செவ்வாய், 27 ஜூலை, 2021

'தகைசால் தமிழர் விருது' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


சென்னை,ஜூலை,27- தமிழ்நாட்டிற்கும்தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில்,“தகைசால் தமிழர்என்ற பெயரில் புதிய விருதை உருவாக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேற்படி விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்யும் பொருட்டுதமிழ்நாடுமுதலமைச்சர்  தலைமையில்தொழில்துறைதமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளரை உள்ளடக்கியஒரு குழுவை அமைக்கவும் ஆணையிட்டுள்ளார்ஒவ்வோர் ஆண்டும் தேர்வு செய்யப்படும்தகைசால் தமிழர்"விருது பெறும் விருதாளருக்கு , சுதந்திர தின விழாவின்போது முதலமைச்சர் அவர்களால் பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும்பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக