வெள்ளி, 10 செப்டம்பர், 2021

பிற இதழிலிருந்து - ஒற்றைச் சிலை சொல்லுமே!

 

பாராட்டத்தக்க தலையங்கம்

சென்னை அண்ணா சாலையில் முத்தமிழறிஞர் கலைஞரின் உருவச் சிலை வைக்கப்படும்‘ என்ற முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பு அனைவரது உள்ளத்திலும் ஆயிரம் இன்ப அலைகளை உருவாக்கி உள்ளதுஎழப்போகும் சிலை என்பதுஆயிரம் சிலைகளுக்கு சமமானது!

அண்ணா சாலையில் கலைஞருக்குச் சிலை வைக்க வேண்டும் என்பது தந்தை பெரியாரின் கனவு. 1968 ஆம் ஆண்டு கலைஞருக்குச் சிலை வைக்க வேண்டும் என்று முதலில் சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள் தான்அப்போது அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருக்கிறார்கள்அவர் தலைமையின் கீழ் அமைச்சராக இருக்கிறார் கலைஞர் அவர்கள்.

சிலையைத் திறந்து வைக்க அன்றைய முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களும் ஒப்புக் கொண்டார்ஆனால் தனக்குச் சிலை அமைக்க வேண்டாம் என்று தலைவர் கலைஞர் அவர்கள் திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

அதற்குப்பிறகு கலைஞருக்குச் சிலை வைத்தே ஆகவேண்டும் என்று ‘விடுதலை’ நாளிதழில் 1968-ஆம் ஆண்டு பெரியார் அவர்களே தலையங்கம் எழுதினார். "சிலை அமைக்கும் பொறுப்பை நானே ஏற்கிறேன்என்றும் பெரியார் அவர்கள் சொன்னார்கள். “கலைஞர் அறிவில் சிறந்தவர்நிர்வாகத்தில் சிறந்தவர்பொதுத் தொண்டுக்காக தியாகம் செய்வதில் சிறந்தவர்அவரது சிலையை ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் அமைத்தே தீர வேண்டும்இதில் அபிப்பிராயம் வெளியிட கலைஞருக்கே உரிமை இல்லையாருக்காவது சங்கடம் இருக்குமானால் சிலை அமைக்கும் பொறுப்பை நானே ஏற்றுக் கொண்டு எப்படியும் நிறைவேற்றியே தீருவேன்’’ என்று பெரியார் அவர்கள் அறி வித்தார்கள்முதலமைச்சர் அண்ணா அவர்களின் உடல்நலக்குறைவு ஆகியவற்றால் அந்தப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

1971ஆம் ஆண்டு பெரியார் அவர்கள் முதலமைச்சர் கலைஞருக்கான சிலை அமைக்கும் பணியை மீண்டும் தொடங்கினார்சிலை அமைக்கும் குழுவின் புரவலராக பெரியார் இருந்தார்தலைவராக தவத்திரு குன்றக்குடி அடிகளார் இருந்தார்துணைத் தலைவராக இன்றைய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் இருந்தார்கள்.

பெரியாரின் மறைவுக்குப் பிறகுஅன்னை மணியம்மையார் முயற்சியால் கலைஞருக்கு 21.9.1975 அன்று எல்.அய்.சிஅருகில் சிலை திறந்து வைக்கப்பட்டதுமற்ற சிலைகளை விட இந்த சிலைக்கு ஒரு சிறப்பு உண்டு. "நெஞ்சில் சால்வை புரளஅதன் ஒரு முனையைக் கை மேல் போட்டுக் கொண்டு - கை உயர்த்தி கலைஞர் கர்ஜிக்கும் கோலம் கொண்டது இந்தச் சிலைஎன்றும் மேடையில் அவர் குரல் ஒலித்துக் கொண்டு இருப்பது போலவே அது இருக்கும்.

24.12.1987 அன்று எம்.ஜி.ஆர்மரணத்தின் போது நடந்த வன்முறையில் இந்த சிலை தாக்கப்பட்டதுஈட்டியால் குத்தி உடைக்கப்பட்டதுஅப்போதும் கலைஞரிடம் கோபம் பிறக்கவில்லைகவிதை தான் பிறந்தது.

உடன் பிறப்பே!

செயல்பட விட்டோர்

சிரித்து மகிழ்ந்து நின்றாலும்

அந்தச் சின்னத்தம்பி

என் முதுகிலே குத்தவில்லை

நெஞ்சில் தானே குத்துகிறான்.

அதனால் நிம்மதி எனக்கு !”  - என்று எழுதினார் கலைஞர்அவர் நிம்மதி அடைந்திருந்தாலும் தமிழர் தம் நெஞ்சில் அந்த ஈட்டி பாய்ச்சல் வலி இருந்து கொண்டே இருந்ததுஇந்த நிலையில் தான் தி.மு.சட்டமன்ற உறுப்பினர் .கே.ஜி.நீலமேகம் அவர்கள் சட்டமன்றத்தில் தனது கோரிக்கையை வைத்தார்சென்னை அண்ணாசாலையில் கலைஞருக்கு சிலை வைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.

அதற்கு பதில் அளித்த முதலமைச்சர்கலைஞர் சிலை அமைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

முதன்முதலாக சிலை அமைக்க தந்தை பெரியார் எத்தகைய முயற்சியை எடுத்தார்களோ அதே போன்ற முயற்சியை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் எடுத்ததையும் முதலமைச்சர் தனது உரையில் குறிப் பிட்டுள்ளார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் என்னைச் சந்தித்து அவரும் என்னிடம் இந்தக் கோரிக்கையை எடுத்து வைத்திருக்கிறார்இது பெரியார் நினைத்ததுபெரியார் எங்களுக்குக் கட்டளையிட்டுநாங்கள் அதை வைத்ததுஎனவே மீண்டும் அந்த இடத்திலே அதை வைக்க வேண்டும் என்று அவரும் என்னிடத்திலே வற்புறுத்தியிருக்கிறார்அதில் உள்ள சட்டச் சிக்கல்களை நான் சொன்னேன். ‘நாங்கள் ஏற்கெனவே அனுமதி வாங்கியதுதான்எனவே புதிதாக அனுமதி வாங்கத் தேவையில்லை’ என்று அவர் சொன்னார்அண்ணா சாலையில் பெரியார் சிலையும்அண்ணா சிலையும்எம்.ஜி.ஆர்சிலையும் இருக்கிறதுகலைஞர் சிலையும் ஏற்கெனவே இருந்ததுஅதைத் தான் வலியுறுத்தி இருக்கிறார்இது குறித்து சட்டவல்லுநர்களிடம் ஆலோசனை செய்வேன்நிச்சயமாக அண்ணா சாலையில் கலைஞர் சிலை அமைக்கப்படும்“ என்று முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

அப்படி அமைக்கப்படும் சிலை எத்தனையோ கருத்துக்களைச் சொல்வதாக அமையும்இது தந்தை பெரியாரின் கனவுகலைஞரின் திறமையைப் போற்றும் அடையாளமாக அமைக்க நினைத்த சிலைஅண்ணா அவர்கள் இருந்து திறந்து வைத்திருக்க வேண்டிய சிலை இதுஅந்த சிலை அமைக்க சிலர் எதிர்ப்பு தெரிவித்தபோது, ‘கலைஞர் சிலையை யார் கை வைக்கிறார் என்று பார்க்கிறேன்’ என்றார் பெரியார்பாவேந்தரால் ‘அன்னை’ என்று போற்றப்பட்ட மணியம்மையாரால் திறந்து வைக்கப்பட்ட சிலைவன்முறையாளர்களால் அந்த சிலை சேதம் செய்யப்பட்டதுசிலையை வீழ்த்தினாலும் தலைவர் கலைஞர் மூன்று முறை ஆட்சியில் அமர்ந்தார்ஆட்சி நடத்தினார்எத்தனையோ பேருக்கு சிலை வைத்தார்மணிமண்டபம் எழுப்பினார்ஆனால் அவர் சிலைஅவரது கண்ணுக்கு முன்னால் சிதைக்கப்பட்டதுஅவரது உடலை அடக்கம் செய்ய ஆறடி இடம் கேட்டு நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டதுஇந்த அய்ம்பதாண்டு வரலாற்றை இந்த ஒற்றைச் சிலை சொல்லுமே!

நன்றி: 'முரசொலி', 3.9.2021, தலையங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக