திங்கள், 16 டிசம்பர், 2019

மே 17 இயக்கத்தின் நிறுவனர் திருமுருகன் காந்திமீது புனையப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுக! : அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவு

சென்னை, டிச.16 மே 17 இயக்கத்தின் நிறுவனர் திருமுருகன்காந்தி மீது பொய்யாக புனையப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று அனைத் துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் (கிப்டு) இன்று காலை 10.30 மணிக்கு மூத்த பொதுவுடைமை இயக்கத் தலைவர் தோழர் ஆர். நல்லகண்ணு அவர்கள் தலைமையில் நடைபெற்ற  கூட்டத்தில் எடுக்கப்பட்ட  முடிவுகள்.

1) மே 17 இயக்கத்தின் நிறுவனர்  திருமுருகன்காந்தி மீது பொய்யாகப் புனையப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுமாறு தமிழ்நாடு அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

(2) இது தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர் களும் முதல் அமைச்சர், உள்துறை செயலாளர், காவல் துறைத் தலைமை இயக்குநர்  ஆகியோரை சந்தித்து முறை யிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கக் கூடிய  ஆளுநர் அவர் களையும் சந்தித்து முறையிடுவது என்றும் தீர்மானித் துள்ளது.

3) வலுவான வகையில் சட்ட ரீதியாக போராட வழக்குரைஞர்களை ஒருங்கிணைப்பது என்றும் தீர் மானிக்கிறது.

கூட்டத்தில் சி.பி.அய். மாநில செயலாளர் இரா. முத்தரசன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.  ஜவாஹிருல்லா, வேல்முருகன், கொளத்தூர் மணி, கோவை கு. இராமகிருஷ்ணன், தெகலான் பாகவி (தேசிய துணைத் தலைவர், SDPI கட்சி),  மல்லை சத்யா (துணைப் பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்), குடந்தை அரசன் (தலைவர், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி), மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துக்களைத் தெரிவித்தனர்.

 - விடுதலை நாளேடு 16 12 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக