வெள்ளி, 8 அக்டோபர், 2021

வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க “புலம்பெயர் தமிழர் நல வாரியம்”

 

 தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை,அக்.6- தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் இன்று (6.10.2021)  வெளியிட்டுள்ள அறிவிப்பில் வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க “புலம்பெயர் தமிழர் நல வாரியம்” என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு,

உலகளாவிய இனம் ஒன்று உண்டென்றால் அது தமிழினம் தான்தொன்மை மிக்க இந்த தமிழினம்பரவிய நாடுகளின் பட்டியல் பெரிதுதொல் பழமை நாகரிகப் பாரம்பரியம் உள்ள சில இனங்களில் தமிழினமும் ஒன்று!  அப்படி கடல் கடந்துநாடுகள் கடந்து வாழும் வெளிநாடுவாழ் தமிழினத்துக்கு நம்பிக்கை தரும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

தாய்த் தமிழ்நாட்டின் கடமை

உலகின் பெரும்பான்மை நாடுகளில் வாழும் இனமாக நம்முடைய தமிழினம்தான் இருக்கிறது. 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக் கையிலும், 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் தமிழர்கள் வாழ் கிறார்கள்வணிகம் செய்வதற்காகச் சென் றார்கள்.  வாழ்வதற்காகச் சென்றார்கள்வேலைகள் தேடிச் சென்றார்கள்.  கடற்கோள் களில் இருந்து தப்புவதற்காகச் சென்றார்கள்.  தப்பிச் செல்வதற்காகச் சென்றார்கள்.  புதிய இடங்களை அறிவதற்காகச் சென்றார்கள்.  இப்படிப் பலருக்கும் பல நோக்கங்கள் இருந்தி ருக்கும்.  இத்தகைய இடப்பெயர்வுகள் காலம் காலமாக நடந்து வருகின்றனஎங்கே தமிழர்கள் வாழ்ந்தாலும்அவர்களுக்கு தமிழ்நாடுதான் தாய்வீடுஅவர்கள் மீது அன்பு செலுத்துவது மட்டுமல்லஅரவணைப்பதும்பாதுகாப்பதும் தாய்த்தமிழ்நாட்டின் கடமையாகும்.  இப்படி பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும்உதவி களைச் செய்யவும் தமிழ்நாடு அரசு முன் வந்துள்ளது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் உளப்பூர்வமான மற்றும் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வெளிநாடுவாழ் தமிழர் நலச்சட்டம் 2011-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் நாள் கழக அரசால் இயற்றப்பட்டுள்ளது.

"புலம்பெயர் தமிழர் நலவாரியம்ஒன்றை உருவாக்கி அவர்களுக்கு நலத் திட்டங்களை செயல்படுத்துவோம் என்று அறிவித்தோம்.  ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக நம்மால் அமைக்க முடியவில்லைஅடுத்து வந்த ஆட்சியாளர்களும் இதனை அமைக்கவில்லைஇந்த நிலையில், “புலம்பெயர் தமிழர் நல வாரியம்’’ அமைக்கப்படும்அரசு மற்றும் புலம் பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் பதிமூன்று பேரைக் கொண்டு இந்த வாரியம் அமைக்கப் படும்.  கோடி ரூபாய், “புலம்பெயர் தமிழர் நலநிதி’’ என மாநில அரசின் முன்பணத்தைக் கொண்டு உருவாக்கப்படும்.

மூலதனச் செலவினமாக 1 கோடியே 40 இலட்சம் ரூபாய் மற்றும் தொடர் செலவினமாகநலத்திட்டங்கள் மற்றும் நிர்வாக செலவினங் களுக்காக 3 கோடி ரூபாய் ஆண்டுதோறும் ஒதுக்கப்படும்.

புலம்பெயர் தமிழர் மேம்பாட்டுக்கு உரிய திட்டங்கள் 

·             புலம்பெயர் தமிழர் குறித்த தரவு தளம் (Database) ஏற்படுத்தப்படும்இவ்வாரியத்தில் பதிவு செய்பவர்களுக்கு விபத்துஆயுள் காப்பீடு திட்டம் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டம்அடையாள அட்டையுடன் வழங்கப் படும்.

·             வெளிநாட்டிற்குச் செல்லும் குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த  தமிழர்கள் பணியின்போது இறக்க நேரிட்டால் அவர்கள் குடும்பத்தில் கல்வி பயிலும் குழந்தைகளுக்குகல்வி உதவித் தொகைதிருமண உதவித் தொகை வழங்கப்படும்.

·             கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காகத் தமிழர்கள் புலம்பெயரும்போதுபயண புத் தாக்கப் பயிற்சி அளிக்கப்படுகின்றதுஆனால் இப்பயிற்சியானது சென்னை மட்டு மின்றிஇராமநாதபுரம்புதுக்கோட்டைகன்னியாகுமரிதஞ்சாவூர்பெரம்பலூர்சிவகங்கை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் நடத்தப்படும்.

·             வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ள தமிழர்களுக்கு ஆலோசனை பெற வசதியாக கட்டணமில்லா தொலைபேசி வசதி மற்றும் வலைதளம்கைப்பேசி செயலி (Mobile application) அமைத்துத் தரப்படும்.

·             வெளிநாடுகளில் புலம்பெயர்ந்துள்ள தமிழர்களுக்கு என தனியாக சட்ட உதவி மய்யம் அமைக்கப்படும்.

·             கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக சுமார் ஏழு இலட்சம் தமிழர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்இவர்களில் பலர் வேலையிழந்தும் திரும்பியுள்ளனர்இவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில்தமிழ்நாடு திரும்பியவர் களுக்கு குறு தொழில்கள் செய்திடஅதிக பட்சமாக இரண்டரை இலட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய கடன் வசதி செய்து தரப்படும்இதற்கென ஆறு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

·             வெளிநாடுவாழ் தமிழர்களில் பெரும் பாலானோர் தங்களது சேமிப்பினை தாய்நாட்டில் பாதுகாப்பான முதலீடு செய்ய ஆர்வத்துடன் உள்ளனர்இதற்காகப் புரிந்துணர்வு ஒப் பந்தங்கள் ஏற்படுத்திஇவர்களது முதலீடுகளை அரசு மற்றும் தொழில் நிறுவனங்களில் பாதுகாப்பான முதலீடு செய்ய ஏதுவான சூழல் உருவாக்கப்படும்.

·             புலம்பெயர்ந்த தமிழர்கள்தாம் பிறந்து வளர்ந்த சொந்த ஊரில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்திடவும்ஊர்மக்களின் கல்வி மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவை களைப் பூர்த்தி செய்திடவும் "எனது கிராமம்என்கின்ற திட்டம் துவங்கப்படும்.  இதில் பள்ளிமருத்துவமனைநூலகம் போன்ற கட்டடங் களைக் கட்டித் தரவும்சீரமைத்திடவும் புலம் பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

· இதற்கான அனைத்து ஒருங்கிணைப்பும் அரசின் தரப்பில் எளிய முறையில் செய்து தரப்படும்.

குழந்தைகளுக்குத் தமிழ்க் கல்வி

கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்று அங்கே நிரந்தரமாக குடியுரிமை பெற்றுள்ள தமிழர்களின் வாரிசு களுக்கு தமிழ் கற்கும் ஆர்வத்தை உருவாக் கிடவும்தமிழ் மொழியினை கற்றிட ஏதுவாகவும்தமிழ் இணைய கல்விக் கழகம் மூலமாக குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கப்படும்அதுமட்டுமின்றிஅங்குள்ள கல்வி நிறுவனங்களில் தமிழ் பயிற்றுவிப்பதற்காக ஊக்கத்தொகை மற்றும் தமிழ் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படும்.

·             புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் அந்தந்த நாடுகளில் உருவாக்கியுள்ள நலச் சங்கங்கள் ஒருங்கிணைக்கப்படும்.  இச்சங்கங் களின் மூலமாக நம்முடைய கலைஇலக்கியம் மற்றும் பண்பாடு பரிமாற்றங்கள் நடைபெறும்இதற்காக 4 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

·             பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர் களை ஒருங்கிணைக்கும் விதமாகவும்அவர் களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும்வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ம் நாள் "புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாளாகக்’’ கொண்டாடப்படும்.

வெளிநாட்டில் உள்ள தமிழர் நலனைப் பேணிடபுலம்பெயர் தமிழர் நல வாரியம் மற்றும் புலம்பெயர் தமிழர் நலநிதிக்காக 6 கோடியே 40 இலட்சம் ரூபாய்அவர்களுக்கான நலத்திட்டங்களுக்காக 8 கோடியே 10 இலட்சம் ரூபாய் மற்றும் வெளிநாட்டில் தமிழ்க் கல்விகலைபண்பாடு மற்றும் கருத்துப் பரிமாற்றத் திற்காக 5 கோடியே 50 இலட்சம் ரூபாய் என மொத்தம் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

"தொண்டு செய்வாய் துறை தோறும் துறை தோறும் துடித்தெழுந்தேஎன்ற வாசகத்தை நெஞ்சில் நிலைநிறுத்திமுத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசு என்றென்றைக்கும்தமிழர்களின் வாழ் வில் ஒளியேற்றும் விளக்காகவும்அவர்களின் உற்றதோழனாகவும் விளங்கும் என்பதில் அய்யமில்லை.

இவ்வாறு தமிழ்நாடு அரசின் செய்திகுறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக