• Viduthalai
தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா, மேற்கு வங்க மாநிலம் அட்ரா என்ற ஊரில் சேவா அமைப்பினரால் கொண்டாடப்பட்டது. தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா முதன் முறையாக மும்பையில் யூனியன் வங்கியின் தலைமையகத்தில் அகில இந்திய யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் அமைப்பினரால் கொண்டாடப்பட்டது. சங்கத்தின் தலைவர் கோ.கருணா நிதி தலைமையில் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டு, சமூக நீதி நாள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். பீகார் மாநிலம் - சாப்ரா நகரத்தில் சேவா அமைப்பினரால் கொண்டாடப்பட்டது. பீகார் மாநிலம் - பாட்னா மற்றும் சிர்பி நகரங்களில், தோழர் ரவீந்திர ராம் மற்றும் சேவா அமைப்பினரால் கொண்டாடப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக