செவ்வாய், 12 அக்டோபர், 2021

அரசு அனுமதி பெற்று பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றிட உயர்நீதிமன்ற நீதிபதி சொன்னது சரியா?

 

நடைபாதைக் கோவில்களை அகற்றிட உச்சநீதிமன்றம் கூறியதே - 5 ஆண்டுகள் ஓடியும் செயல்படுத்தாதது ஏன்?

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்புமீது ‘‘மறுசீராய்வு'' மனு தாக்கல் செய்யப்படவேண்டும்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி - அரசு அனுமதி பெற்று பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலை கள் அகற்றப்படவேண்டும் என்று கூறிய தீர்ப்புக் குறித்து  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்அவரது அறிக்கை வருமாறு:

நம் நாட்டின் ஜனநாயகத்தில் - அரசமைப்புச் சட்டப் படிநீதிமன்றங்கள்தான் மக்களின் கடைசி நம்பிக்கை.

சட்டத்தின்படி ஏற்கப்படக் கூடிய வழக்குதானா?

மக்களின் உரிமைகளையும்அரசமைப்புச் சட்டத் தின் விதிகளையும் முழுமையாக காப்பாற்றிட அவையே பாதுகாப்பு அரணாகக் கடமையாற்றிடும் வகையில் நடந்துமக்களின் அதிகாரமே இறுதியானது என்பதை நிலை நிறுத்திநியாயத் தராசின் முள் எந்தப் பக்கமும் சாயாது தேர்ந்த நீதி வழங்கி வரும் நிலையில்சிற்சில நேரங்கள்சில மாண்பமை உயர்நீதிமன்ற நீதிபதிகள்சட்டத்தின்படி ஒரு வழக்கு ஏற்கக் கூடியதாதள்ளுபடி செய்யப்படவேண்டியதா என்பதை அரசமைப்புச் சட்டப் பிரிவுகளுக்கு ஏற்ப தீர்ப்புகளை அமைப்பதைத் தாண்டிதங்களது சொந்தக் கருத்துகளை பக்கம் பக்க மாக எழுதுவதுநீதியை எங்கோ அழைத்துச் செல்வதாக அமைந்துவிடுகிறது.

எடுத்துக்காட்டாகசென்னை உயர்நீதிமன்றத்தில் வந்த டாக்டர் அம்பேத்கர் சிலை அமைத்தது பற்றிய ஒரு வழக்கு ஆகும்.

இந்த வழக்கின் (W.P.23140 of 2014 and W.P. 1 and 2 of 2014தீர்ப்பை மாண்பமை தனி நீதிபதி அவர்கள் 7.10.2021 அன்று வழங்கியுள்ளார்கள்.

25 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு அது;

சுட்டிக்காட்டுவது நமது கடமை!

இதில் ‘ரிட்மனுதாரர் ஒரு வழக்குரைஞர்இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 226-இன்படிசெர்ஷியோராரி (Writ of Certiorariரிட்டின்கீழ் போடப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட தலைவரின் சிலை வைப்பதுபற்றி சரிதவறு சட்டப்படி என்று தீர்ப்பு வழங்குவதைத் தாண்டிதமிழ்நாட்டில் உள்ள தலை வர்களின் சிலைகள்பற்றியது - அந்த சிலைகளை அப் புறப்படுத்தி 6 மாதங்களுக்குள் அவற்றை ஒரு ‘சிலைப் பூங்காஆகவும்பொதுவிடங்களில் தற்போதுள்ளவற்றை அகற்றி வைக்கவேண்டும் என்றும் ஒரு பெரிய ‘மலைப் பிரசங்கமேசெய்வதுபோன்று பல விவாதங்களை ஏற்படுத்தக்கூடிய கருத்துகளை எழுதியிருப்பது சட்டக் கருத்துப்படியோ (Question of Lawபல தகவல் - உண்மைகள்படியோ (Question of  Factsசரியானது என்று கூறத்தக்க தீர்ப்பாக இல்லாமல் உள்ளது என்று எம்மைப்போன்ற பொதுவாழ்வில் உள்ள தொண்டர்கள் சுட்டிக்காட்டுவது எமது கசப்பான கடமையாகும்!

மாண்பமை நீதிபதி அவர்கள் எழுதியுள்ள இந்தத் தீர்ப்புக்கு நாம் எந்த உள்நோக்கமும் கற்பிக்க விரும்ப வில்லைஆனால்அது சரியான தீர்ப்பாக சட்டப்படியும் சரிசரியான உண்மைகளின்படியும் ஏற்கத்தக்கதாக இல்லை என்பதை விளக்கியே ஆக வேண்டியுள்ளது.

நீதிபதி அவர்களின் ‘மலைப்பிரசங்கம்!'

தீர்ப்பைப்பற்றி முதலில் சட்டப் பிரச்சினையை ஆராயலாம்.

1. இவ்வழக்கு  certiorari ரிட்  ஆக பதிவு செய்துள்ள வழக்குஇதில் நேரடியாக பாதிக்கப்பட்டவருக்கு மட்டுமே நியாயம் கேட்க உரிமை உண்டுகிராமத்தில் உள்ள ஒரு வழக்குரைஞர் வழக்குப் போட்டுள்ளார்.

இவர் அந்த ஊர் பஞ்சாயத்தில் பொறுப்பில் உள்ள வராஇல்லையா என்பதுகூட அதில் தெளிவுபடுத்தப் படாத நிலையில்இந்த ‘ரிட்மனுவின் Maintainability ஏற்கத்தக்கதா என்பதே முதல் கேள்விஎடுத்த எடுப்பி லேயே தள்ளுபடி செய்யப்பட்டிருக்க வேண்டிய சட்டத் தேவை இதில் உள்ளடங்கியுள்ளதால் - சரிவிசார ணைக்கு வந்துவிட்டதுஇனி தீர்ப்பு வழங்கியாகவேண் டும் என்ற நிலையில்குறிப்பிட்ட சிலை அமைத்தது சரி அல்லது தவறு என்பதோடு அமையவேண்டிய ஒரு தீர்ப்பாகும்.

பாரா 17 இல்,‘‘Let us Consider the present situation across the State of Tamil Nadu....!''

 ‘‘இந்த நிலையில்தற்போது தமிழ்நாட்டில் உள்ள நிலவரம்பற்றி நாம் ஆராய முனையவேண்டும்'' என்று தொடங்கிமேலும்  (17 பாராக்களைத் தொடர்ந்து 18 முதல் 34 பாரா வரைசிலைகள் வைப்பதுபற்றிய ஒரு ‘‘மலைப்பிரசங்கம்'' நிகழ்த்தியிருப்பது எவ்வகையில் நியாயப்படுத்தக் கூடியது என்று புரியவில்லை!

சட்டக் கண்ணோட்டத்தில் இதுபோன்ற கருத்துகளை இது ஒரு பொதுநல மனுவாக (Public Interest Litigation - PILஇருந்தால்தானே சட்டப்படி கூற முடியும்?

அதற்கு இரண்டு நீதிபதிகள் அமர்வு (Two Judges Benchஆக அது இருக்கவேண்டும்.

உச்சநீதிமன்றத்திற்குள்ள அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு உண்டா?

தனி நீதிபதி இப்படி எழுதியிருப்பதற்கு உச்சநீதி மன்றத்திற்கு உள்ள இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 142 (Article)  அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு இல்லாத போதுஇப்படி எழுதிடப்படும் தீர்ப்பு எப்படி சட்டப்படி சரியானதாகும்? (ஏனெனில்உச்சநீதிமன்றத் தீர்ப்புபோல இதைக் கருதி தனக்கில்லாத அதிகாரத்தின் அடிப்படை யில்இப்படி தேவையற்ற விவாதங்கள் - அதிலும் அரசியல் ரீதியான தீர்ப்புகள் எப்படி சரியானதாகும்?)

அடுத்துQuestion of  Facts  என்ற உண்மைகள் அடிப்படையில் ஆராய்ந்தாலும்இத்தீர்ப்பின் ‘மலைப் பிரசங்க'ப் பகுதியில் உள்ள பல கருத்துகள் சரியாஎன்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

அரசு அனுமதிபெற்று வைக்கப்பட்ட சிலைகளை அகற்ற முடியுமா?

பொது இடங்களில் தமிழ்நாட்டில் பல நகரங்களில் நிறுவப்பட்டுள்ள பல முக்கிய தலைவர்களின் சிலைகள் வைப்பதற்கு அரசிடம் சிலைக்குழுவினர் அனுமதி கேட்டுவாங்கி - அந்த அனுமதியும்நெடுஞ்சாலைத் துறைநகராட்சிஊராட்சித் துறைஅதன்பிறகு காவல் துறைபோக்குவரத்துத் துறை (Traffic Cell), வருவாய்த் துறை என்று இத்தனைத் துறைகளின் பரிந்துரைகளுக்குப் பிறகேபராமரிப்புபற்றியும்மற்ற சில நிபந்தனைகளை சிலைக் குழுவினருக்குப் போட்டும்அவர்களிடமிருந்து உரிய பணம் - தொகைக் கட்டுமாறு கேட்டுகட்டிய பின் ரசீது கொடுத்தும்தனி அரசு ஆணை (G.O.கொடுத்த பிறகே தலைவர்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

ஒன்றிரண்டு சிலைகள் அனுமதியில்லாமல் வைக்கப் பட்டால்அதை காவல்துறைவருவாய்த் துறையினர் அகற்றிவிடுவதும்தான் நடைமுறையில் நாம் காண்பதாகும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு மதிக்கப்பட்டதா?

‘‘Unauthorised Structures''  என்பதில் ஒரு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள  தமிழ்நாட்டில் இருக்கின்ற நடைபாதைக் கோயில்கள்பொது இடங்களில் அனுமதியின்றிக் கட்டப் பட்டுள்ள அனைத்து மத வழிபாட்டுக் கோயில்களையும்சின்னங்களையும் உடனடியாக அப்புறப்படுத்தவேண் டும் என்று உச்சநீதிமன்றம் பலமுறை கூறியதுண்டு (28.4.2016). தமிழ்நாட்டில் மட்டும் 77,450 கோவில்கள் அகற்றப்படவேண்டியவை என்று இரு நீதிபதிகள் கூறினார்களே - அகற்றாவிடின் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் செயலாளர்கள் நீதிமன்றம் வந்து நேரில் விளக்கவேண்டும் என்று கூறினார்களே, 5 ஆண்டுகள் ஓடியும்இதன்மீது நடவடிக்கை இல்லையேஏன்இது நீதிமன்ற அவமதிப்பின்கீழ் வராதா?

அதுமட்டுமல்லதலைவர்களின் சிலைகளால்தான் அரசியல் கலவரங்கள் ஏற்படுகின்றனஎனவேஎடுத்து வேறு பக்கத்தில் வைக்கவேண்டும் என்று கூறுவது நடைமுறை சாத்தியமாஅப்படியே சாத்தியமானாலும் அங்கேயே கலவரம் வர வாய்ப்பு இருக்காதாசட்டம் ஒழுங்கு பிரச்சினை வெடிக்காதா?

கோவில் திருவிழாக்களை மய்யப்படுத்திக் கலவரங்கள் நடக்கவில்லையா?

போக்குவரத்துத் துறை ஆய்வு செய்து - ‘தடையில்லா சான்றுவழங்கிய பிறகேசிலைகள் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளன பல ஆண்டுகளாகஅதை ஏன் அப்புறப்படுத்தவேண்டும்சட்டப்படி சரியானதாகுமா அந்த வாதம்?

சில ஊர்களில் சிலைகள் வைக்கப்பட்ட இடங்களை வருவாய்த் துறை Alienation என்ற மதிப்பீட்டுத் தொகை பெற்றேசிலைக் குழுவினருக்கு உரிமையாக்கியுள்ளது.

பொது இடங்களைக்கூடசிலைப் பகுதியை மட்டும் Alienation என்ற வருவாய்த் துறை மூலம் அனுமதிஉரிமை பெற்றே சிலைகள் அமைக்கப்பட்டிருப்பதை மாற்றச் சொல்லுவது சட்ட விரோதம் அல்லவாஅரசு ஆணைகள்படியே வைக்கப்பட்டுள்ளன.

திருவிழாக்கள் நடைபெறுவதையொட்டி பல ஊர் களில் கலவரங்கள் ஏற்பட்டுகோவிலை மூன்று அல்லது ஆறு மாதங்கள்கூட பூட்டுகிறார்கள்தேர் இழுப்பதிலும் பிரச்சினை உள்ள சில ஊர்களில்இதற்காக விழாவைத் தடுப்பது என்று ஆணையிட முடியுமா?

இப்படி எத்தனையோ கேள்விகள் எழக்கூடும்!

மறுசீராய்வு மனு போடுவது அவசியம்!

எனவேஇத்தகைய சட்டத்திற்கும் அப்பாற்பட்ட தீர்ப்புகளை மாண்பமை நீதிபதிகள் தவிர்த்தால் அவர் களுக்கும் பெருமைசட்டத்தின்படி நடந்த சாதனையாக வும் மிளிரும் என்பதால்இதனை நாம் தவிர்க்க இயலாத பொதுநல உணர்வில் சுட்டிக்காட்டுகிறோம்.

இத்தீர்ப்புக்கு மறு சீராய்வு மனு அல்லது ரிவிஷன் போடுவது அவசியமாகும்!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

11.10.2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக