வியாழன், 7 அக்டோபர், 2021

தடுப்பூசி போடுவதிலும் வருண தருமமா?

 

மின்சாரம்

கரோனா தடுப்பூசி போடுவதில் கூட வருணா சிரமமா?

இந்தியாவில் இப்படி ஒரு குறிப் பிட்ட கூட்டத் துக்கு மட்டும் என தடுப் பூசி முகாம் நடத்தப்பட்டு உள்ளதாஇவர்களுக்கு மட்டும் ஏன் தனிச்சிறப்பு ஏற்பாடு?

ஒருக்கால் இந்தப் பூதேவர்களைத் தாக்குவது புது ஜாதி கரோனாவா?

தனக்கும் சமூகத்துக்கும் பயனுள்ள வகையில் உழைத்துக் கவுரவமாக வாழும் பல லட்சம் பேருக்கு இன்னும் தடுப்பூசி கிடைக்கவில்லைஆனால் இவாளுக்கு மட்டும் எதற்கு இந்த முன்னுரிமையாம்?

தமிழ்நாட்டில்கூட திருவரங்கம்திருவல்லிக் கேணி கோயில்களில் இப்படிகூட்டாக தடுப்பூசி போடப் பட்டதுஆனால்இந்துஅறநிலையத் துறை சார்பில் அனைத்து ஊழியர் களுக்கும் தடுப்பூசி போடப்பட்டதுஅங்கும் அனைவரோடு பார்ப்பனர் களும் நின்றனர்.

ஆனால்கர்நாடாகவிலோமுழுக்கமுழுக்க பூணூல் அணிந்தவர்களுக்கு மட்டுமே இந்த ஏற் பாடாம்!

மற்றவர்களுக்கு எல்லாம் பஞ்ச கவ்யம்கோமி யம்காய்த்ரி மந்திரம்ஆனால்தனக்கு என்று வரும்போது மட்டும் சிறப்பு தடுப்பூசி முகாமாம்!

ஆனா, “எல்லாம் ரூல்ஸ்படி நடக் கணும்‘ என்று சொல்வதில் மட்டும் குறைச்சல் இல்லை.

கோமியத்தைக் குடிக்க வேண்டி யதுதானே!  உடம்பு நிறைய மாட்டுச் சாணியை அப்பிக் கொண்டு அங்க பிரதட்சணம் செய்ய வேண்டியது தானே!

யாகம் நடத்தித் தேகத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியது தானேஅர்ச்சனைகள் நடத்தி அய் யன்மார்கள் ஆயுளை நீட்டித்துக் கொள்ள வேண்டி யதுதானே!

அதெல்லாம் செய்ய மாட்டார்கள் அதில் அவர்கள் ‘புத்திசாலிகள்!’ ஊருக்கு உபதேசித்து  விட்டு நாட்டு மக்களை ஒழிப்பதுதானே அவர்களது உள் நோக்கம்?

மற்றவர்களை அர்ச்சனை நடத்தச் சொல்லி அவர்களின் பணத்தைச் சுரண்டத்தானே இத்தி யாதி இத்தியாதி ஏற்பாடுகள் எல்லாம்?

தீ மிதிக்கும் தீட்சதர்களைப் பார்த் ததுண்டாஅலகு குத்திக் கொள்ளும் ஆராவமுத அய்யங்கார் களைக் கண்டதுண்டாகாவடி எடுக்கும் காயாம்பு சாஸ்திரிகளைக் கண்டது யார்சொல்லுங்கள்மொட்டை யடித்துக் கொள்ளும் பாப்பாத்தி யம்மை யாரைப் பார்த்தது யார்பகருங்கள்!

சேலம் அன்னதானபட்டி செருப் படி மாரியம்மன் கோயிலில் செருப் படிபடும் ஒரேஒரு சிண்டுப் பார்ப்பா னைப் பார்த்தேன் என்று சொன்ன வனைப் பார்த்தது யார்விரலை மடக்குங்கள் பார்க்கலாம் . உண்மை யைச் சொல்லப் போனால் உண்மை யான ‘மெட்டீரியலிஸ்ட்’ இந்தப் பார்ப் பனர்கள்தான்.

மோட்டர் பைக்கில் வந்து அல்லவா புரோகிதம் செய்கிறார்கள்காரில் பறந்து வந்தல்லவா காரியங் களைச் செய்து காசைக் கறக்கிறார்கள்.

ஒரு சேதி தெரியுமாபூரி ஜெகந் நாதர் கோயில் பகவான் ஜெகந்நாத னுக்கே ‘மாஸ்க்‘ போட்ட படம் வந் ததே - பத்திரிகையில் பார்க்கவில் லையா!

திருப்பதி நாமக் கடவுளுக்கே நாமம் சாத்திய ‘டாலர் சேஷாத்திரி களைமறந்து விட்டீர்களா?

இதுவரை தெரிந்துகொள்ளா விட்டால் கரு நாடகா செல்லுங்கள்கடவுளை நம்பாமல் கோவி ஷீல் டையும் கோவேக்சினையும் தேவைப் பட்டால் நாத்திக நாடான ருசியா தயாரித்த ‘ஸ்புட்னிக்‘ வேக்சினையும் சாங்கோ பாங்கமாகப் போட்டுக் கொள்வார்கள்.

ஏமாந்த நம் சோணகிரிகளுக்கு நமது அனுதாபங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக