உறவினர் ஒருவருக்கு, 10 ஆண்டுகளுக்கு முன் திரு மணம் நடந்தது. தம்பதிய ருக்கு, குழந்தை பாக்கியம் இல்லை. இதை கருத்தில் கொண்டு, முக்கிய உறவினர் கள் ஒன்று கூடி ஆலோசித்து, அந்த கணவருக்கு, இரண் டாம் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர்.
இதையறிந்த மனைவி, ‘குழந்தை வேண்டி, கணவர் இன்னொரு திருமணம் செய்து கொள்வதில், எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை; ஆனால், அதற்கு முன், நாங்கள் இருவரும், மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.'
‘அப்போது தான், இருவ ரில் யாருக்கு குறையுள்ளதென தெரிய வரும்...' என்று, பிடி வாதமாக வற்புறுத்தினார். அதற்கு சம்மதித்து இருவரும், மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.
பரிசோதனை முடிவில், பெண்ணுக்கு எந்த குறையும் இல்லை; கணவருக்கு தான் பிரச்சினை. இரண்டாம் திரு மணம் செய்து கொண்டாலும், குழந்தை பிறக்க, 100 சதவீதம் வாய்ப்பு இல்லை என, தெரிய வந்தது.
இதையறிந்த அந்த பெண், ‘வாரிசு வேண்டும் என, என் கணவருக்கு இரண் டாம் திருமணம் செய்து வைக்க துடித்தீர்களே... இப்போது, அவரிடம் தான் குறை என்பது தெளிவாகி யுள்ளது; என்னிடம் குறை ஏதுமில்லை என்று உறுதியாகி விட்டது. இந்நிலையில், என்ன செய்யப் போகிறீர்கள்... எனக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கிறீர்களா...' என, உற வினர்களிடம் ஆவேசப்பட் டார்.
உறவினர்கள் திகைத்து, வாயைடைத்து நின்றனர்.
அப்பெண், பழம் பஞ்சாங்கமாக, மவுனமாகி இருந் தால் என்னவாகி இருக்கும்?
தற்சமயம், நிலைமை உணர்ந்து, மீண்டும் ஆலோ சித்து, உறவுக்குள் ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்வது என, ஒரு மனதாக முடிவெடுத்துள்ளனர்.
பெண்களே... எப்போது, எதற்கு, எப்படி நம் மவு னத்தை கலைக்க வேண்டுமோ, அப்போது பொங்கி எழுங்கள். துணிவு தான் ஆயுதம் என்பதையும், மறந்து விடக் கூடாது.
- எஸ். ராஜேந்திரன்,
தஞ்சாவூர்.
(‘தினமலர்', 6.10.2019)
கவனிக்கவும் - இனமல ரான ‘தினமலரிலேயே' இப்படி ஒரு வாசகரின் கடிதம்.
விபச்சாரம் என்றால் பெண்ணை ஒழுக்கம் கெட் டவள் என்பது; அதில் சம் பந்தப்பட்ட ஆணைக் கண்டு கொள்ளாமல் இருப்பது.
குழந்தைப் பேறு இல்லை என்றால், மலடி என்று வசை பாட்டுப் பாடுவது பெண் களைத்தானே!
அர்த்தமுள்ள இந்து மதத் தின் பெண்மீதான கேவலப் பார்வையே இது.
இதுபற்றி தந்தை பெரியார் கூறுவது என்ன?
‘‘பெண்களால் ‘ஆண்மை' என்ற தத்துவம் அழிக்கப்பட வேண்டும்.''
- ‘குடிஅரசு', 12.8.1928
- மயிலாடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக