புதன், 28 ஜூலை, 2021

கேரளாவில் திருமணத்தின்போது அரசு ஆண் ஊழியர்களுக்கு வரதட்சணை மறுப்பு சான்றிதழ் கட்டாயம்

 

 திருவனந்தபுரம்ஜூலை 28- கேரளாவில் அரசுப்பணியில் இருக்கும் ஆண்கள் தங்கள் திருமணத்தின்போது பெண் வீட்டாரிடம் இருந்து வரதட்சணை வாங்கவில்லை என்னும் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்இந்தச் சான்றி தழில் மணமகள்மணமகளின் பெற் றோர் ஆகியோர் கையெழுத்திட்டி ருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இந்தச் சான்றிதழை திருமணம் முடிந்த மாதத்திலேயே அவரவர்களது உயரதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண் டும்  என அறிவுறுத்தப்பட்டுள்ளதுஇப்பணிகளை பெண்கள் மற்றும் குழந் தைகள் நலத்துறை ஒருங்கிணைப்பு செய்கிறதுஇதன் இயக்குநர் அனுபமாஇதுகுறித்து கேரளத்தின் அனைத்து அரசுத் துறை இயக்குநகரங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்இது போக ஒவ்வொரு மாவட்டத்திலும் வர தட்சணை தடுப்பு அதிகாரிகளும் நிய மிக்கப்பட்டுள்ளனர்அவரிடம் அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் உயரதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் துறையில் பணி செய்வோரின் திருமண விவரங் கள்வரதட்சணை மறுப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் அறி வுறுத்தப்பட்டுள்ளதுமேலும் வரதட் சணை வாங்கிக் கொண்டு அரசு அதி காரிகள் திருமணம் செய்தது தெரிய வந் தால் அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் கேரள அரசு கடும் எச்சரிக்கை விடுத் துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக