வெள்ளி, 8 அக்டோபர், 2021

பெரியாருடைய பார்வை உலகப் பார்வை - மானுடப் பார்வை! தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் நிறைவுரை


சென்னைஅக்.4  மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த பொழுது இட ஒதுக்கீடுப் போராட்டங்களை ஆதரித்த துண்டாஅப்படி இருக்கும்பொழுது அவர் பிறந்த நாள் சமூகநீதி நாள் ஆனது எப்படிபெரியாருடைய பார்வை உலகப் பார்வை - மானுடப் பார்வை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கடந்த 17.9.2021  அன்று காலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 143 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில்திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் நிறைவுரை

அவரது நிறைவுரை வருமாறு:

மிகுந்த எழுச்சியோடு நடைபெறக்கூடியசிறப்புமிகுந்தவரலாற்றுப் பெருமைமிகுந்த அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுடைய 143 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா விற்குப் பொறுப்பேற்றுசிறப்பாக நடந்து கொண்டிருப்பதற்கு முழுக் காரணமாக அமைந்திருக்கக்கூடிய கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

வரவேற்புரையாற்றிய கழகத் துணைப் பொதுச்செய லாளர் அருமைத் தோழர் பொறியாளர் இன்பக்கனி அவர்களே,

இந்நிகழ்வில் சிறப்பான வகையில், ‘கற்போம் பெரியா ரியம்என்ற புத்தகத்தை அருமையாக ஆய்வு செய்துவெளியிட்டவரும்நம்முடைய குடும்பத்தில் ஒருவராக என்றைக்கும் திகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய அறிவியக் கத்தின் முன்னோடியும்தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் மதியுரைஞராக இருக்கக்கூடிய அருமைத் தோழர் மானமிகு பேராசிரியர் முனைவர் சுப.வீரபாண்டியன் அவர்களே,

இந்நிகழ்வில்தந்தை பெரியார் 143  ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலரை வெளியிட்டுஒரு சிறப்பான எதார்த்தமான உரையை இங்கு ஆற்றி அமர்ந்துள்ளநாடாளுமன்றம் பெருமைப்படும் வகையில்ஒரு சிறந்த நாடாளுமன்றவாதியாகவும்மனித உரிமைகளுக்கு ஆபத்து ஏற்படக்கூடிய காலகட்டத்தில்அந்த ஆபத்துகள் எங்கு நேர்ந்தாலும் துணிச்சலாக எதிர்கொள்ளக் கூடிய வராகவும் இருக்கக்கூடிய அருமைத் தோழர் ஜோதிமணி எம்.பி., அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொண்டு ‘கற்போம் பெரியாரியம்என்ற நூலின் ஆய்வுகளை சிறப்பாகச் செய்து உரையாற்றிய உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொறுப்பாளர்களில் ஒருவருமான பேராசிரியர் சுலோசனா அம்மையார் அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற அருமை இயக்கப் பெரியோர்களேபொறுப்பாளர்களேகழகப் பொருளாளர் அவர்களேகழகப் பொதுச்செயலாளர்களேதோழர்களேதாய்மார்களேகழக உறவுகளேபெரியார் பற்றாளர்களேஇந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிவிட்டு விடைபெற்றுச் சென்றிருக்கக்கூடிய மாண்புமிகு அமைச்சர் உள்பட அனைத்து சான்றோர் பெருமக்களேஉங்கள் எல்லோருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் விழா - இந்த ஆண்டினுடைய சிறப்பு

இன்றைக்குத் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா என்பது - திராவிடர்த் திருவிழாவாக அருமையாக நம்மால் இங்கு மட்டுமல்லஉலகம் முழுவதும் கொண்டாடப்படக் கூடிய விழாவாக அமைந்திருப்பது இந்த ஆண்டினுடைய சிறப்பாகும்.

ஒவ்வொரு ஆண்டும்எவ்வளவு எதிர்ப்பு இருக்கிறதோஅவ்வளவு பெருமையும் இருக்கிறதுஅதுதான் அவரு டைய தனிச் சிறப்பு.

ஒரு தத்துவஞானிபோல தந்தை பெரியார்சிறப்பான ஒரு கருத்தைச் சொன்னார்.

சுயமரியாதை இயக்கம் என்பதைஎப்படி அவர் தனியாக உருவாக்கியதைப்பற்றி பேராசிரியர் சுப.வீஅவர்கள் அழகாக  எடுத்துச் சொன்னார்களோஅதுபோலமனிதநேயத்தைப்பற்றிச் சொல்கின்றபொழுதுமிக எளிமையாகச் சொன்னார்.

பெரியாருடைய பார்வை - உலகப் பார்வை - மானுடப் பார்வை

அவருடைய பார்வை உலகப் பார்வை - மானுடப் பார்வை - அதுதான் இன்றைக்கு உறுதிமொழியில் எடுக்கப்பட்டதும்கூட.

மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று இரண்டே சொல்லில் சொன்னார்.

திராவிடராதமிழராஜப்பான்காரராஜெர் மன்காரராஎன்றெல்லாம் ஏன் ஆராய்ச்சிகளை செய்யவேண்டும்?

மனிதன் என்று யார் தன்னை நினைக்கிறானோஅவனுக்கு என்ன இலக்கணம்?

மானம்அறிவு என்பதுதான் மிக முக்கியம்.

இந்த மானத்தையும் பழிவாங்கினார்கள்பறிமுதல் செய்தார்கள்அறிவையும் தடுத்தார்கள்இதுதான் சமூக அநீதி.

அந்த சமூக அநீதியிலிருந்து வெளியே வருவதற் காகப் போராடினார்கள் அல்லவா - போராடி வெற்றி பெற்றார் அல்லவாஅதுதான் சமூகநீதி.

‘‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’’

அதற்காகத்தான் பெரியாருடைய பிறந்த நாளை - ‘‘சமூகநீதி நாள்'' என்று பொருத்தமான அளவிலே  அறிவித்திருக்கிறார் நம்முடைய முதலமைச்சர். ‘‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்'' என்று நம்மால் நன்றியுணர்வோடு பாராட் டப்படக் கூடிய தளபதி மு..ஸ்டாலின் அவர்கள் இன் றைக்கு வரலாறு படைத்திருக்கிறார்கள்.

இதைக் கேட்டவுடன்யாரோ சிலருக்கு எரிச்சல்அவர்களால் தாங்க முடியவில்லைசமூகநீதி நாள் என்று சொல்லாமல்வேறு எதைச் சொல்லுவது?

சமூகநீதி என்று வரும்பொழுதுநீதி கேட்கிறோம் என்று வந்தாலேஅதனுடைய இன்னொரு பகுதி என்ன?

அதனுடைய இன்னொரு பகுதிஅநீதி நடந்திருக்கிறது என்று அர்த்தம்அநீதி நடந்திருக்கிறது.

நம்முடைய அரசமைப்புச் சட்டத்தில் ஒரு சிறப்பான பகுதி உண்டு.

அரசுகள் எப்படி இயங்கவேண்டும் என்பதற்கு வழி காட்டு நெறிமுறை - அதற்குப் பெயர்  Directive Principle of the State Policy என்று பெயர்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 46 ஆவது பகுதி!

அதில் மிக முக்கியமாக இருக்கக்கூடிய ஒரு பகுதியில், 46 ஆவது பகுதியில்,

The State shall promote with special care the educational and economic interests of the weaker sections of the people, and, in particular, of the Scheduled Castes and the Scheduled Tribes, and shall protect them from social injustice and all forms of exploitation.

இந்த அரசமைப்புச் சட்டத்தில், social justice என்பதும் இடம் பெற்றிருக்கிறது.  social justice என்று சொல்லக்கூடிய சமூகநீதியை ஏன் தேடுகிறோம்ஏன் தேவைப்படுகிறதுஎன்று சொல்லுகின்ற நேரத்தில்அதில் விளக்கம் இதிலேயே தெளிவாக இருக்கிறது.

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் போராடிசில செய்திகளை உள்ளே போட்டார்அப்படி அவர் போராடி உள்ளே போட்ட நேரத்தில்அந்த அரசமைப்புச் சட்டத்தில்தான் நண்பர்களேஇது அறிவார்ந்த அரங்கம் - உலகம் முழுவதும் இருக்கக்கூடிய நண்பர்கள் இதைக் கேட்டுக்கொண்டும்பார்த்துக் கொண்டும் இருக்கிறார்கள்அப்படிப்பட்ட சூழ்நிலையில்தெளிவுபடுத்தவேண்டிய செய்தி என்னவென்றால்அரசமைப்புச் சட்டத்தில் இன் னொரு பகுதியில்அரசாங்கங்களுடைய கடமை என்னஎன்று வருகின்ற நேரத்தில்,

பலகீனமான மக்களாக இருக்கக்கூடியவர்களைப் பாதுகாக்கவேண்டும்எப்படி பாதுகாக்கவேண்டும்ஏன் பாதுகாக்கவேண்டும்என்று சொன்னால் நண்பர்களேமிக முக்கியமான குறிப்பைச் சுட்டிக்காட்டுகின்றார்.

promote education and economic interests for members of Scheduled Caste, Scheduled Tribe and other weaker sections.

The State shall promote with special care the educational and economic interests of the weaker sections of the people, and, in particular, of the Scheduled Castes and the Scheduled Tribes, and shall protect them from social injustice and all forms of exploitation.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர்எஸ்.சி., எஸ்.டி., .பி.சிமற்றும் சிறுபான்மையினர் எல்லோரும் அதில் அடக்கம்.

தனியே சொல்லவேண்டுமானால்இதில் மகளிர் மிக முக்கியமாகப் பங்களிக்கக் கூடியவர்கள்.

வருணாசிரம தருமத்தில்பிராமணசத்திரியவைசியசூத்திர என்று வரும்பொழுதுஇவர்கள் எல்லாம் வருணஸ் தர்கள்.

பஞ்சமர் - அவர்ணஸ்தர்கள்.

இவர்கள் எல்லாவற்றிற்கும் கீழேபடிக்கட்டு ஜாதிமுறை என்று அம்பேத்கர் சொன்னார் பாருங்கள்அதில் கடைசியாக யார் இருக்கிறார்கள் என்றால்அடித்தளத்திலும்அடியில் யார் இருக்கிறார்கள் என்றால்பெண்கள் - அத்தனை ஜாதிப் பெண்கள்.

பெண்களைப் பொறுத்தவரையில்மேல்ஜாதிகீழ்ஜாதி என்கிற பிரச்சினைகளே கிடையாது.

அரசமைப்புச் சட்டத்தின் 46 ஆவது பிரிவின் தமிழாக்கம்:

‘‘பட்டியலில் கண்ட ஜாதியினர்பட்டியலில் கண்ட பழங்குடியினர்பிற நலிந்த பிரிவினர் ஆகியோரின் கல்விபொருளியல் நலன்களை வளர்த்தல்மக்களில் நலிந்த பிரிவினர்குறிப்பாகபட்டியலில் கண்ட ஜாதி யினர்பட்டியலில் கண்ட பழங்குடியினர் ஆகியோரின் கல்விபொருளியல் நலன்களை அரசு தனிப் பொறுப் புணர்வுடன் வளர்த்தல் வேண்டும்மேலும்சமுதாய அநீதியிலிருந்தும் அனைத்து வகைப்பட்ட சுரண்டல் களிலிருந்தும் அவர்களைப் பாதுகாத்தலும் வேண்டும்.''

வாழ்நாள் பணியாக செய்த தலைவர் தந்தை பெரியார்

இதை தன்னுடைய வாழ்நாள் பணியாக செய்த தலை வர் தந்தை பெரியாரைத் தவிரஇந்தியாவில்உலகத்தில் வேறு யாராவது இருக்கிறார்களா?

சுயமரியாதை இயக்கம் என்று தந்தை பெரியார் அவர் கள் பெயர் வைத்ததைப்பற்றி சகோதரர் சுப.வீஅவர்கள் அந்த நூலிலிருந்து எடுத்துக்காட்டினார்?

பிறவி பேதம் கூடாது என்று நாம் இன்றைக்கு உறுதி எடுத்து இருக்கிறோம்பிறவி பேதம் என்று சொல்லும் பொழுதுஒரே சொல்லில் தந்தை பெரியார் அவர்கள் மிக எளிதாக எடுத்துச் சொல்வார்.

பிறவி பேதம் என்றால்,

உயர்ந்த ஜாதி - தாழ்ந்த ஜாதி,

தொடக்கூடியவன் - தொடக்கூடாதவன்,

படிக்கக் கூடியவன் - படிக்கக் கூடாதவன் என்பவைபற்றி மட்டுமே வருணாசிரம தர்மம் சொல்லவில்லை.

அதற்கடுத்துஅய்யாதான் சொன்னார்பிறவி பேதம் என்று சொல்லும்பொழுதுஆண் உயர்ந்தவன் - பெண் தாழ்ந்தவள் என்று சொல்லுகின்ற ஆதிக்க மனப்பான்மை - ஒருவர் எஜமானன் - இன்னொருவர் அடிமை என்கிற பிறவி பேதம்தான்.

எனவேதான்எனக்கு பெண்ணுரிமை மிக முக்கியம்சமூகநீதி என்பதற்கு இரண்டு வாய்ப்புகள் உண்டுஇரண்டு விரிவான பகுதிகளை இணைத்தார்கள்.

எனவேபெரியாருடைய அந்த நிலை - யாருக்கோ புரியவில்லை - அவருடைய பிறந்த நாளை - சமூகநீதி நாளாக ஏன் அறிவித்தார்கள் என்று அங்கலாய்க்கிறார்கள்பொதுவாகஅந்தப் பத்திரிகைகளை நாங்கள் பார்ப்பதை தவிர்த்து வருகிறோம்.

திருக்குறளைத் தடை செய்யவேண்டும் என்று சொன்ன மிகப்பெரிய புத்திசாலிகள்!

ஏனென்றால்அவை அதிகமாக மக்களுக்குக் கிடைப்ப தில்லைமக்கள் பத்திரிகைகளை மட்டுமே நாங்கள் பார்க்கி றோம்ஏனென்றால்திருக்குறளைத் தடை செய்யவேண்டும் என்று சொன்ன மிகப்பெரிய புத்திசாலிகள் எல்லாம் அங்கே இருக்கிறார்கள்.

நம்முடைய சமுதாயத்தில்நாம் எல்லோருக்கும் இடம் கொடுக்கிறோம்சகிப்புத்தன்மை நமக்கு அதிகம்ஏனென் றால்நாமெல்லாம் பகுத்தறிவுவாதிகள்பல கருத்துகள் இருந்துவிட்டுப் போகட்டுமே,  அவர்களையும் மக்கள் அடையாளம் கண்டு புரிந்துகொள்ளட்டுமே என்பதற்காக.

அந்த வகையில் பார்க்கும்பொழுது நண்பர்களேநீங்கள் நினைத்துப் பாருங்கள் - பெரியார் அவர்களின் பிறந்த நாளை - சமூகநீதி நாளாக அறிவித்ததில் என்ன தவறு?

இன்றைக்கு உறுதி மொழி எடுத்துக் கொண்டதில்கூட யாருக்கும் சங்கடம் இல்லை.

சமூகநீதி என்றால் - ‘அனைவருக்கும் அனைத்தும்‘’  என்பதுதான்!

1938 இல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கும் பொழுது தந்தை பெரியார் அவர்கள் இரண்டே வரியில் எழுதினார்சமூகநீதி என்றால் என்னஎன்று கேட்டால்இரண்டே சொல்லில் சொன்னார். ‘‘அனை வருக்கும் அனைத்தும்'' என்றுதான்.

இது புரியவில்லை என்றால்என்ன செய்வது?

அனைவருக்கும் அனைத்தும் என்று யாராவது சொல்லியிருக்கிறார்களா?

இன்றைக்குப் போராட்டமே எதற்காக - அனை வருக்கும் அனைத்துமாஇன்னாருக்கு இதுதான் என்பதற்காகப் போராட்டமா?

சமூக அநீதி என்றால் என்ன?

கல்வியாகூடாது!

பெண்கள் படிக்கக்கூடாது என்பதுதான் சமூக அநீதி.

பெரியார்தான் கேட்டார்சமூகநீதி விளக்கம் சொல்லும் பொழுது மிக எளிமையாக சொல்வார்செங்கல்பட்டு மாநாட்டில்பெண்களுக்கு உரிமை வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றுகிறார்.

செய்தியாளர்களில் சிலர்பெரியாரை கிண்டல் செய்ய லாம் என்று நினைத்துக் கொண்டு கேள்வி கேட்கிறார்கள்,

‘‘ஏங்கபெண்களுக்கு உரிமை வேண்டும்உரிமை வேண்டும் என்று சொல்கிறீர்களேஎந்த அளவிற்கு உரிமை வேண்டும் என்று சொல்வீர்களா?'' என்று.

அவர்கள் கிண்டலாகக் கேட்கிறார்கள் என்று பெரியார் அவர்கள் புரிந்துகொண்டு,

‘‘எந்த அளவிற்கு என்றுதானே கேட்கிறீர்கள்ஆண் களுக்கு எந்த அளவிற்கு உரிமை இருக்கிறதோஅந்த அளவிற்குக் உரிமை கொடுத்தால் போதும்'' என்றார்.

பாலியல் அநீதியையும் அகற்றவேண்டும்!

ஆகவேதான்பாலியல் நீதி உறுதிபட வேண்டும் என்பது போன்று - பாலியல் அநீதியையும் அகற்றவேண்டும் என்பதுதான் சமூகநீதி என்பதாகும்.

அனைவருக்கும் அனைத்தும் என்று சொல்லும் பொழுதேபெரியாரால் பயன்படாதவர்கள் யாராவதுதமிழ் நாட்டில் உள்ள வீடுகளில் ஒருவரைக் காட்ட முடியுமா?

பெரியார் கொள்கையால்பெரியார் தொண்டால் பயன்படாதவர்கள் யாராவது இருக்கிறார்களா?

உடனே நீங்கள் சொல்வீர்கள்பார்ப்பனர்கள் இருக் கிறார்களேஎன்று.

அவர்கள்தானே பெரியாரால் அதிகம் பயன்பட்டு இருக்கிறார்கள்அதை அவர்களே சொல்லியிருக்கிறார்களே.

இவ்வளவு பெரிய சிறுபான்மைச் சமுதாயம்இவ்வளவு காலமாக சுரண்டிஆதிக்கம் செலுத்திக்கொண்டுஇன்ன மும் நாங்கள் மட்டுமே தகுதி உள்ளவர்கள் - அவர்களே சொல்கிறார்கள் - நீட் தேர்வாஎல்லோரும் படிக்கக்கூடா துங்க - தகுதிதிறமை உள்ளவர்கள்தான் படிக்கவேண்டும் என்று.

தகுதி வேண்டும்திறமை வேண்டும் என்று சொல்லு கிறார்கள்யார் வேண்டுமானாலும் டாக்டராகலாமாஎன்று கேட்டார்கள்.

பச்சைத் தமிழர் காமராசர்

பச்சைத் தமிழர் காமராசர் அவர்கள் ஓங்கி மண்டையில் அடிப்பதுபோன்று அவர் சொன்ன வார்த்தையை சொல்கிறேன்.

ஜாதி வார்த்தை என்று யாரும் தவறாக எண்ண வேண்டாம் - மக்களுக்குப் புரிகின்ற மொழியில்தான் அவர் பேசுவார்.

அவர் சொன்னார்,

‘‘பறையனை டாக்டராக்கினேன்அவன் ஊசி போட்டு எவன் செத்துப் போனான்அவனை என்ஜினியராக்கினேன்அவன் கட்டிய எந்தப் பாலம் இடிந்து விழுந்திருக்கிறதுஉன் தகுதியும் தெரியும்உனக்குச் சொல்லிக் கொடுத்தவன் தகுதியும் தெரியும் போ!'' என்றார்.

தாழ்த்தப்பட்டவன் படிக்கக்கூடாது என்று சொல் கிறீர்கள்இன்னமும் தகுதிதிறமையைப் பேசிக் கொண்டி ருக்கிறீர்கள்நேற்றுவரை நான்கு பிள்ளைகள் பலியாகி இருக்கின்றனநினைத்துப் பார்த்தால்எங்கள் ரத்தம் கொதிக்கிறதுஇவ்வளவு நாள்களாக நாம் போராடிபோராடிநம்முடைய வரிப்  பணத்தில்நம்முடைய நாட்டில்நம்முடைய மண்ணில் உருவாக்கப்பட்ட மருத்துவக் கட்டுமானத்தைநம்முடைய பிள்ளைகள் அனுபவிப்பதற்கு நமக்கு உரிமையில்லை.

யாரோ ஆள் மாறாட்டம் செய்துகேள்வித் தாளை 35 லட்சம் ரூபாய்க்கு வாங்குபவன்ஊழலுக்கு அப்பாற்பட்ட இவர்கள்தான் ஊழலை ஒழிப்பதற்காக அந்த முறையைக் கொண்டு வந்திருக்கிறார்களாம்!

தகுதிதிறமை என்றால் என்ன?

தகுதிதிறமைபற்றி பேசுகிறார்களே,

கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன்தகுதிதிறமை வேண்டும் என்று நீங்கள் சொல்வதைக் கேட்டுத் தான்பாரம்பரியமான அர்ச்சக முறையை வேண்டாம் என்று ரத்து செய்துவிட்டுநீங்கள் சொன்ன ‘தகுதி - திறமைவேண்டும் என்று சொல்லிஆகமம் கட்டாயம் படிக்க வேண்டும்வைகனாச ஆகமமாபாஞ்சராத்ரா ஆகமமாசைவ ஆகமமாசிவ ஆகமமாதாராளமாகப் படிக்க வேண்டும்அதைப் படித்து வருகிறவர்கள்பயிற்சி பெற்று வருகிறவர்கள் அர்ச்சகர் ஆகவேண்டும் என்றார்.

அப்படியென்றால்தகுதிதிறமை என்றால் என்னஎனக்கு எதுவோஅதுதான் தகுதிதிறமையின் அளவுகோல்.

சமூக அநீதியைப் போக்குவதற்குத்தான் பெரியார் போராடினார்அதில் வெற்றியும் பெற்றார்அதனால்தான்பெரியாருடைய பிறந்த நாளை - சமூகநீதி நாள் என்று சொல்லப்படுகிறது.

பார்ப்பனர்கள் நன்றாக சிந்தித்துப் பார்க்கவேண்டும்பெண்கள் அனைவரையும் நாங்கள் சமதளத்தில் வைத்து தான் பார்ப்போம்பெண்கள்தமிழ்நாட்டின் கண்கள்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு என்ன நிலைஎன்று வயதானவர்களுக்குத் தெரியும்இன்றைய இளைஞர் களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நாங்கள் இருந்த வீட்டிற்கு அருகில் அக்கிரகாரம் இருந்ததுஎழுத்தாளர் ஜெயகாந்தன் குடியிருந்தது அந்த  அக்கிரகாரத்தில்தான்!

அக்கிரகார வீட்டின் முன் ஒரு திண்ணை இருக்கும்அந்தத் திண்ணையில் பெண்களை வெளியில் உட்கார வைத்திருப்பார்கள்அதுபோன்ற காட்சிகள் இன்றைக்கு உண்டாஅதற்குமேல் நான் விளக்கம் சொல்ல விரும்ப வில்லைஅது கொஞ்சம் சங்கடமான விஷயம்.

இன்றைக்கு எங்கேயாவது மொட்டைப் பாப்பாத்தியை பார்க்க முடிகிறதா?

அதுமட்டுமல்லமொட்டைப் பாப்பாத்தி என்ற வார்த்தை ஒன்று உண்டுமொட்டைப் பாப்பாத்தி எதிரே வந்தால்அபசகுனம் என்று சொன்னார்கள்மொட்டைப் பாப்பாத்தியைப் பார்க்கக் கூடாது என்று சொல்வார்கள்இன்றைக்கு அந்த நிலை இல்லையேகாரணம்இன்றைக்கு மொட்டைப் பாப்பாத்தியே கிடையாதுஇன்றைக்கு மொட்டை அடிப்பதும் கிடையாதுவெள்ளை சேலை உடுத்துவதும் கிடையாது.

இது யாரால் வந்தது?

பெரியாரால் வந்தது - பெரியாரின் சமூகநீதியால் ஏற்பட்ட விளைவுதான்.

எனவேஅனைவருக்கும் அனைத்தும்.

பெரியாரால்பார்ப்பனர்கள்தான் அதிகம் பயன்பட்டு இருக்கிறீர்கள்.

காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன்

காவல்துறை ஆணையராக ராதாகிருஷ்ணன் என்ற நண்பர் ஒருவர் இருந்தார்அவர் பார்ப்பனர்.

திராவிடர் கழகத் தலைவராக அன்னை மணியம்மை யார் அவர்கள் இருந்தபொழுதுகாவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் மகளுக்கு அமெரிக்காவில் திருமணம் நடந்ததுதிருமண வரவேற்பு சென்னை .வி.எம்திருமண மண்டபத்தில் நடந்ததுஎனக்கும்அன்னை மணியம்மை யாருக்கும் அழைப்பிதழ் கொடுத்திருந்தார்.

நாங்கள் அந்த மணவிழா வரவேற்பிற்குச் சென்ற பொழுதுஎங்களை அன்போடு வரவேற்றார்மணமக் களுடன் ஒளிப்படம் எடுத்துக்கொண்டோம்.

நாங்கள் புறப்படும்பொழுது, ‘‘நீங்கள் வந்தது எனக்குப் பெருமையாக இருந்ததுஅம்மாசில பேர் நினைத்துக் கொண்டிருப்பார்கள்பெரியார் அய்யாபார்ப்பனர்களுக்கு எதிரி என்றுஅதுபோன்று கிடையாதுநான் அதை உணர்ந்து சொல்கிறேன்.  பெரியாரால் அதிகம் பயன்பட்டது நாங்கள்தான்ஏனென்றால்திருமணம் என்ற பெயரால்நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தோம்இன்றைக்கு அந்த நிலை இல்லைபெரியாரின் சிந்தனை யால்தான்'' என்றார்.

சமூக அநீதியினுடைய கொடுமைகளை ஒவ்வொரு துறையிலும்ஒவ்வொருவரும் அனுபவித்து இருக்கிறார்கள்.

காந்தியார் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டவுடன்காந்தியாரைக் கொன்றவன் கோட்சே என்ற மராத்தி பார்ப்பான் என்ற செய்தி பிறகுதான் வந்ததுமுதலில்காந்தியாரை சுட்டுக்கொன்றவன்முஸ்லிம் என்று ஒரு வதந்தியைக் கிளப்பிவிட்டார்கள்அது உண்மை இல்லை என்று அய்யா அவர்கள் வானொலியில் உரையாற்றினார்.

அப்பொழுது மொரார்ஜி தேசாய் பம்பாயில் உள்துறை அமைச்சராக இருக்கிறார்அவருடைய ஆட்டோ பயா கிரபி என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி அறிந்தவுடன்நாசிக் போன்ற பல இடங்களில் கலவரங்கள் ஏற்பட்டனஅக்கிரகாரங்கள் தீ வைத்துக் கொளுத்தப் பட்டனகோட்சேமராத்தி பார்ப்பனன் என்பதற்காக.

ஆனால்தமிழ்நாட்டில் ஒரு சிறு கலவரம் நடந்ததாகாரணம் என்னபெரியார்தான் காரணம்.

தனிப்பட்டவர்களைப் பார்த்து நாம் கோபப்படவேண்டிய அவசியமில்லை

கலைஞர்கூட கொஞ்சம் வேகமாகப் பேசியபொழுது கூடபெரியார் சொன்னார், ‘‘தனிப்பட்டவர்களைப் பார்த்து நாம் கோபப்படவேண்டிய அவசியமில்லைஎங்கேயாவது துப்பாக்கியைத் தண்டிப்பீர்களா?'' என்று கேட்டார்.

துப்பாக்கியை தண்டிப்பது உண்டாதுப்பாக்கியைப் பிடித்த கையாருடைய கை என்பதைப் பாருங்கள்மதவெறி - அந்த மதவெறியை ஒழிப்பதற்கு என்ன வழி என்று யோசனை செய்யுங்கள் என்றார்.

அன்றைக்கு அந்த சமூகத்தைக் காப்பாற்றினார் தந்தை பெரியார் அவர்கள்.

எங்கள் இயக்கத்தினால்யாருக்காவது ஆபத்து ஏற்பட்டிருக்கிறதா?

இந்த இயக்கத்தினால்யாருக்காவது வன்முறை யினால் ஆபத்து ஏற்பட்டது என்று சொல்ல முடியுமா?

மதவெறியின் காரணமாககடப்பாரையைத் தூக்கிக் கொண்டு போய் பாபர் மசூதியை இடித்தவர்கள் யார்?

இன்னுங்கேட்டால்கடவுள் இல்லை என்று சொல் கிறவர்கள்இதுவரையில் எந்தக் கோவிலையும் இடித்தது இல்லை.

கடவுள் உண்டு என்று சொல்பவர்கள்தான்கடப் பாரையைத் தூக்கிக் கொண்டு போகிறார்கள்என் கடவுள் இங்கே பிறந்தார்அங்கே பிறந்தார் - என் கடவுள்தான் முக்கியம் என்று சொல்லி.

மூன்று பேருக்கு என்ன பங்கோ அதை அனுபவியுங்கள்!

ஆகவேதான்பெரியாருடைய சமூகநீதி சிந்தனை என்பது அனைவருக்கும் அனைத்தும் என்பதாகும்.

பார்ப்பனர்களா?

அவர்களுக்கும் பங்கு உண்டு.

நூற்றுக்கு மூன்று பேர் இருக்கிறீர்கள் அல்லவாமூன்று பேருக்கு என்ன பங்கோ அதை அனுபவியுங்கள் என்றார் அய்யா.

97 பேருடைய பங்கை நாங்கள் அனுபவிப்போம் என்றால்exploitation - Social Monopoly சமூகத்தில் நீங்கள் ஆதிக்கம் செலுத்துகிறீர்கள் என்று அர்த்தம் என்று சொன்னார்.

எனவேதான்சமூகநீதி என்பது இருக்கிறதேஅது சமூக அநீதியை விரட்டி - அதற்கு மாற்றுஅதைத்தான் தந்தை பெரியார் இட ஒதுக்கீடாக செய்தார்.

அந்த இட ஒதுக்கீடு ஒவ்வொரு காலகட்டத்தில்ஒவ் வொரு வகையாக இருந்ததுஇன்றைக்கு அது தொடர்ந்து வருகிறதுஇதை அவர்களால் தாங்க முடியவில்லைஅவ் வளவுதானே தவிரஇன்னமும் அவர்களுடைய எண் ணிக்கை குறைந்தபாடில்லைஇன்னமும் ஆதிக்கம் இருக்கிறது.

ஒன்றிய அரசில், 27 சதவிகிதத்தைப் போராடிப் பெற் றோம்ஆனால்நடைமுறையில் 27 சதவிகிதம் வர வில்லையேதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம் தெரிந்துகொண்டோம்காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் அவர்கள் பிரதமராக இருந்தபொழுது அந்தச் சட்டம் வந்ததுஆகையால்அந்த விளக்கங்கள் கிடைத்தன.

ஆனால், 27 சதவிகிதம் கொடுக்கவேண்டிய இடத்தில்அதேமாதிரி 23 சதவிகிதம் எஸ்.டி., எஸ்.சிபிரிவினருக்குக் கொடுக்கவேண்டிய இடத்தில், 4 சதவிகிதம், 5 சதவிகிதம் தானே கொடுத்திருக்கிறார்கள்அதற்காகப் போராட்டம் நடத்தவேண்டுமாஇல்லையா?

ஆகவேதான்அவர்களுடைய கோபம் என்னவென் றால்பெரியார்  பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்தது மட்டுமல்ல - நேற்று நம்முடைய முதலமைச்சர் ஒன்றை அறிவித்திருக்கிறார்.

சமூகநீதி எந்த அளவிற்கு செயல்படுகிறது என்பதற்காக ஒரு கண்காணிப்புக் குழு!

அது என்னவென்றால்சமூகநீதியை அறிவித்தால் மட்டும் போதாதுஇட ஒதுக்கீட்டை அறிவித்தால் மட்டும் போதாதுஅந்த சமூகநீதி எந்த அளவிற்கு செயல்படுகிறது என்பதற்காக ஒரு கண்காணிப்புக் குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார்இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை - திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியினுடைய ஒப்பற்ற சாதனை.

இதுவரையில் ஏட்டு சுரைக்காயாக இருந்தது 27 சத விகிதம்ஆனால், 69 சதவிகிதம் அமுலானதாஇல்லையாஎன்று பார்க்கவேண்டாமா?

சமைத்தாகி விட்டதுசமைத்தாகிவிட்டது என்று சொல்லிபோய்விட்டு வாருங்கள் என்று சொன்னால்நியாயமா?

பந்தியில் அமர வைத்து பரிமாறவேண்டும் என்பது தானே முக்கியம். 27 வகையான கறியை சமைத்து வைத்திருக்கிறேன் என்று சொன்னால் மட்டும் போதுமாஇது என்னங்க ஏமாற்று வேலை?

ஏமாற்று வேலைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் திராவிட மாடல்!

இந்த ஏமாற்று வேலைக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற இயக்கத்திற்கும்ஆட்சிக்கும் பெயர்தான் திராவிட ஆட்சி - திராவிட மாடல்.

இதனால்தான்அவர்களுக்கு எரிகிறது - கொதிக் கிறார்கள்.

அமெரிக்காவில் சமூகநீதிக்குப் பெயர் அபெர்மெட்டிவ் ஆக்சன்.

மலேசியாவில்மண்ணின் மைந்தர்கள் என்பவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கிறார்கள்ஒவ்வொரு நாட்டில்சமூகநீதி ஒவ்வொரு பெயரால் இருக்கிறது.

இன்னொரு நாட்டில்காம்பன்சேட்ரி சோசியல் ஜஸ்டிஸ் என்று சொல்கிறான்ஏற்கெனவே இழந்ததைசமப்படுத் துவதற்காக என்று சொல்கிறார்கள்.

எனவேஎல்லா இடங்களிலும் அந்தப் பிரச்சினைகள் வரக்கூடிய அளவிற்குஇன்றைக்கு வாய்ப்புகள் வந்திருக் கின்றன.

எனவேதான்உறுதி மொழி எடுத்துக்கொண்டுநம்மு டைய பயணம் தொடரும் - பயணங்கள் முடிவதில்லை.

சுருக்கமாக உங்களுக்குச் சொல்கிறேன்சமூகநீதி நாள் என்பது இருக்கிறதேஅது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுஅடுத்ததாகநம்முடைய கோரிக்கைகள் இந்தியா முழுவதும் ஒலிக்கும்.

நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள்வாய்ப்பு கிடைக்கும்பொழுது இதை நிச்சயம் பதிவு செய்வார்கள்.

குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி இட ஒதுக்கீடு போராட்டத்தை ஆதரித்தாரா?

என்னிடம் ஒருவர் கேட்டார், ‘‘மோடி கூட 17 ஆம் தேதி தான் பிறந்தார்அப்படியென்றால்அவர் பிறந்த நாளும்சமூகநீதி நாள்தானே'' என்றார்.

அதற்கு நான் பதில் சொன்னேன்குஜராத்தில் அத்தனை ஆண்டுகாலம் முதலமைச்சராக இருந்தாரேஇட ஒதுக்கீடு போராட்டத்தை ஆதரித்தாராஅப்படி ஆதரித்திருந்தால்அவருடைய பிறந்த நாள் சமூகநீதி நாள்தான்அதி லொன்றும் சந்தேகமேயில்லை.

சரிஅது இருக்கட்டும்; 2014 இல் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாரேஅவருடைய அமைச்சரவையில் பிற்படுத் தப்பட்டவர்கள் எத்தனை பேர் இருந்தார்கள்எத்தனை பேர் தாழ்த்தப்பட்டவர்கள் இருந்தார்கள்இல்லவே இல்லையே!

சரி, 2014 ஆம் ஆண்டை விட்டுவிடுங்கள்; 2019 இல் ஆட்சிக்கு வந்தாரேஅரசமைப்புச் சட்ட கல்வெட்டை கும்பிட்டுவிட்டு வந்தாரேஅப்பொழுது அவருடைய அமைச்சரவையில் எத்தனை பிற்படுத்தப்பட்டவர்கள்தாழ்த்தப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருந்தார்கள்?

இப்பொழுது என்னபிற்படுத்தப்பட்டவர்களின் மேல் ஒரு பெரிய காதல்சமூகநீதி மேல் என்ன பெரிய ஆசை.

உத்தரப்பிரதேசத்தில்ஆதித்யநாத் என்ற சாமியார் முதலமைச்சராக இருக்கிறாரேஅவர் முன்னேறிய சமூ கத்தைச் சேர்ந்தவர்அவர் இப்பொழுது பிற்படுத்தப்பட்ட வர்களுக்காக ஒரு மாநாட்டை நடத்துகிறார்இதுகுறித்து ‘விடுதலை'யில் தலையங்கம் எழுதப்பட்டு இருக்கிறதுபிற்படுத்தப்பட்டவர்கள் மாநாட்டை யார் நடத்துவதுநண் டைச் சுட்டு நரியைக் காவலுக்கு வைப்பதாதயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்.

வாக்கு வங்கிக்காக சமூகநீதி பேசுகிறார்கள்!

ஏனென்றால்அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் வருகிறது.

வாக்கு வங்கிக்காக சமூகநீதி பேசுவது வேறு;

லட்சியத்திற்காக சமூகநீதி பேசுவது வேறு.

இது உண்மையாக அழுவது - அது கிளிசரின் போட்டுக்கொண்டு அழுவது.

திரைப்படங்களிலும்நாடகங்களிலும் திடீரென்று அழுவார்கள் - இன்னுங்கேட்டால்உண்மையாக அழு வதைவிடகிளிசரின் போட்டுக்கொண்டால்மிக நன்றாக அழுவார்கள்.

யாருக்காக அழுகிறார்கள்?

அதுபோலஅரசியலுக்காக அவர்கள் அழுகிறார்கள்.

ஜெயகாந்தன் அவர்கள் ‘‘யாருக்காக அழுதார்கள்?'' என்ற தலைப்பில் எழுதியிருப்பார்.

யாருக்காக அழுகிறார்கள் என்பதுதான் மிக முக்கியம்அந்த அடிப்படையில் பார்த்தீர்களேயானால்இன்றைக்கு நாம் செல்லவேண்டிய தூரம் நிறைய இருக்கிறதுஎதைப் பார்த்தும் ஏமாந்துவிடக் கூடாது.

ஆர்.எஸ்.எஸ்அமைப்பினர்இட ஒதுக்கீடே கூடாதுபெண்கள் தங்கள் அமைப்பில்  உறுப்பினராகச் சேரக் கூடாது என்பவர்கள்.

ஆர்.எஸ்.எஸ்அமைப்பு தொடங்கப்பட்டது 1925 இல்முதன்முதலாக அவர்கள்பெண்களை உறுப்பினராக ஆக்கலாம் என்று ஒப்புக்குச் சொன்னார்கள்ஆனால்அவர்களுக்கு எந்தப் பொறுப்பையும் கொடுக்கக் கூடாது என்று முடிவெடுத்தார்கள்.

ஜோதிமணி அவர்கள் இருக்கிறார்கள்இன்றைக்கு எம்.பி.,யாக இருக்கிறார்நாளைக்குத் தலைவராக வரக் கூடிய வாய்ப்புகள் கூட இருக்கிறதுகாங்கிரஸ் கட்சியிலும்மற்ற கட்சிகளிலும் இந்த நிலை உண்டு.

ஆனால்ஆர்.எஸ்.எஸ்.சில் இதுபோன்று நினைத்துப் பார்க்க முடியுமாசித்பவன் பார்ப்பனர்கள் என்று சொல் லக்கூடியவர்களைத் தவிரஇதுவரையில்அந்த அமைப்பிற்கு தலைவராக வந்திருக்கிறார்களா என்றால்ஒரே ஒருவர் வந்தார்ராஜேந்திர சிங் என்பவர்அவர் சிறிது காலம் இருந்தார்அவரே ராஜினாமா செய்துவிட்டுப் போகக்கூடிய சூழ்நிலையை உருவாக்கினார்கள்அன்றையிலிருந்து ஆர்.எஸ்.எஸ்பார்ப்பனர்களின் அமைப்புதானேஇல்லை என்று மறுக்க முடியுமா?

தேர்தல் மூலம்கூட தலைவரைத் தேர்ந்தெடுப்பது கிடையாதுஇன்றைய தலைவர்  போனால்அடுத்தவரை நாமினெட் செய்துவிட்டுப் போவார்ஒரு பெண் தலைவராக வர முடியாதே!

ஒரு நாத்திக இயக்கத்திற்கு ஒரு பெண் தலைமை தாங்கினார் இங்கே!

நம்முடைய இயக்கம் எப்படிப்பட்ட இயக்கம் என்ப தைத் தெரிந்துகொள்ளுங்கள்ஒரு நாத்திக இயக்கத்திற்கு ஒரு பெண் தலைமை தாங்கினார் என்று சொல்லக்கூடியது இங்கே.

முதன்முதலாக இந்த நாட்டின் பிரதமராக வந்தவர் இந்திரா காந்தி அம்மையார்அந்தக் கட்சிக்குத் தலைவராக இருந்தார்ஆனால்ஆர்.எஸ்.எஸ்அமைப்பில் அது போன்ற நிலை இல்லையே!

எனவேதான்சமூக அநீதி எங்கெல்லாம் இருக் கிறதோஅங்கெல்லாம் சமூக நீதியைக் கேட்டாக வேண்டும்சமூக நீதியினுடைய குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்சமூகநீதி செயல்படுத்தப்படவேண்டும்.

அந்த அடிப்படையில் நண்பர்களேஇன்னும் நாம் செல்லவேண்டிய தூரம் என்பது நீண்ட தூரமாகும்.

இந்த அரங்கத்தின் மூலமாக வைக்கக்கூடிய முதல் கோரிக்கை என்னவென்றால்எப்படி தமிழ்நாட்டில்தமிழ் நாடு அரசு சமூகநீதி கண்காணிப்பு குழு என்று போடு கிறதோஅதையே பின்பற்றிஒன்றிய அரசும்ஒவ்வொரு துறையிலும்சமூகநீதி கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்இந்த அரங்கம் அதை முதல் தீர்மானமாகக் கொள்கிறது.

இதுதான் பெரியார் பிறந்த நாளின் சூளுரையாகும்.

அடமானம் வைப்பதற்காகவே ஒரு துறை

இரண்டாவதுமோடி வித்தைஅந்த வித்தை சாதாரணமானதல்லபண மதிப்பிழப்புஅதற்கடுத்ததாகஇப்பொழுது பணத்தைத் தேடுகிறார்கள்துறைகளை விற்பதற்கென்றே வாஜ்பேயி பிரதமராக இருந்தபொழுதுஒரு அமைச்சர் இருந்தார்மினிஸ்டர் ஃபார் டிஸ்இன் வெஸ்ட்மெண்ட்இன்றைய பிரதமர் மோடி அதிலிருந்து வளர்ச்சி அடைந்திருக்கிறார்எப்படி என்றால்அடமானம் வைப்பதுவிற்பது இல்லை - அடமானம் வைப்பது.

சேட்டுக் கடைகளில் நம்மாள்கள் நகையை வைத்தால்மீட்பதே கிடையாதுஅதுபோலஅடமானம்.

நாம் தன்மானத்தைப்பற்றி பேசிக்கொண்டிருக்கின்ற நேரத்தில்அவன் நாட்டில் அடமானத்தைப்பற்றி பேசக் கூடிய கட்டாயத்தை உருவாக்கி விட்டார்கள்.

பொருளாதாரக் கண்ணோட்டத்தோடுதான் மேடை களில் பேசுவார்கள்எல்லாவற்றையும் விற்றுவிட்டால்அம்பானிக்குப் போகும்அதானிக்குப் போகும் என்று சொல்வது அவர்களின் ஓர் அம்சம்.

ஆர்.எஸ்.எஸினுடைய

உள்நோக்கம் - உள்ரகசியம்!

அதைவிட இன்னொன்றுஆர்.எஸ்.எஸினுடைய உள் நோக்கம் என்னவென்றால்பொதுத் துறை நிறுவனங் களையெல்லாம் தனியார்த் துறை ஆக்கு வதன் உள் ரகசியம் என்னவென்றால்இட ஒதுக் கீட்டைசமூகநீதியை அழிக்கவேண்டும் என்பதற் காகத்தான்.

காலங்காலமாக இட ஒதுக்கீடு வங்கியில் கிடை யாதுகாலங்காலமாக ஒன்றிய அரசாங்கத்தில்அய்..எஸ்., அய்.பி.எஸ்இட ஒதுக்கீடு எல்லாம் கிடையாதுகீரைக்காரி முத்தம்மாமுனியம்மா பிள் ளைகள் எல்லாம் இன்றைக்கு அய்.பி.எஸ்.,  அய்..எஸ்ஆனதெல்லாம் மண்டல் கமிசன் வந்த பிறகுதான்.

ஆகவேவங்கியை பொதுத் துறையிலிருந்து தனியார்த் துறைக்கு விற்கவேண்டும்பகுதி பகுதியாகப் பிரித்து விற்கிறார்கள்விளையாட்டு மைதானத்தை வாடகைக்கு விடுகிறார்கள்.

இதுபோன்ற நிலை - பொதுத் துறையை தனியார் துறையாக ஆக்குகின்ற சூழல்கள் மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றனஇதற்கு மாற்று வழி ஆட்சி மாற்றம் என்பது கடைசியான ஒரு வாக்கியம்அது நடக்கவேண்டிய நேரத்தில் நடக்கும் - உருவாகவேண்டிய காலகட்டம் - காலத்தின் கட்டா யம் வரட்டும்.

இதற்கிடையில்நிரந்தரமாக சமூகநீதிக் கண் ணோட்டத்தோடு நாம் பார்க்கவேண்டும் என்றால் நண்பர்களேஎன்ன செய்யவேண்டும்?

தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை!

நீண்ட நாள்களுக்கு முன்பாக திராவிடர் கழகம் எச்சரித்த செய்தி என்னவென்றால்தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு கேட்கவேண்டியது - சமூகநீதி கேட்க வேண்டியது இரண்டாவது தீர்மானமாகும்.

இதில் மிகவும் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால்அகில இந்திய கட்சியான காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி மற்றவர்கள் எல்லாம் தனியார்த் துறையில் இட ஒதுக்கீட்டை ஒப்புக்கொள்வோம் என்று சொல்லி யிருக்கிறார்கள்.

இதற்கென ஒரு மாநாட்டை நடத்திதமிழ்நாடுதான் அதற்கு வழிகாட்டும்அவர்களையெல்லாம் அந்த மாநாட்டிற்கு அழைப்போம்.

எனவேதனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்பது இரண்டாவது தீர்மானம்.

மூன்றாவதாக,

சமூகநீதிசமூகநீதி என்று வரும்பொழுதுசமூகநீதி என்றால் ஆண்களுக்கு மட்டும் என்று பேசுகிறார்கள்வெறும் சமூகநீதி என்று சொல்லக்கூடாதுபாலியல் நீதி கடந்த சமூகநீதி என்று சொல்லவேண்டும்.

அதற்கு ஒரு உதாரணம் சொல்லவேண்டுமானால்நீதிபதிகள் எல்லாம் பிற்படுத்தப்பட்டவர்கள் இல்லையேபிற்படுத்தப்பட்டதாழ்த்தப்பட்ட பெண்களுக்கு வாய்ப்பு இல்லையே என்று கேட்டால்,

நாங்கள் பெண் நீதிபதிகளை நியமிக்கிறோம் என்று சொல்லிஉயர்ஜாதி பெண்களையே நியமிக்கிறார்கள்.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களில் வழக்குரைஞர்கள் இல்லையாமாவட்ட நீதிபதிகள் இல்லையாஅவர்கள் பக்கம் திரும்ப மறுக்கிறார்களே!

பாலியல் நீதியை உள்ளடக்கிய

சமூகநீதி தேவை

ஆகவேதான்சமூகநீதி என்று சொல்லும்பொழுதுபாலியல் நீதியை உள்ளடக்கிய சமூகநீதி தேவை என்கிற கோரிக்கை வைக்கப்படவேண்டும்.

பெண்கள் நீதிபதியாகவும் இருக்கட்டும்அவர்கள் பிற்படுத்தப்பட்டதாழ்த்தப்பட்டசிறுபான்மை சமூகத்தி லிருந்து வரவேண்டும்நாடு முழுவதும் தேடுங்கள்.

இது மூன்றாவது தீர்மானமாகும்.

கடைசியாக நான்காவதுஉச்சஉயர்நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடு கிடையாதுமாவட்ட நீதிமன்றங்கள் வரை இட ஒதுக்கீடு உண்டு.

பெரியார்தான் கேட்டார், ‘‘தலைக்கு ஒரு சீயக்காய்தாடிக்கொரு சீயக்காயா?'' என்று.

சீயக்காய் போட்டால்ஒரே சீயக்காயைப் போட வேண்டியதுதானேஉயர்நீதிமன்றத்திற்கு இட ஒதுக்கீடு பொருந்தாதுஉச்சநீதிமன்றத்திற்கு இட ஒதுக்கீடு பொருந் தாது என்று வியாக்கியானம் செய்கிறார்கள்.

எல்லோரும் பாடுபட்டுநாடாளுமன்றத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்பட குரலெழுப்பிவிவாதம் நடத்தி நிறைவேற்றினால்,

அதேபோன்றுசட்டமன்றங்களிலும் மிகப்பெரிய அளவில் சட்டங்களை நிறைவேற்றினால்,

அங்கே அமர்ந்திருக்கின்ற உயர்ஜாதிக்கார ஆதிக்கக் காரர்கள் ஒரு சிவப்புக் கோட்டினை மிக சுலபமாகப் போட்டு விடுகிறார்கள்.

மக்கள் பிரதிநிதித்துவம் பெற்றமக்கள் பிரதிநிதித்துவம் உள்ள மக்களாட்சியில் இவர்களால் என்ன செய்ய முடியும்அந்த அளவிற்கு சக்தி வாய்ந்தது - இறுதி நிலை அதுதான் - நீதிமன்றங்களை நாம் மதிக்கவேண்டும்நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு நாம் கட்டுப்படவேண்டும்.

தந்தை பெரியாரின் கருத்து!

பெரியார் மிக அழகாகச் சொன்னார், ‘‘உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்பது இறுதியானது என்று ஏன் சொன்னார்கள்உலகத்தினுடைய கடைசி அறிவாளி அங்கேதான் அமர்ந் திருக்கிறான் என்பதற்காக அல்ல - அதற்கு மேல் அப்பீல் செய்ய முடியாது'' என்பதற்காகத்தான்.

ஆகவேதான்அங்கே சமூகநீதி இருக்கவேண்டும்மொத்தம் 34 நீதிபதிகளா?

அதில் எத்தனை பேர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்?

எத்தனை பேர் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்?

நாம் ஒன்றும் அதிகம் கேட்கவில்லைஅவரவர் பங்கை அவரவர்களுக்குக் கொடுக்கவேண்டும்உங்களுடைய பங்கை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறோம்.

அனைவருக்கும் அனைத்தும் -

இந்த அனைவருக்கும் அனைத்தும் என்பது உச்சநீதிமன்றத்திற்குப் பொருந்தாதா?

அனைவருக்கும் அனைத்தும் உயர்நீதிமன்றங்களுக்குப் பொருந்தக் கூடாதா?

இதுதான் எங்கள் கேள்வி.

இதையெல்லாம் தாண்டிஇப்பொழுது வேகமாக செய்ய வேண்டிய பணி - எங்கள் பிள்ளைகளை பலிகடாக்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்களேஅதற்குக் காரணமான நீட் தேர்வை எதிர்த்து மிகப்பெரிய மக்கள் இயக்கத்தைக் கட்டவேண்டும் என்பதற்காக  வருகின்ற 21 ஆம் தேதி ஒத்தக் கருத்துள்ள அமைப்புகளை அழைத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தினை நடத்தவிருக்கின்றோம்.

கரோனா காலகட்டம் என்பதால்எல்லாம் முடங்கிப் போனதுபோன்ற ஒரு சூழ்நிலை இருந்ததுஆகவேவேகமாக நடக்கவேண்டிய போராட்டங்கள் நடைபெற வில்லைஅதை செய்யவேண்டும்நீட் தேர்வின் கொடு மையை எதிர்த்துப் போராட்டம் நடத்தவேண்டும்முறைகேட்டை ஒழிப்பதற்காக நீட் தேர்வை கொண்டு வருகிறோம் என்று சொன்னார்களேஅது நிறைவேறியதா?

நீட் தேர்வின்போது ஆள் மாறாட்டம் ஆங்காங்கே நடைபெறுகிறதுஒரு கேள்வித்தாள் விலையாக 35 லட்சம் ரூபாய் கொடுக்கிறார்கள் என்றால்அவர்கள் ஏழையாஅதற்காக எங்கள் பிள்ளைகள் தூக்கில் தொங்குவதா?

இதுதான் தகுதிதிறமையா?

ஒரு மாபெரும் இயக்கத்தைக் கட்டவேண்டும்

இதையெல்லாம் மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லிஒரு மாபெரும் இயக்கத்தைக் கட்டவேண்டும் என்ற அவசியம் இருக்கிறது.

எனவேசமூகநீதி நாளில் நாம் சூளுரைக்கிறோம்எஞ்சிய இந்தத் திட்டங்களையெல்லாம் செயல்படுத்துவதற்கு மாபெரும் மக்கள் இயக்கத்தை உண்டாக்குவோம்.

பெரியார் மக்களை நம்பினார்  -

மக்களோடு மக்களாக இருந்தார்கள் -

மக்களுக்காக வாழ்ந்தார்கள் -

நாமும் அந்தப் பயணத்தைத் தொடருவோம் என்று சொல்லிஅனைவருக்கும் நன்றி என்று சொல்லி,

அனைவருக்கும் உணவு இருக்கிறது - அருள்கூர்ந்து செவிக்கு உணவில்லாதபொழுதுசிறிதல்லநிறையவே உணவு ஈயப்படும் என்று சொல்லிவிடைபெறுகிறேன்.

வாழ்க பெரியார்வளர்க பகுத்தறிவு!!

நன்றி வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர்தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக