திங்கள், 16 டிசம்பர், 2019

‘பாபாயணம்!'

‘‘இரட்டையரான நாங்கள் மருத்துவம் படித்து வருகிறோம். முதலாமாண்டு தேர்வில் நாங் கள் இருவரும் ஒரு தேர்வை சரியாக எழுதவில்லை. ‘பாபா கண்டிப்பாகத் தேர்ச்சி பெறச் செய்வார்' என்று நான் நம்பி னேன். தேர்வு முடிவுகள் ஒரு வியாழன் அன்றுதான் வெளி யாகின. நாங்கள் இருவரும் குறிப்பிட்ட அந்தப் பாடத்தில் ஒரே மதிப்பெண் (110) பெற்றுத் தேர்ச்சி பெற்றோம். அன்று இரவு உறங்கச் செல்வதற்கு முன் என் கைப்பேசி செயலியில் நான் ஒரு மேற்கோள் படித்தேன். ‘சாய் பாபாவை மறக்காதே, நீ 100 எதிர்பார்த்தால் அவர் 110 ஆகத் தருவார்' என்றது வாசகம்.''

- மு.வர்ஜிதி, ரீமா

(‘ஆனந்தவிகடன்', 11.12.2019, பக்கம் 94)

‘பாபாயணம்' என்னும் தலைப்பில் இப்படியொரு செய் தியை ‘ஆனந்தவிகடன்' வெளியிட்டுள்ளது.

‘குமுதம்' இதழ் மறைந்த சங்கராச்சாரியார்பற்றி ஒவ் வொரு இதழிலும் அற்புத மகாத் மியங்களை அவிழ்த்து விடு கிறது என்றால், ‘ஆனந்தவிகடன்' இதழோ பழைய சாய்பாபாவை தூசு தட்டி வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது.

அற்புதங்கள், அதிசயங் களை அவிழ்த்துவிடாவிட்டால், கடவுளானாலும் சரி, பாபாக் களாக ஆனாலும் சரி, சாமியார் களாக ஆனாலும் சரி, சங்கராச் சாரியார்களானாலும் சரி மக்கள் மத்தியில் போனி ஆகாது. இந்த இரகசியத்தை சரியாகத் தெரிந்து வைத்துள்ள ஊடகங்கள், மக் களை மதி மயக்கத்திலேயே வைத்திருந்தால்தான் ‘கல்லாவும்' கட்டலாம்; தங்களுக்கென்றுள்ள அக்ரகாரக் கலாச்சாரத்தையும் - சேதாரம் இல்லாமலும் ஒப்பேற்றலாம் என்ற முறையில் உண்மைக்கு மாறானவற்றை ஊதி ஊதி - வானத்தில் வண்ண வண்ண பலூன்களாகப் பறக்க விடுகிறார்கள்.

புட்டபர்த்தி சாய்பாபாவை நினைத்த மாத்திரத்திலேயே நோய்கள் தீரும் என்று  செய்தி பரப்பினார்கள். பல டாக்டர்கள், இன்ஜினியர்கள் அதற்காகவே என்று ஏற்பாடு.

ஆனால், அதே புட்டபர்த்தி சாய்பாபா, சாதாரண மனிதர் களுக்கு ஏற்படும் நோய்களாலும், உடல் உபாதைகளாலும் பல மாதங்கள் படுக்கையில் இருந் தார் என்பது தெரிந்த செய்தி. (கேலி செய்யவில்லை - நடப் பைத்தான் சொல்லுகிறோம்).

அற்புத பகவானுக்கு இது ஏன் நடந்தது என்று சிந்தித்தால், அதற்குப் பெயர்தான் பகுத்தறிவு - ஆனால், ‘‘பக்தி வந்தால் தான் புத்தி போய்விடுகிறதே!''

‘ஆனந்த விகடன்' வெளியிட்ட சாய்பாபாபற்றிய சங்கதி -மிகவும் ஆபத்தானது. படிக்கும் மாணவர்களைத் தவறான திசைக்கு இழுத்துச் செல்லும் மாபெரும் குற்ற நடவடிக்கை.

சாய்பாபாவை நினைத்தால் மார்க்குகள் குவியும் என்று தவறான வழியைக் காட்டலாமா? இதுதான் பத்திரிகா தர்மமா?

பக்தியை - புத்தியை இவ்வளவுக் கீழிறக்கத்திற்குக் கொண்டு செல்லலாமா?

- மயிலாடன்

- விடுதலை நாளேடு 13 12 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக