வெள்ளி, 27 டிசம்பர், 2019

மாதவிடாய் நாளில் கூலி இழப்பை தவிர்ப்பதற்காக கரும்பு பெண் தொழிலாளர்கள் கருப்பையை அகற்றும் கொடுமை

மகாராஷ்டிரா முதல்வர் தலையிட காங்கிரஸ் அமைச்சர் கோரிக்கை

மும்பை , டிச . 26 : கூலி இழப்பை தவிர்ப்ப தற்காக பெண் கரும்பு கூலித் தொழிலா ளிகள் தங்கள் கருப்பையை அகற்றும் கொடுமை மகாராஷ்டிராவில் நடந்து வருகிறது . இந்த பிரச்னையில் உடனே தலையிடக்கோரி மாநில அமைச்சர் நிதின் ராவுத் முதல்வர் உத்தவ் தாக்க ரேக்கு கடிதம் எழுதி இருக்கிறார் . மத்திய மகாராஷ்டிராவில் உள்ள மராத்வாடா பிராந்தியத்தில் கரும்புத் தொழிலாளிகள் பெருமளவில் உள்ள னர் . அவர்களில் கணிசமான எண் ணிக்கையில் பெண்கள் இருக்கின்ற னர் . மாதவிடாய் காலங்களில் இந்த பெண்கள் வேலைக்கு செல்வதில்லை . எனவே அவர்களுக்கு கூலி இழப்பு ஏற்படுகிறது . இதை தவிர்ப்பதற்காக அவர்கள் தங்கள் கருப்பையை அகற்றி விடுவதாகவும் இதுபோன்று சுமார் 30 , 000 பெண்கள் தங்கள் கருப்பையை அகற்றி இருப்பதாகவும் நிதின் ராவுத் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் . மேலும் , இந்த பெண்களுக்கு மாத விடாய் காலமான நான்கு நாட்களுக் கும் கூலி வழங்க சர்க்கரை ஆலைகள் முன்வந்தால் அவர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார் . மகாராஷ்டிரா அரசு மனிதாபிமான அடிப்படையில் இதற்கான உத்தரவை சம்பந்தப்பட்ட இலாகாவுக்கு பிறப் பிக்க வேண்டும் என்று நிதின் ராவுத் தமது கடிதத்தில் கோரியுள்ளார் . காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச் சர் நிதின் ராவுத் , பொதுப்பணித்துறை , பழங்குடியினர் நலத்துறை , பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை , ஜவு ளித்துறை உள்ளிட்ட இலாகாக்களை தன் வசம் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .
- தினகரன் நாளேடு 26 12 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக