• Viduthalai
காணொலி வழியாக விவாதம்!
சென்னை, ஜூலை 27- ‘இந்து தேசியவாதமும், ஜனநாயகப் பெரும் பங்கின் வளர்ச்சியும்’ என்கிற தலைப்பில் காணொலி வாயிலாக நடைபெறும் கருத் தரங்கில் நிபுணர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர். ‘திரவிடியன் ஃபிரபஷன்ஸ் ஃபாரம்’ என்கிற அமைப்பு வருகிற 29 ஆம் தேதி மாலை 7 மணியள வில் காணொலி மூலம் ‘இந்து தேசியவாதமும் ஜனநாயகப் பெரும் பங்கின் வளர்ச்சியும்’ என்ற (Hindu Nationalism and Rise of Majoritarian Democracy) தலைப்பில் விவாதம் ஒன்றை நடத்துகிறது. அதில், தி.மு.க. தொழில் நுட்ப அணிச் செயலாளரும், மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு நிதி அமைச்சருமான டாக்டர் பி.டி.ஆர்.பழனி வேல் தியாகராஜன், பிரான்சு நாட்டின் அரசியல் அறிவியலாளரும் ஆய்வு இயக்குநருமான பேராசிரியர் கிறிஸ்டோப் ஜாபர்லாட் ஆகியோர் பங்கேற்று விவாதிக் கின்றனர். இந்திய நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வருமான டாக்டர் சசிதரூர், திரவிடன் ஃபிரபஷனல் அமைப்பின் செயல் ஒருங் கிணைப்பாளர் வழக்குரைஞர் புகழ் காந்தி, அந்த அமைப்பின் மேலாண் ஆலோசகரும் செயல் ஒருங்கிணைப்பாளருமான எஸ். தரணிதரன் ஆகியோர் மதிப்பிட்டாளர் களாக செயல்படுகின்றனர். "மோடியின் இந்தியா" என்பதை மய்யமாகக் கொண்டு இந்த காணொலி விவாதம் (ZOOM WEBINAR) நடை பெறுகிறது. பங்கேற்க விரும்புவோர் ID:84511015751 பாஸ்வேர்ட் கோட் Password 483347 என்ற எண்களுடன் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக