புதன், 3 மார்ச், 2021

சென்னை புத்தகக் காட்சியில் இயக்க நூல்கள் வெளியீடு


PERIYAR E.V. RAMASAMY A MAN AHEAD OF HIS TIME என்ற தலைப்பில் டெக்கான் கிரானிக்கல் ஆங்கில நாளேட்டில் பத்திரிகையாளராக இருக்கும் பாபு ஜெயகுமார் அவர்களால் எழுதப்பட்டுஎமரால்டு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட நூலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் வெளியிடபெரியார் திரைப்பட இயக்குநர் ஞான இராசசேகரன் (அய்..எஸ்ஓய்வுபெற்றுக் கொண்டார்.  முனைவர் கே.சுபாஷினி (ஜெர்மனி), திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்பொருளாளர் வீ.குமரேசன்ஆடிட்டர் ஆர்.இராமச்சந்திரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

ஆய்வாளர் - எழுத்தாளர் .எஸ்.பன்னீர்செல்வம்பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன்வெங்கடேசன் (..), ஓசூர் கண்மணிகழக மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் மணியம்மைஅமைப்பாளர் வழக்குரைஞர் மதிவதனிதாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் முத்தையன்செயலாளர் நாத்திகன்தொண்டறம்அறிவொளி காணொலி இயக்குநர் .சேரலாதன்விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆதி மொழிபொறியாளர்   கரிகாலன் மற்றும் ஏராளமான தோழர்கள் பெற்றுக் கொண்டனர்.

ஆங்கில நூலோடு, 'பெரியார்திரைக்கதை  - ஞான இராச சேகரன் (அய்..எஸ்ஓய்வு)

DRAVIDIAN WORTHIES-I  - Sir C.Sankaran Nair

பெரியார் பதித்த கொள்கைத் தடங்கள் (கிவீரமணி)

அண்டத்தைப் பார்க்கலாம் வாங்க - (பெரியார் பிஞ்சு வெளியீடுஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.

எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன்நூலாசிரியர் பாபு ஜெயகுமார்இயக்குநர் ஞான.இராசசேகரன்முனைவர் சுபாஷினிஎமரால்டு பதிப்பக உரிமையாளர் கோ.ஒளிவண்ணன் ஆகியோருக்குச் சால்வை அணிவித்து தமிழர் தலைவர் சிறப்பு செய்தார்.

"உ.பி.யில் பெரியார் பிறந்திருந்தால் இந்தியாவிலேயே பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கும்!"

* பெரியார் திரைப்பட இயக்குநர் ஞானஇராசசேகரன் அய்..எஸ். (ஓய்வு)

உலகில் எல்லா மொழிகளிலும் பெரியார் பற்றி நூல்கள் தேவை

* முனைவர் கேசுபாஷினி (ஜெர்மனிகருத்துரை

தொகுப்புமின்சாரம்










சென்னை - நந்தனம் ஓய்.எம்.சி.மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி அரங்கில் நேற்று (28.2.2021) பிற்பகல் 3.45 மணியளவில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா இயக்க வரலாற்றில் குறிப்பிடத் தக்கதாகும்.

தந்தை பெரியார் பற்றிய நூல்கள் தமிழில் ஏராளமாக வெளி வந்துள்ளன என்றாலும்ஆங்கிலத்தில் வெளிவரும் நிலையில்தான் உலகெங்கும் சென்று அடையும் என்ற ஒரு கருத்து எல்லாத் திசைகளிலும் கூறப்படும் கருத்தாகும்.

சிறியதும்பெரியதுமாக 88 நூல்களை ஆங்கிலத்தில் கழகம் கொண்டு வந்துள்ளது என்றாலும்மேலும் விரிவான நூல்கள் ஆங்கிலத்திலும்பிற மொழிகளிலும் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கி வருகின்றது.

அந்த வகையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கிவீரமணி அவர்களின் வேண்டுகோள்படியும் வழிகாட்டு தலின்படியும்  'டெக்கான் கிரானிக்களில்பணியாற்றும் பாபு ஜெயகுமார் அவர்களால் எழுதப்பட்ட "Periyar E.V. Ramasamy A Man Ahead of His Time" எனும் 253 பக்கங்களில் 20 தலைப்புகளில் 'எமரால்டுபதிப்பகத்தினரால் பதிப்பிக்கப் பட்டதுஅந்நூலின் வெளியீட்டு விழா நேர்த்தியான முறையில் வெளியிடப்பட்டது.











விழாவிற்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கிவீரமணி அவர்கள் தலைமை ஏற்றார். 'எமரால்டுபதிப் பகத்தின் உரிமையா ளரும்பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தின் மாநிலத் துணைத் தலைவருமான கோஒளிவண்ணன் வரவேற்புரையாற்றினார்.

அவர் தனது வரவேற்புரையில் - உலகில் பல நாடுகளிலும் வழக்கமாக நடத்தப்பட்டு வந்த புத்தகக் கண்காட்சிகள் கரோனா காரணமாக நடத்தப்படாத நிலையில்விதி விலக் காக சென்னையில் மட்டும்தங்குத் தடையின்றி நடைபெற்று வருவதைக் குறிப்பிட்டபோது பலத்த கரஒலி எழுந்தது.

உலக முழுவதும் ஆங்கிலம் கோலோச்சும் இந்தக் கால கட்டத்தில்தந்தை பெரியார் பற்றி ஆங்கிலத்தில் இப்படி ஒரு நூல் வெளிவருவது சிறப்பானது - எனது தந்தையார் கோபாலகிருஷ்ணன் அவர்கள் தந்தை பெரியார் அவர்கள் பற்றி  Periyar the Father of Tamil Race  எனும் என்ற நூலை  30 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டுள்ளதையும் குறிப்பிட்டார்.

(தமிழில் "தமிழர் தலைவர்எனும் நூல் சாமிசிதம்பரனார் எழுதிய முதல் பகுதியும், 'உலக தலைவர் பெரியார்எனும் பெயரில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கிவீரமணி அவர்களால் எழுதப்பட்ட ஏழு தொகுதிகளும் கவிஞர் கருணானந்தம் அவர்களால் எழுதப்பட்ட தந்தை பெரியார் எனும் வாழ்க்கை வரலாற்று நூலும் A Pen Portrait of Periyar Ramasamy    என்ற  Profதருமலிங்கம் அவர்களால்   எழுதப்பட்ட நூலும் ஏற்கெனவே வெளி வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது). கே.எம்பாலசுப்பிரமணியம் அவர்கள் Periyar E.V. Ramasamy என்ற தலைப்பில் (1943இல்ஆங்கிலத்தில் எழுதினார்

 முனைவர் சுபாஷினி











(Director Tamil Heritage Foundation)

மலேசியாவைப் பூர்விகமாகக் கொண்டு ஜெர்மனியில் வாழ்ந்து வரும் - ஆய்வாளர் முனைவர் கேசுபாஷினி தன் உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:

ஜெர்மனியில் வாழ்ந்து வரும் எனக்கு இந்நூலில் தந்தை பெரியார் ஜெர்மனியில் ஆறு நாட்கள் சுற்றுப் பயணம் செய்த தகவல் கிடைத்து மகிழ்கிறேன்.  "Exploring the world" எனும் தலைப்பில் 18 பக்கங்களில் தந்தை பெரியாரின் உலக சுற்றுப் பயணம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதுஉலகை வலம் வந்து பல அனுபவங்களை அறிந்து மனித குலத்துக்குத் தேவையான கருத்துகளைப்  பெரியார் வழங்கியுள்ளார்.

மலேசியாவும் - வெண் தாடி வேந்தரும்

நான் பிறந்த மலேசியாதான் பெரியார் பயணித்த முதல் வெளி நாடாகும். 11 மாதங்கள்  அய்ரோப்பாவில் சுற்றுப் பயணம் செய்து தந்தை பெரியார் எழுதி வந்த பிரயாணக் குறிப்புகள் மிகவும் பயனுள்ளவையாகும்.

வெண்தாடி வேந்தர் பெரியார் என்று இன்று அவரைப் பாராட்டுகிறோம்வெறும் மீசையோடு மலேசியாவுக்கு வந்த பெரியார் தாடியோடு வெளி வந்தார்வெண்தாடி பெரியாராக வெளி வந்ததற்கு எங்கள் மலேசியாதான் காரணம் என்று நினைக்கும் பொழுது பெருமையாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

பெரியார் அவர்களைப் பற்றிய நூல்கள் பிரெஞ்சுஸ்பானிஸ் மொழிகளிலும் வர வேண்டும்புதிய தலைமுறைக்குப் போய்ச் சேர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ஞானஇராசசேகரன் அய்..எஸ். (ஓய்வு)

பெரியார் திரைப்படப் புகழ் (பெரியார் படத் திரைக்கதை மற்றும் இயக்குநர் - தேசிய விருது பெற்றது 'பெரியார்திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கதுஞான இராசசேகரன் அவர்கள் தன் உரையில் முக்கியமாக முத்திரை பதித்தது போல குறிப்பிட்டதாவது:

இந்த ஆங்கில நூலை பாபு ஜெயக்குமார் நேர்த்தியான ஆங்கிலத்தில் வெகு சிறப்பாக செறிவாக எழுதியுள்ளார் - அவருக்கு என் பாராட்டுக்கள்.

வினோதமான மாமனிதர் பெரியார்

பெரியார் ஒரு வினோதமான மா மனிதர்நம் நாட்டில் காலத்தைக் கடந்த இரு தலைவர்களில் ஒருவர் திருவள்ளுவர்இன்னொருவர் பெரியார் ஆவார். 2000 ஆண்டு கடந்தும் பேசப்படக் கூடியவர்கள்காலத்தைக் கடந்து சிந்தித்தவர் பெரியார்திருவள்ளுவருக்குக் காவி சாயம் பூசுகின்றனர்பெரியார் சிலையைச் சேதப்படுத்துகின்றனர் என்பதிலிருந்தே இவர்கள் யாருக்கு எதிரிகள் என்பது விளங்குகிறது.

பெரியார் மட்டும் உத்தரப்பிரதேசத்தில் பிறந்திருந்தால்இந்தியாவே மாறியிருக்கும்இந்தியாவிலேயே தமிழ்நாடு தனித் தன்மையோடு விளங்குகிறது என்றால் காரணம் பெரியார் அவர்களே!

தமிழ்நாடும் கேரளமும்

கேரள மாநிலத்தில் கூட சமூக நிலை என்னவர்க்கப் பிரச்சினையில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு அளவுக்குச் சமூகப் பிரச்சினையில் போதிய அளவு விழிப்புணர்வு இல்லை என்று கம்யூனிஸ்ட் தலைவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்பெரியார் போல சமூகப் புரட்சித் தலைவர் இங்கு உருவாகவில்லை என்று யதார்த்தமாக ஒப்புக் கொள்கின்றனர்.

பெரியார் பற்றிய நூல் இந்தியா முழுமைக்கும் தேவைப்படும் கால கட்டம் இதுமதவாத சக்திகளை எதிர் கொள்ள வடக்கே பெரியார் என்ற போர் ஆயுதம் இல்லைபெரியார் இந்தியா முழுமைக்கும் மிகவும் தேவை.

சமீபத்தில் .பிலக்னோ சென்றபோது தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் பெரிய அதிகாரிகளின் நெற்றியில்கூட திருநீறும்குங்குமமும் பரவலாகக் காணப்படுவதைக் கண்டேன்பெரியாரின் அருமை பிற மாநிலங்களுக்குச் சென்றால்தான் விளங்கும்.

பெரியார்பற்றி இன்னும் மூன்று திரைப்படங்கள் எடுக்கலாம்

பெரியாரைப்பற்றி திரைப்படம் எடுத்தேன்இன்னும் மூன்று பெரியார் படங்களை எடுக்கலாம்அவரின் பொது வாழ்வு என்பது அவ்வளவு அடர்த்தியும்ஆழமும் கொண்டது என்று குறிப்பிட்டார்திரைப்பட இயக்குநர் ஞானஇராசசேகரன் அய்..எஸ்.(ஓய்வு).

நூலாசிரியர் ஜி. பாபு ஜெயக்குமார் ஏற்புரை
















நான் இந்நூலை எழுதினேன் என்றாலும் இதை எழுத என்னைப் பணித்தவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் தான்இதற்காக பெரியார் திடல் நூலகம்  ஆய்வகம் எனக்குப் பெரிதும் உதவியாக இருந்ததுநூலகர் உட்பட பெரியார் திடலில் உள்ள பலரும் எனக்குப் பேருதவி புரிந்தார்கள்அவர்களுக்கெல்லாம் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லோரும் சேர்ந்துதான் இந்நூலை எழுதினோம் என்று கூட வைத்துக் கொள்ளலாம்.

இந்நூலை எழுதுவதற்காக ஏராளமான தமிழ்ஆங்கில நூல்களை படித்தேன்பெரியார் திரைப்பட இயக்குநர் ஞான.இராசசேகரன் அவர்கள் பெரியார் பெயரில் இன்னும் மூன்று படங்கள் எடுக்கலாம் என்றார்பெரியார் பற்றி இன்னும் அய்ந்து நூல்களை எழுதலாம் - அவ்வளவு இருக்கிறது.

இந்த நூல் இப்பொழுது தேவையா என்று சிலர் கேட்கிறார்கள்சமூகவலைத் தளங்களிலும் கூட எழுதுகிறார்கள்அவற்றைப் பார்த்த போதுதான் - இந்த நூல் அவசியம் தேவை என்பதை நான் உணர்ந்தேன் - அறிந்தேன்.

பெரியார் ஒரு நாத்திகர் - பார்ப்பன எதிர்ப்பாளர் என்ற முறையில் மட்டுமே பார்க்கிறார்கள்அதையும் தாண்டி பெரியார் இருக்கிறார்அந்த அடிப்படையில் தான் இந்நூலை எழுதினேன் என்றார்.

பெரியார் புத்தக விற்பனை மேலாளர் ..நடராசன் நன்றி கூறிட பிற்பகல் 5.15 மணியளவில் நூல் வெளியீட்டு விழா சீரும் சிறப்புமாக நிறைவு பெற்றது.

சனாதன சக்திகள் பின்னங்கால் பிடரியில் இடிபட, ஓட்டம் பிடிக்க பெரியார் எனும் அறிவுப் போராயுதம் தேவை!

எழுச்சித் தமிழர் திருமாவளவன் முழக்கம்



விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்திருமாவளவன் அவர்கள் பாபு ஜெயகுமார் எழுதிய நூலை வெளியிட்டு ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது:

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மதுரையில் இன்று நான் பங்கேற்க வேண்டிய நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு இங்கே வந்திருக்கிறேன்.

இந்தச் சிறப்பான வாய்ப்பை எனக்கு அளித்த தமிழர் தலைவருக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியார் வரலாற்றை சாமிசிதம்பரனார் முதன் முதலாக எழுதினார்.  ஆசிரியர் அவர்களும் எழுதி பல தொகுதிகள் வந்திருக்கின்றனபாபு ஜெயகுமார் எழுதிய இந்நூல் உலகெங்கும் பரவிட வேண்டும்சுரண்டல் நிறைந்த ஆதிக்க சமூகத்தை எதிர்த்து நிற்க நமக்கு பெரியார் தேவைப்படுகிறார்.

இன்னும் எத்தனையோ எண்ணிக்கையில் பெரியார் திரைப்படத்தைத் தயாரிக்க முடியும் என்று நமது ஞானஇராசசேகரன் அய்..எஸ்அவர்கள் இங்கே சொன்னார்.

தமிழ்நாட்டின் தனித்

தன்மைக்குக் காரணம் பெரியார்


காரணம்பெரியார் என்றால் கருத்துச் சுரங்கம் என்று பொருள்இந்தியாவில் - உலகில் புதிய சிந்தனைக்கு வித்திட்டவர் தந்தை பெரியார்புதிய சமூக மாற்றத்திற்கு வித்திட்டவர் அவர்இன்று தமிழ்நாடு மதவாதத்தை எதிர்த்து நிற்கிறது என்றால் அதற்குக் காரணம் பெரியார்.

நூலாசிரியர் பாபு ஜெயக்குமார் இந்நூலில் முன்னுரை யாக எழுதியதை விமானத்தில் வரும்போது படித்தேன்.

பார்ப்பனர்களுக்கு அடிமையான

தமிழ் மன்னர்கள்

ஜனநாயக மரபு என்பது தமிழ்நாட்டில் இங்கிலாந்து நாட்டுக்கு முன்பே மலர்ந்திருக்கிறது. 1215ஆம் ஆண்டு வாக்கில் தான் இங்கிலாந்தில்கூட ஜனநாயகம் பற்றி பார்க்க முடிகிறதுஆனால் தமிழ்நாட்டில் கி.பிஏழாம் நூற்றாண்டிலேயே உத்தரமேரூரில் உள்ளாட்சி ஜனநாயகம் மலர்ந்து விட்டது.

ஆனாலும் நமது சோழ அரசர்களும் பாண்டியர் களும்பல்லவர்களும்நாயக்கர் மன்னர்களும்பார்ப் பனர்களின் மேலாண்மைக்குத் தான் துணை போயி ருக்கிறார்கள்.

அவர்கள் கல்விக் கூடம் வைத்துச் சொல்லிக் கொடுத் தது எல்லாம் பார்ப்பனர்களுக்குத்தான்சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளவை எல்லாம் வேதங்களும்உபநிஷத்துக்களும்தான்.

(11ஆம் நூற்றாண்டில் சோழ அரசர்கள் தென்னார்க் காடு மாவட்டத்தில் எண்ணாயிரம் என்னும் கிராமத்தில் ஒரு பெரிய கல்விக் கழகம் கண்டனர். 140 மாணவர்கள் கற்றனர். 14 ஆசிரியர்கள்ஆசிரியர்களுக்கும் மாணவர் களுக்கும் நாள்தோறும் நெல் அளந்து தரப்பட்டது. 45 வேலி நிலம் இதற்காக ஒதுக்கப்பட்டதுவேதங்களும்சமஸ்கிருத இலக்கணமும்மீமாம்ச வேதாந்த தத்துவங் களும் சொல்லித் தரப்பட்டன.

புதுச்சேரிக்கு அருகில் திருபுவனத்தில் சோழ அரசர்கள் ஒரு கல்லூரி ஏற்படுத்தினர். 72 வேலி நிலம் அதற்காக ஒதுக்கப்பட்டது. 260 மாணவர்கள், 12 ஆசிரி யர்கள் இருந்தனர்இதிகாசங்களும் மனுதர்மமும் கற்பிக் கப்பட்டன. 12ஆம் நூற்றாண்டில் திருவாவடு துறையில் ஒரு கலைமன்றம் கண்டனர்சமஸ்கிருதத்தில் உள்ள சாரக சமிதைஅஷ்டாங்க இருதய சமிதை இரண்டும் பாடங்கள் (உத்தரமேரூர் கல்வெட்டு பராந்தக சோழன் தீட்டியது - மேற்படி புத்தகம் பக்கம் 454).

தமிழ் வேந்தர்கள் பார்ப்பனர்களுக்கு அடி பணிந்து கிடந்தனர்கிராமங்கள் எல்லாம் அவர்களுக்கு இனா மாக தாரை வார்க்கப்பட்டன. 'மங்கலம்', 'மங்கலம்என்று பெயர் உள்ள கிராமங்கள் எல்லாம் நமது மன்னர்களால் பார்ப்பனர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கப் பட்டவையேஅந்தக் கிராமங்களில் பார்ப்பனர்கள் வரி வசூல் செய்துகொள்ளலாம் (மூன்று வேதங்கள் படித்த வர்களுக்குத் திரிவேதிமங்கலம்நான்கு வேதங்கள் படித்தவர்களுக்கு சதுர்வேதி மங்கலங்கள் என்று பெயரிட்டு நிலங்கள் இனாமாக அளிக்கப்பட்டன).

பார்ப்பனர் அல்லாதாருக்கு கல்வி கற்பிக்கப்பட வில்லைஅதற்கான எந்த முயற்சிகளையும் நமது அரசர்கள் எடுக்கவேயில்லை.

17ஆம் நூற்றாண்டில் மதுரை வந்த ராபர்ட் டி நொபிலி எழுதியுள்ளார் - மதுரையில் 10 ஆயிரம் மாணவர்கள் பயின்றனர்அவர்கள் அனைவரும் பார்ப்பனர்கள்சமஸ்கிருத பாடம் மட்டும் சொல்லிக் கொடுக்கப்பட்டது என்று எழுதியுள்ளார்.

களப்பிரர் இருட்டடிக்கப்பட்டதேன்?

பவுத்தம் சனாதனத்தை எதிர்த்தது  விழிப்புணர்வை ஏற்படுத்தியதுஅந்தப் பவுத்தம் இந்தியாவிலேயே இல்லாமல் ஆக்கப்பட்டுவிட்டதுமன்னர்களைக் கையில் போட்டுக் கொண்டு ஒழித்தது.

களப்பிரர்கள் ஆட்சியில் பார்ப்பனர்களுக்கு என்று அளிக்கப்பட்ட சலுகைகள்இனாம் நிலங்கள் எல்லாம் தடை செய்யப்பட்டனஅதனால்தான் களப் பிரர் ஆட்சியை இருண்ட காலம் என்பார்கள்பார்ப்பனர்கள் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் நடந்தவை அனைத்தையும் இருட்டடித்து விட்டனர்.

தந்தை பெரியார் 1879இல் பிறந்தார் - அதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1881ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கு (சென்சஸ்எடுக்கப்பட்டது. 99 விழுக்காடு  கல்வியற்றவர்கள் என்கிறது அந்தக் கணக்கெடுப்பு!

அப்படிப்பட்ட ஒரு நாட்டில் இன்றைய தினம் கல்விப் புரட்சி ஏற்பட்டுள்ளது என்றால் அதற்காக வித்திட்டவர்பாடுபட்டவர்போர்க் கொடி தூக்கியவர்களங்கள் கண்டவர் தந்தை பெரியார்.

மீண்டும் ஆரியம் தலைதூக்குகிறதுபெரியார் இல்லைஇல்லைகலைஞர் இல்லை என்ற தைரியத்தில் துள்ளுகிறார்கள்.

இதனை நாம் எதிர் கொள்ள வேண்டும்அதற்கு நமக்குக் கிடைத்த ஒரே ஆயுதம்போர் ஆயுதம் பெரியார் பெரியார்தான்!

சனாதன சக்திகள் இங்கு கால் ஊன்ற முடியாததற்குக் காரணம் பெரியாரே!

சனாதனம் இங்கே கால் ஊன்ற முடியாததற்குக் காரணம் பெரியார்தான்.  அந்தளவு இந்த மண்ணைப் பக்குவப்படுத்தி இருக்கிறார் தந்தை பெரியார்.

ஒரு போதும் சனாதன சக்திகளைத் தமிழ்நாட்டில் அனுமதிக்கப் போவதில்லை.

தேர்தலில் தக்கப்பாடம் கற்பிப்போம்!

தேர்தலில் தக்கப் பாடம் கற்பிப்போம்விடுதலை சிறுத்தைகளையும் சேர்த்து மூன்று குழல் துப்பாக்கி என்று எங்களை அடையாளப்படுத்தினார் தமிழர் தலைவர் ஆசிரியர்அதில் உறுதியாக இருப்போம் - நிற்போம்.

சனாதன மதவாத சக்திகளை பின்னங்கால் பிடரியில் இடிபட இந்தப் பக்கம் திரும்பிப் பார்க்க முடியாத அளவுக்கு  வடக்கே விரட்டியடிப்போம் - விரட்டியடிப் போம் என்று எழுச்சியுரை ஆற்றினார் எழுச்சித் தமிழர் திருமாவளவன்.

சென்னை புத்தகக் காட்சியில் நடைபெற்ற இயக்க நூல்கள் வெளியீட்டு விழா

 

சென்னை புத்தகக் காட்சியில் நடைபெற்ற இயக்க நூல்கள் வெளியீட்டு விழாவில் பங்கேற்றோர் (28.2.2021)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக