வெள்ளி, 1 அக்டோபர், 2021

கேரளா: கண்ணூர் பல்கலைக்கழக பாடத் திட்டத்தில் தந்தை பெரியார் கருத்துருக்கள் சேர்ப்பு

 

திருவனந்தபுரம்அக்.1- கேரள பல்கலைக்கழகப் பாடத் திட்டத்தில் பெரியாரின் கருத்துருக்கள் சேர்க்கப்பட்டு உள்ளனகண்ணூர் பல்கலைக்கழகத்தில் பாடத் திட்டங்களை கல்வியியல் குழு மாற்றியமைத்துள்ளது.  இதன்படி முதுகலை நிர்வாகவியல் மற்றும் அரசியல் படிப்பில் இடம்பெற்றிருந்த சங்பரிவார்தீனதயாள் உபாத்யாயாபல்ராஜ் மதோக் உள்ளிட்டோர் தொடர் பான பகுதிகள் நீக்கப்பட்டுள்ளனஅதே நேரத்தில்நவீன அரசியல் சிந்தனையில் தேசமும் தேசியமும் என்ற தலைப்பில்சாவர்க்கர்கோல்வாக்கர்முகமது அலி ஜின்னாமவுலான அபுல் கலாம் ஆசாத் உள்ளிட்டோரின் கருத்துருக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

திராவிட தேசியம் என்ற பெயரிலான பாடத்தில் தந்தை பெரியாரின் கருத்துருக்களும் இடம் பெற்றுள் ளன.எம்.எஸ்நம்பூதிரிபாட்ராம் மனோகர் லோஹியா ஆகியோரைக் குறித்த கருத்துருக்களும் பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக