திங்கள், 16 டிசம்பர், 2019

'தினமலரே' அவதூறு பேசுவோர் யார்?

திராவிடர் கழகத் தலைவர் வைத்த குற்றச்சாட்டு என்ன? அதற்குத் 'தினமலர்' கூறும் பதில் என்ன? அதுவும் ஒரு தகவலைச் செய்தியாக வெளியிடும்போது - இதுதான் அவாளின் பத்திரிகா தர்மம்?

பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் எந்தவித மதத் தொடர்பான வழிபாட்டுச் சின்னங்களும் கூடாது என்பது அரசு ஆணை. அதற்கு எதிராக சில இடங்களில் கோயில்கள் எழுப்புவது சட்டப்படி குற்றம் என்ற குற்றச்சாட்டுக்கு அறிவு நாணயம் இருந்தால் 'தினமலர்' வகையறாக்கள் பதில் சொல்ல  வேண்டும். அதற்கு வக்கு இல்லாமல் சாராயம் குடித்தவன் உளறுவது மாதிரி (இராமன் குடித்த சோம பானமாகக்கூட இருக்கலாம் - என்ன!) உளறலாமா?

சரி... 'தினமலர்' வைத்த குற்றச்சாட்டுக்கே வருவோம்.

பிறரை அவதூறாக பேசக் கூடாது என சட்டம் சொல்கிறது உங்களைப் போன்றோர் (ஆசிரியர் வீரமணி போன்றோர்) 50 ஆண்டுகளுக்கும் மேலாக அதை மதிப்பதில்லையே என்பதுதான் தினமலரின் குற்றச்சாட்டு.

தினமலரைத் திரிநூல் என்று 'விடுதலை' எழுதினால் வருத்தப்படும் சிலர், இப்பொழுதாவது அது நியாயம்தான் என்று உணரக் கூடும்.

50 ஆண்டு காலமாக பிறரை அவதூறாக திராவிடர் கழகத் தலைவர் என்ன பேசினார்? எடுத்துக்காட்ட வேண்டும் அல்லவா?

ஆண்டுக்கு ஒரு முறை ஆவணி அவிட்டம் என்று கூறி பார்ப்பனர்கள் பூணூலைப் புதுப்பிக்கிறார்களே-

இதன் பொருள் என்ன? தங்களைப் பிராமணன்  - பிர்மாவின் நெற்றியிலிருந்து பிறந்தவன் என்று அறிவிப்பது தானே! பெரும்பாலான மக்களை சூத்திரர்கள் என்று (சூத்திரர்களுக்கு சாஸ்திரப்படி பூணூல் தரிக்க உரிமை கிடையாது) மறைமுகமாக இழிவுபடுத்துவதுதானே!

சூத்திரன் என்றால் வேசி மகன் என்று இவர்களின் மனுதர்மம் கூறவில்லையா?

இதுபற்றி திராவிடர் கழகத் தலைவர் கேள்வி எழுப்பினால்  இது பிறரை அவமதிப்பது ஆகுமா!

அவாள், வேசி மகன் என்று பெரும்பாலான மக்களைச் சொல்லலாம் - அது சட்ட விரோதம், நியாய விரோதம், மனித விரோதம் அல்ல - இப்படி சொல்லுகிறாயே என்று சுயமரியாதையுடன் எதிர் கேள்வி வைத்தால் அவதூறாம்.

இதுதான் ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுதர்மம் என்பது

தமிழன் கட்டிய கோயிலில் தமிழன் அர்ச்சகனா னால் கருவறை தீட்டுப்பட்டு விடும், சாமி செத்துப் போய் விடும்; அந்த தோஷத்தைக் கழிக்க புதிய கலசங்கள் செய்து வைக்க வேண்டும். பிராமண போஜனம் செய்ய வேண்டும் என்று வைசனாச ஆகமத்தைத் தூக்கிக் கொண்டு உச்சநீதிமன்றம் வரைசெல்லும் கூட்டத்தினர் யோக்கியர்கள்.

இந்த ஆரிய அகம்பாவத்தை மக்கள் மத்தியில் திராவிடர் கழகத் தலைவர் தோல் உரித்துக் காட்டினால் அவதூறா? சட்ட விரோதப் பேச்சா?

ஆட்சி அதிகாரம் கையிலே கிடைத்திருக்கிறது என்ற திமிரில் திரி நூலே, பூணூலைப் பேனாவாக்கி எழுதலாம் என்று மனப்பால் குடிக்காதே - வட்டியும் முதலுமாகக் கொடுக்கத் தமிழர்கள் தயார்! தயார்!!

-  விடுதலை நாளேடு 15 12 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக