திங்கள், 16 டிசம்பர், 2019

நவமியில் தொடங்கிய நல்ல காரியம்?

பழைய இதழ்களைப் புரட்டிக்கொண்டு இருந்த போது தினமணிக் கதிரில் வெளிவந்த இந்த செய்தி தட்டுப்பட்டது.

‘‘1927 இல் கதர்ப் பணிக் காக காந்திஜி கோவைக்கு வந்தார். கோவை பகுதியில் கதர்ப் பணியைத் தீவிரமாக எடுத்து நடத்தியவர் அய்யா முத்து.

அவர் இராமகிருஷ்ண வித்யாலயம் என்ற பள்ளிக் கட்டிடத்துக்கு காந்திஜியிடம் அடிக்கல் நாட்ட வேண்டினார்.

காந்திஜியும் ஒப்புக் கொண்டு, முதல் நாள் இரவு தங்கிவிட்டு, மறுநாள் காலை அடிக்கல் நாட்டுவதாகச் சொன்னார். ஆனால், உடன் இருந்தவர்களுக்கு அந்த நாள் பிடிக்கவில்லை. கார ணம், முதல் நாள் அஷ்டமி.

மறுநாள் நவமி. நவமியில் நல்ல காரியம் தொடங்குவதை அவ்வளவாக விரும்பமாட் டார்கள். கல்வியாளர் அவி னாசிலிங்கம் கூட அய்யா முத்துவிடம் நவமியில் அடிக்கல் நாட்ட வேண்டாமே என்றார்.

உடனே அய்யாமுத்து, ‘‘காரியம் ரொம்ப நல்ல காரியம். அதைத் தொடங்கி வைப்பவரோ ரொம்ப ரொம்ப நல்லவர். எதுவும் நடந்து விடாது'' என்றாராம்.

ஏற்பாடு செய்தபடியே நவமியில் அடிக்கல் நாட்டி னார் காந்திஜி. இன்று கோவை யில் பிரகாசமாய் விளங்கு கிறது இராமகிருஷ்ண வித் யாலயம்.''

- ஜெ.அன்பு பாலாஜி, திருச்சி

‘தினமணிக்கதிர்', 21.7.2013

மேற்கண்ட நிகழ்வுக்கும், நமது கழகத்துக்கும் என்ன சம்பந்தம்? காந்தியார் சம் பந்தப்பட்டது. இராம கிருஷ்ண வித்யாலய பள்ளி சம்பந்தப்பட்டது.

இவர்கள் எல்லாம் நம் பிக்கையாளர்கள்தான். இந்த நிலையில், இப்பள்ளியின் அடிக்கல் நாட்டு விழா நடை பெற்றது வைதீகர்கள் அஞ்சி நடுநடுங்கும் நவமியிலாகும்.

‘கெட்ட நாளில்' காந்தி யாரால் தொடங்கப்பட்ட பள்ளி நொடிந்துவிட்டதா - துலங்கவில்லையா? நல்ல படியாகத்தானே வளர்ந்தி ருக்கிறது. இதற்குப் பிறகாவது நல்ல நேரம், கெட்ட நேரப் பித்துக்குளித்தனத்தை விட் டுத் தொலைக்கக் கூடாதா?

இதில் இன்னொரு கேள் வியும் இருக்கத்தான் செய் கிறது. நவமி என்பது இராமன் பிறந்த நாள்தானே!

‘அஷ்டமி' என்பது கிருஷ் ணன் பிறந்த நாள்தானே (கோகுலாஷ்டமி).

கடவுள்கள் பிறந்த நவமி யும், அஷ்டமியும் கெட்ட தானது எப்படி?

ஓ, கடவுள்களே அறிவுப் பற்றாக்குறையால் பிறப்பிக் கப்பட்ட கெட்ட விஷயங் கள்தானே!

- மயிலாடன்

- விடுதலை நாளேடு 12 12 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக