சனி, 14 டிசம்பர், 2019

சென்னை பாரிமுனையில் இடிக்கப்பட்டது ஆக்கிரமிப்பு கோயில்

சென்னை பாரிமுனையில் இடிக்கப்பட்டது ஆக்கிரமிப்பு கோயில்
சென்னை, டிச.14 பாரிமுனையில் நடைபாதை ஆக்கிரமிப்பு கோவில்  உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இடித்து அகற்றப்பட்டது.
பாரிமுனை ஆர்மேனியன் சாலையை ஆக்கிர மித்து  சக்தி மாரியம்மன் கோவில் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு கோயில், அப்பகுதியில் போக்கு வரத்துக்கு பெரும் இடையூறாக இருந்தது.
பொதுமக்களுக்கு இடையூறாக, நடை பாதையை ஆக்கிரமித்துள்ள இக்கோவிலை இடிக்க வேண்டும் என, ‘டிராபிக்’ ராமசாமி, 2008இல் வழக்கு தொடர்ந்தார்.கோவிலை இடிப் பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவில் நிர்வா கத்தினர் தடை ஆணை பெற்றனர். 11 ஆண்டுகளாக இவ்வழக்கு நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில், ஆக்கிர மித்து கட்டப்பட்டுள்ள கோயிலை அகற்றுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இராயபுரம் மண்டல அலுவலர் லாரன்ஸ் மற்றும் காவல் துறை உதவி ஆணையாளர் விஜயராமலு, ராயபுரம் உதவி செயற்பொறியாளர் ஜெயராமன், உதவி பொறியாளர் கமலக்கண்ணன் உள்ளிட் டோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட மாநக ராட்சி ஊழியர்கள் 4 ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு ஆக்கிரமிப்புக் கோவிலை இடித்து, லாரிகள் மூலம் கட்டட கழிவுகளை நேற்று அகற்றினர். 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-விடுதலை நாளேடு, 14.12.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக