும்பத்தவர்களுக்கும் - திராவிடப் பெருங்குடி மக்களுக்கும் மிக்க மகிழ்ச்சியை அளிக்கும் தித்திக்கும் செய்தி!


கழகக் குடும்பத்தவர்களுக்கும், திராவிடப் பெருங்குடி மக்களுக்கும் மிக்க மகிழ்ச்சியை அளிக்கும் தித்திக்கும் செய்தி என்று  தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள நன்றி  அறிக்கை வருமாறு:

திருச்சி சிறுகனூர் ‘‘பெரியார் உலகம்'' என்ற தந்தை பெரியாரின் 95 அடி உயரச் சிலை, 40 அடி பீடம், அந்த வளாகத்தில் குழந்தைகள் பூங்கா, நூலகம் முதலியனவும் அமைக்கப்படுவதற்குரிய தமிழ்நாடு அரசின் ஆணை (நிலை எண்) 524, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார  நிறுவனத்தின் விண்ணப்பத்தை ஆழ்ந்து பரிசீலித்து உரிய ஆணையாக வழங்கப்பட்டுள்ளது என்பதை எல்லையற்ற மகிழ்ச்சியுடன், கழகத் தோழர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பல்வேறு துறைகளின் தடையில்லா சான்றிதழ் பெற்று (2008 இல் தொடங்கிய பணி) கடந்த ஆட்சியின் இறுதியில் பிறப்பிக்கப்பட வேண்டிய, சென்ற அ.தி.மு.க. ஆட்சியில், 2017 முதல் 2021 வரை 4 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டிருந்த அரசு அனுமதி ஆணை - இன்றைய முதலமைச்சர் செயல்மிகு மு.க.ஸ்டாலின் அவர்களது ஆட்சியில் விடியலைத் தந்தது!

‘‘ஸ்டாலின்தான் வந்தாரு

விடியலைத் தந்தாரு!''

என்பதை மிகுந்த நன்றிப் பெருக்குடன் தமிழ்கூறும் நல்லுலகம் கொண்டாடி மகிழ்ச்சியடைவது உறுதி.

முதலமைச்சருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நமது நன்றி! நன்றி!! நன்றி!!!.


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

30.8.2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக