• Viduthalai
சென்னை, ஜூலை 30- ஆகம விதிகளின்படி கோயில்களில் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த வர்களை மட்டுமே அர்ச்சகர் களாக நியமிக்க வேண்டும் எனவும், தமிழில் அர்ச்சனை செய்ய எதிர்ப்பு தெரிவித்தும் தொடரப்பட்ட வழக்கை தள் ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தி யுள்ளது.
இதுதொடர்பாக சென்னை சிஅய்டிநகரைச் சேர்ந்த எஸ்.சிறீதரன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப் பாட்டில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இதில் 500 கோயில்களில் மட்டுமே ஆகம விதிகள் முறையாக கடை ப்பிடிக்கப்படுகிறது. ஆகம விதி களின்படி குறிப்பிட்ட சமுதா யத்தைச் சேர்ந்தவர்கள் மட் டுமே கோயிலின் கருவறைக்குள் நுழைந்து அர்ச்சனை, பூஜை கள் செய்ய முடியும்.
எனவே, ஆகம விதிகளை முறையாகக் கடைப்பிடிக்கும் கோயில்களில், குறிப்பிட்ட சமு தாயத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே கோயில் அர்ச்சகர் களாக நியமிக்க வேண்டும். ஆனால் இதை மீறி அர்ச்சகர் பயிற்சி முடித்து விட்டால் ஆட்சியமைத்த 100 நாட்களில் அனைத்து ஜாதியினரையும் அனைத்து கோயில்களிலும் அர்ச்சகர்களாக நியமிப்போம் என தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சர் தெரிவித்து இருப்பது ஏற்புடையதல்ல.
தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு குறிப்பிட்ட சமூகத் தினரிடையே குழப்பத்தை ஏற் படுத்தும். அதுபோல தமிழில் அர்ச்சனை செய்ய அனுமதித் தால் அதன் மூலமும் மற்ற சமு தாயத்தைச் சேர்ந்தவர்களை கோயில் கருவறைக்குள் மறை முகமாக அனுமதிப்பதுபோல் ஆகிவிடும்.
எனவே, தமிழில் அர்ச்சனை செய்ய தடை விதித்து, ஆகம விதிகளைக் கடைப்பிடிக்கும் கோயில்களில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் களை மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்க உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங் கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்குரைஞர் பி.முத்துக்குமார் ஆஜராகி, "வாச்சாரியார்கள் தொடர்ந்த ஒரு வழக்கில் ஆகம விதிகளின் படி பயிற்சி முடித்தவர்கள் கோயில் அர்ச்சகர் ஆகலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது. எனவே அதற்கு முரணாக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை ஆரம்பக் கட் டத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என கோரினார்.
அதையடுத்து இதுதொடர் பான உச்சநீதிமன்ற உத்தரவு களை ஆய்வு செய்துவிட்டு வாதங்களை முன்வைக்க மனு தாரருக்கு அறிவுறுத்திய நீதிபதி கள், வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளி வைத்து உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக