வியாழன், 12 டிசம்பர், 2019

அய்.நா. சட்ட விதிப்படி தேசிய குடியுரிமைச் சட்டமும் ஒரு இனப்படுகொலைதான்!


வாஷிங்டன், டிச.11 தேசிய குடியுரிமைச் சட்டமும் ஒரு இனப்படுகொலைதான் என்று அய்.நா. சட்ட விதி கூறுகிறது.

இனப்படுகொலை என் பது  ஒரு இனத்தை பகுதி யாகவோ அல்லது முழுமை யாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் கொல்ல நினைப்பது அல்லது அழிப் பதாகும்.

அய்.நா. சட்ட விதி 2 இன்படி

இது குறித்து 1948 இல் அய்க்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சபை இதை தடை செய்யப்பட்ட, தண்டனைக் குரிய மற்றும் குற்றமுறை செயலாக அய்.நா. சட்ட விதி 2 இன்படி அறிவித்துள்ளது.

இதன்படி ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழு மையாகவோ,

மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற் றுமை போன்ற காரணங் களால்,

உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது,

கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது,

இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தைப் பிறப்பைத் தடுப்பது,

குழந்தைகளை இடம் பெயரச் செய்வது,

அதிகாரத்தின் மூலம் மக் களைப் பிரித்து உரிமைகள் கிடைக்காமல் செய்வது,

வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட் டுவது போன்றவை குற்ற முறை செயல்களாக, இனப் படுகொலைக் குற்றங்களாக  பன்னாட்டு தடைச்சட்டத் தின்படிக் குற்றச்செயலாகும்.

இக்கொடுஞ்செயல் புரி வோரைத் தண்டிக்க பன் னாட்டுக் குற்றவியல் நீதிமன் றம் 2002 இல் கொண்டு வரப்பட்டது. இந்நீதிமன்றம் விசாரணை செய்து தண் டனை அளிக்க உடன்படிக் கையின் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வு டன்படிக்கையில் கையொப் பமிட நீதிமன்ற ஆணையத் தால் பன்னாட்டு உறுப்பினர் களை அழைத்தும் இன்னும் ஒருவரும் கையொப்பமிட வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

- விடுதலை நாளேடு 11 12 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக