வியாழன், 13 பிப்ரவரி, 2020

முற்றுகைப் போராட்டம் - திருப்பனந்தாளில் கழகத் தோழர்கள் திரண்டனர்தருமபுரம் ஆதீனகர்த்தரின் பட்டினப்பிரவேசம் கைவிடப்பட்டது

மனித உரிமைப் போருக்குக் கிடைத்த வெற்றி!

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவித்த

முற்றுகைப் போராட்டம் - திருப்பனந்தாளில் கழகத் தோழர்கள் திரண்டனர்

தருமபுரம் ஆதீனகர்த்தரின் பட்டினப்பிரவேசம் கைவிடப்பட்டது

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரம் ஆதீனகர்த்தர் பட்டினப்பிரவேசம் என்ற பெயரால் மனிதர் களால் சுமக்கப்படும் பல்லக்கில் பவனி வருகிறார் என்ற செய்தியை அறிந்த கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பிப்ரவரி 6ஆம் தேதி, மனிதனை மனிதன் சுமப்பதா? பல ஆண்டுகளுக்கு முன்பே, திராவிடர் கழகத்தின் போராட்டத்தால் கைவிடப்பட்ட, தடுத்து நிறுத்தப்பட்ட பட்டினப்பிரவேசத்தை ஏற்க முடியாது. மனித உரிமையை நசுக்கும் செயலை அனுமதிக்க முடியாது. மீறி நடந்தால் திராவிடர் கழகத்தின் சார்பில் மறியல் நடைபெறுமென 'விடுதலை'யில் அறிக்கை எழுதியிருந்தார். 'விடுதலை' அறிக்கையினை மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ் தலைமையில் கழகத் தோழர்கள் 9.2.2020 அன்று தருமபுரம் சென்று ஆதீனகர்த்தரை சந்தித்து கொடுத்து பட்டினப்பிரவேசத்தை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.

கும்பகோணம் மாவட்ட தலைவர் கு.கவுதமன், மாவட்டத் துணைச் செயலாளர் வழக்குரைஞர் கு.நிம்மதி, கும்பகோணம் நகர தலைவர் வழக்குரைஞர் ரமேஷ் ஆகியோர் 9.2.2020 அன்று திருப்பனந்தாள் காவல் நிலைய காவல் ஆய்வாளரை சந்தித்து தமிழர் தலைவர் விடுதலை அறிக்கையையும் பட்டினப்பிரவேசம் நடந்தால், மறியல் நடைபெறும் என்ற மனுவையும் கொடுத்து வந்தனர்.

10.2.2020 அன்று பகல் 12 மணி அளவில் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு மகேஸ்வரன் அவர்களிடம் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன் ஆகியோர் மனித உரிமைக்கு எதிரான பட்டினப்பிரவேசம் நிகழ்விற்கு அனுமதிக்கக் கூடாது என கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் கடிதத்தை வழங்கி, மீறி நடந்தால் மறியல் நடத்துவதைத் தவிர வேறு வழி இல்லை என தெரிவித்து வந்தனர்.

10.2.2020 அன்று மதியம் வரை காவல்துறை மூலமாகவோ, ஆதீனகர்த்தர் தருமபுரம் மடத்தின் மூலமாகவோ எந்த அறிவிப்பும் வராத நிலையில் 12.2.2020 அன்று திருப்பனந் தாளில் தருமபுரம் ஆதீனகர்த்தரின் பட்டினப்பிரவேசம் நடந்தால், அன்று மாலை 4 மணி அளவில் திருப்பனந்தாளில் திராவிடர் கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தலை மையில் கழக மாநில, மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் கழகத் தோழர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று அறிவிப்பு செய்தார்கள்.

உடனடியாக போர்க்கால அடிப்படையில் கும்பகோணம் மாவட்ட தலைவர் கு.கவுதமன், மாவட்ட துணைச்செயலாளர் வழக்குரைஞர் நிம்மதி, குடந்தை நகர தலைவர் வழக்குரைஞர் ரமேஷ், மாவட்ட இளைஞரணி தலைவர் சிவக்குமார், தொழிலாளர் பேரவை செயலாளர் குருசாமி, கதிராமங்கலம் கலியபெருமாள், குடந்தை ஒன்றியத் தலைவர் நில்ராஜ் உள்ளிட்ட கழக தோழர்கள் இரவோடு இரவாக போராட்ட அறிவிப்பு துண்டறிக்கை, சுவரொட்டிகள், விளம்பரப் பதாகைகள் அச்சடிப்பு பணி களை செய்து, 11.2.2020 அன்று காலையே பக்கத்து மாவட்டம் ஒன்றியங்களுக்கு அனுப்பும் பணியை மேற்கொண்டனர். குடந்தை முதல் அணைக்கரை வரை சுவரொட்டிகள் ஒட்டப் பட்டன. மதியம் மீண்டும் திருப்பனந்தாள் காவல் நிலை யத்திற்கு சென்று மறியல் போராட்டம் தொடர்பாக தக வல் வழங்கினார்கள். வாட்சப், முகநூல், மின்னஞ்சல் மூல மாகவும் தகவல் பரப்பப்பட்டது. கும்பகோணம் திருப்பனந்தாள் வட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

திருப்பனந்தாளில் மறியல் போராட்டம்

12.2.2020 அன்று மாலை 3 மணி முதலே கழகத் தோழர்கள் பொறுப்பாளர்கள் திருப்பனந்தாளில் குவியத் தொடங்கினர்.

நீலப்புலிகள் அமைப்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தோழர்களும் பெருமளவில் கூடினார்கள். மாலை சரியாக 4.30 மணி அளவில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மண்டலத் தலைவர்கள் வே.ஜெயராமன், சீர்காழி ஜெகதீசன், குடந்தை மாவட்ட தலைவர்

கு.கவுதமன், தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன், திருவாரூர் மாவட்ட தலைவர் வீ.மோகன், நாகை மாவட்ட

தலைவர் வி.எஸ்.டி.நெப்போலியன், அரியலூர் மண்டலத் தலைவர் சி.காமராஜ், அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம், மாநில இளைஞர் அணி செயலாளர் த.சீ.இளந்திரையன், தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, திருவாரூர் மாவட்ட செயலாளர் வீர.கோவிந்தராசு, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ், திருவாரூர் மண்டல செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அரியலூர் மாவட்டச் செயலாளர் க.சிந்தனைச்செல்வன், கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் இரா.வெற்றிக்குமார், வெற்றிச் செல்வன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், குடந்தை மாவட்ட துணைச் செயலாளர் வழக்குரைஞர் கு.நிம்மதி, நீலப்புலிகள் கட்சித்தலைவர் டி.எம்.புரட்சிமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கா.தமிழருவி ஆகியோர் முன்னிலையில் திருப்பனந்தாள் கடை வீதியில் ஊர்வலமாக புறப்பட்டு மனிதனை மனிதன் சுமப்பதா? தந்தை பெரியார் வாழ்க! வெல்க வெல்க வெல்கவே!! மனித உரிமை போராட்டம் வெல்கவே! மனிதனை மனிதன் தூக்குவதா? மனித உரிமையை நசுக்குவதா? ஆண்டான் அடிமை முறை நீடிக்கலாமா? ஆதீனகர்த்தரை சுமக்கலாமா? சட்டத்தின் முன் அனைவரும் சமம் இல்லையா? சந்நிதானங்களை சுமப்பது குற்றமில்லையா? கை ரிக்ஷா ஒழிக்கப்பட்ட நாட்டிலே பவனிவரலாமா ஆதீனங்கள் பல்லக்கிலே? சுதந்திரநாடா, சுதந்திரநாடா? மனிதனை மனிதன் சுமப்பது சுதந்திரநாடா? அனுமதியோம் - அனுமதியோம் மனித உரிமை பறிப்பை அனுமதியோம். போராட்டம் போராட்டம், முற்றுகை போராட்டம் மனித வதையை எதிர்த்திட மனித உரிமைப் போராட்டம்! கட்சியில்லை ஜாதியில்லை, மதமில்லை மாச்சரியம் இல்லை. மனித உரிமைக் கண்ணியத்தை கட்டிக்காக்கும் போராட்டம் வாழ்க வாழ்க வெல்கவே! மனித உரிமை வெல்கவே! என முழக்கமிட்டு திருப்பனந்தாள் சிறீகாசிமடம் நோக்கி போராட்டக்குழுவினர் சென்றனர்.

போராட்டத்தின் எதிரொலியாக ஆதீனகர்த்தார் பல்லக்கை தவிர்த்து நடந்து சென்றார்

முழக்கமிட்டு ஊர்வலமாக சென்ற கழகத் தோழர்களை காவல்துறை அதிகாரிகள் சந்தித்து தங்களின் கோரிக் கையை ஏற்று தருமபுரம் ஆதீனகர்த்தர் பட்டினப்பிரவேசம் பல்லக்கில் செல்வதை தவிர்த்து நடந்து செல்வதாக ஒப்புக்கொண்டுள்ளார். மனிதனை மனிதன் சுமப்பது கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம், நடந்து சென்றால் நாங்கள் வரவேற்கிறோம் என்று சொல்லிவிட்டு திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சார்பில் ஆதீனகர்த்தருக்கும் ஒத்துழைப்பு வழங்கிய காவல்துறை அதிகாரிகளுக்கும் நன்றித் தெரிவித்து, அங்கிருந்து கலைந்து சென்று திருப்பனந்தாள் அரசமரத்தடியில் வந்த பிறகு கலந்து கொண்ட திராவிடர் கழகம், நீலப்புலிகள் இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர்களுக்கு குடந்தை மாவட்டத் தலைவர் கு.கவுதமன், கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், நீலப்புலிகள் புரட்சிமணி, வி.சி.க. தமிழருவி ஆகியோர் நன்றி தெரிவித்து உரை யாற்றினார்கள்.

ஒரு நாள் இடைவெளியில் குறுகிய காலத்தில் அறிவிக்கப்பட்டாலும் பெருந்திரளாக கலந்து கொண்டு, போராட்டத்தை வெற்றி பெறச் செய்த கழகத் தோழர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தருமபுரம் ஆதீனகர்த்தர் 'மனிதர்கள் தூக்கும் பல்லக்கை தவிர்த்து சிறிது தூரம் நடந்தும் பிறகு காரிலும் சென்றார்' என்பது மனித உரிமை போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.

திருப்பனந்தாள் மக்களின் பேராதரவு

திருப்பனந்தாளில் பெருந்திரளாக கூடி மனித உரிமை போராட்டத்தில் ஈடுபட்ட கழகத்தோழர்களிடம் வணிகர்கள், விவசாயிகள், அரசியல் கட்சியை சார்ந்த பொதுமக்கள், ஆண்கள், பெண்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் தாமாக முன்வந்து மனிதனை மனிதன் தூக்குவதை ஏற்க முடியாது. போராடி இந்த அவல நிலையை நிறுத்திய திராவிடர் கழத்தினருக்கும் குறிப்பாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்து பாராட்டி மகிழ்ந்தனர். ஒரு வியாபாரி தனது கடையில் உள்ள குடிநீரை அனைவருக்கும் வழங்கி மகிழ்ந்தார்.

மறியல் போராட்டத்தில் பங்கேற்றோர்

குடந்தை மாவட்ட துணைத் தலைவர்கள் சு.விஜயக்குமார், கோவிந்தன், பொதுக்குழு உறுப்பினர் வல்லம் மணியன், பாபநாசம் ஒன்றிய தலைவர் பூவானந்தம், செயலாளர் கலியமூர்த்தி, மாநில ப.க.தலைவர் மா.அழகிரிசாமி, தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், செயலாளர் சு.முருகேசன், மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் ஏகாம்பரம், தஞ்சை மாவட்ட இளைஞரணி தலைவர் சுப்ரமணியன், அமைப்பாளர் விஜயக்குமார், குடந்தை மாவட்ட இளைஞரணி தலைவர் சிவக்குமார், செயலாளர் திராவிடக்கார்த்தி, அமைப்பாளர் லெனின் பாஸ்கர், திருவாரூர் மண்டல இளைஞரணி செயலாளர் ராஜ்மோகன், மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ், நாகை மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் ராசமுருகையன், திருவையாறு ஒன்றியத் தலைவர் ச.கண்ணன், செயலாளர் துரை.ஸ்டாலின், பூதலூர் ஒன்றியத் தலைவர் அல்லூர் பாலு, அம்மாப்பேட்டை ஒன்றிய தலைவர் கி.ஜவகர், திருவிடை மருதூர் ஒன்றிய தலைவர் கணேசன், செயலாளர் முருகானந்தம், பாபநாசம் நகரத் தலைவர் இளங்கோவன், தஞ்சை மண்டல மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி, குடந்தை திரிபுரசுந்தரி, சங்கீதா, ராஜேஸ்வரி, பெருமை நிம்மதி பாக்கியம், தஞ்சை விடுதலையரசு, வடசேரி அல்லிராணி, குடந்தை அம்பிகா, விருத்தாசலம் மாவட்ட இளைஞரணி தலைவர் சிலம்பரசன், விருத்தாசலம் சேகர், திருவாரூர் பாலச்சந்திரன், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் சக்திவேல், ஒன்றியத் தலைவர் பொன்னுசாமி, தஞ்சை துர்காதேவி, தஞ்சை உதயக்குமார், திருவாரூர் ஒன்றியத் தலைவர் இராஜேந்திரன், ஏராவஞ்சேரி பழனிச்சாமி, ராஜா, கோவிந்தகுடி ராமச்சந்திரன் வலங்கை ஒன்றியத் தலைவர் சந்திரசேகர், செயலாளர் பவானி, ராஜகிரி ஜனார்த்தனன், அய்யம்பேட்டை இராவணன், தமிழரசன், கதிராமங்கலம் ராமமூர்த்தி, மயிலாடுதுறை மாவட்ட துணைச் செயலாளர் கட்பீஸ் கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் நாகரத்தினம், ஒன்றியத் தலைவர் இளங்கோவன், குத்தாலம் ஒன்றிய செயலாளர் பாலசுந்தரம், மாவட்ட ப.க. செயலாளர் சாமிதுரை, பவுண்டரிபுரம் முருகேசன், திருநாகேஸ்வரம் குருமூர்த்தி, தஞ்சை சூரியமூர்த்தி, கரந்தை டேவிட், சோழங்கநல்லூர் கோவிந்தசாமி, வடுகக்குடி பழனிச்சாமி, வஞ்சனூர் அபிநேஷ், விவேகானந்தன் நவீன்ராஜ், சுரேஷ், மணிகண்டன், அஜித்குமார், திருப்பனந்தாள் ஒன்றிய துணைத் தலைவர் கலியமூர்த்தி, கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் பாண்டுரங்கன், வஞ்சனூர் நாகஅர்ச்சுனன், அல்லூர் அய்யாத்துரை, கும்பகோணம் நாகராசன், சாலியமங்கலம் துரை.அண்ணாத்துரை, குடந்தை நகர செயலாளர் தமிழ்மணி, பிழைபொருத்தான், துகிழி தமிழ்மணி, சோழபுரம் மதியழகன், தஞ்சை தண்டாயுதபாணி, தஞ்சை கோவிந்தராஜ், குடந்தை கிச்சா, தஞ்சை அஜய்பிரியன், யாழினி, வலங்கை நகர செயலாளர் வீரமணி, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் பெரியார்தினேசு, குடந்தை மில்லர், பூவை முருகேசன், குடந்தை சிவபாலன், தஞ்சை பாரதிதேவா, அ.பெரியார் செல்வம், மீன்சுருட்டி சேக்கிழார். பெரியார் நகர் உத்திராபதி, திருவையாறு கவுதமன், தஞ்சை வடக்கு ஒன்றியத் தலைவர் சுதாகர், அம்மன்பேட்டை கலியபெருமாள், தற்கொலை கோவிந்தராசன், திருவிடைமருதூர் ஒன்றிய அமைப்பாளர் அ.சங்கர் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி

வி.சி.க. மாவட்டச் செயலாளர் தமிழருவி, மாவட்ட துணைச் செயலாளர் அமுதன், வெண்மணி, செல்வராஜ், வழக்குரைஞர் மதியழகன், சிவநேசன் வசந்த் உள்ளிட்டோர் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர்.

நீலப்புலிகள் இயக்கம்

நீலப்புலிகள் இயக்கம் சார்பாக தலைவர் டி.எம்.புரட்சிமணி, பொருளாளர் ஜெ.பழனிச்சாமி, துணைப் பொதுச் செயலாளர் ரமேஷ்குமார், தஞ்சை மாவட்டத் தலைவர் பாண்டியன், டி.எம்.கவிமணி, கொள்கை பரப்பு செயலாளர் தங்கராசு, ஒன்றியத் தலைவர் பவுன்ராஜ் உள்ளிட்ட தோழர்கள் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் தொலைபேசியில் நன்றி

மறியல் போராட்டத்தில் பங்கேற்ற அனைத்துத் தோழர்களுக்கும் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், குடந்தை மாவட்டத் தலைவர் கு.கவுதமன் மூலமாக, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், கழக துணைத் தலைவர் அவர்களும் தொலைபேசியில் வாழ்த்துக் களையும் நன்றியையும் தெரிவித்தனர்.

- விடுதலை நாளேடு 13 2 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக