ஞாயிறு, 25 ஜூலை, 2021

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்படும்

 

 அமைச்சர் பி.கேசேகர்பாபு பேட்டி

திருப்பூர்ஜூலை 25 கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்படும் என்று ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கேசேகர்பாபு கூறினார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஹிந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கேசேகர்பாபு நேற்று (24.7.2021)ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கோவில்கள் அனைத்தையும் தூய்மை நிறைந்த இடமாக மாற்றவும்நந்தவனம்திருத்தேர் பழுதடைந்தால் அவற்றை சரி செய்யும் பணியும்கோவில் தெப்பக்குளங்களில் தண்ணீர் விடும் முயற்சிகள்குட முழுக்கு நடத்த வேண்டிய கோவில்கள் கண்டறியப்பட்டுள்ளதுமுதல்கட்டமாக இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுஅந்த பணிகளை முடுக்கி விடுவதற்காக மாவட்டந்தோறும் ஆய்வு நடக்கிறது.  அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என்று தெரியாமல் ஆக்கிரமிப்பு செய்தாலும் தவறு தான்இந்த ஆட்சியை பொறுத்தவரை சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

நல்ல வசதி படைத்தவர்கள்கோவில் இடங்களை தங்கள் சுயலாபத்துக்காக பயன்படுத்துபவர்கள் மீது முதல்கட்டமாக தீவிர நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கோவில் நிலங்கள் குறித்து தினமும் 2 இடங்களிலாவது ஆக்கிரமிப்புகளை ஹிந்து சமய அறநிலையத் துறையினர் அகற்றி வருகிறார்கள்கடந்த 75 நாள்களில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகப்படியான இடங்களை ஆக்கிரமிப்பில் இருந்து ஹிந்து சமய அறநிலையத்துறை கைப்பற்றி இருக்கிறதுஅனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தில் படிப்படியாக சிறிய கோவில்களில் நியமிக்கப்படும் பணிகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளதுமேலும் கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்தவும்கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதுஇவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக