வெள்ளி, 13 டிசம்பர், 2019

அமித் ஷாவின் பொய்கள்

FROM FACE BOOK

Vijayasankar Ramachandran (Frontline)

*அமித் ஷாவின் பொய்கள்*

குடியுரிமைச் சட்டத்தை பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்து உரையாற்றிய அமித் ஷா அதற்கான நியாயமாக முன் வைத்த புள்ளி விவரங்கள் இவைதான்:

ஆகஸ்டு 15, 1947இல் பாகிஸ்தானில் முஸ்லிம் அல்லாதவர்களின் மக்கள் தொகை 23%. 2011இல் அது 3.7% ஆகக் குறைந்தது. அதே நேரத்தில் கிழக்கு பாகிஸ்தானில் (1971இல் வங்க தேசமானது) 22% ஆக இருந்த முஸ்லிம் அல்லாதோரின் மக்கள் தொகை, 2011இல் 3.7% ஆகக் குறைந்து விட்டது.

இந்த இரண்டு நாடுகளிலும் முஸ்லிம் அல்லாதோரின் எண்ணிக்கை 20 சதவீதப் புள்ளிகள் குறைந்து விட்டது.

இதையேதான் வலது சாரி ‘சிந்தனையாளர்களும் (?) தொலைக் காட்சி விவாதங்களில் முன் வைக்கின்றனர்.

இது உண்மையா?

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் 1951இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஒன்று பட்ட பாகிஸ்தானில் முஸ்லிம் அல்லாதோரின் மக்கள் தொகை 14.20% தான். மேற்கு பாகிஸ்தானில் அது 3..4% ஆகவும், கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய பங்களாதேஷ்) 23.20% ஆகவும் இருந்தது.

1961இல் நடந்த கணக்கெடுப்பின் படி மேற்கு பாகிஸ்தானில் முஸ்லிம் அல்லாதோரின் எண்ணிக்கை 2.83%.

1971 போருக்குப் பின் கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து வங்க தேசமானது. அந்த நேரத்தில் பாகிஸ்தானில் அவர்களின் எண்ணிக்கை 3.25%.

1991இல் நடந்த கணக்கெடுப்பில் இது 3.70% என்று சிறிது உயர்ந்தது.

இதே காலகட்டத்தில், வங்க தேசத்தில் முஸ்லிம் அல்லாதோரின் மக்கள் தொகை 9.60% ஆகக் குறைந்திருந்தாலும் பிஜேபி கூறும் 3.7% அல்ல.

இதில் பிஜேபி திட்டமிட்டு உருவாக்கும் குழப்பம் என்ன?

ஒன்று பட்ட பாகிஸ்தானில் 1951இல் இருந்த முஸ்லிம் அல்லாதோரின் எண்ணிக்கையான 23%ஐ, பிரிவினைக்குப் பின் இன்று பாகிஸ்தானில் மட்டும் இருக்கும் அவர்களின் எண்ணிக்கையான 3.7% உடன் ஒப்பிட்டுத்தான் அந்தக் குழப்பத்தைச் செய்திருக்கிறது.

பொருளாதாரப் புள்ளி விவரத்தில் செய்யும் பித்தலாட்டத்தைப் போலவே இன்று பிரிவினை அரசியலிலும் செய்கிறது அந்தக் கட்சி.

(ஆதாரம்: இந்தியா டுடே)

G.Karunanidhy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக