• Viduthalai
கேள்வி: பெரியாருக்குக் கோவில் கட்டி, கி. வீரமணியை அர்ச்சகராக நியமித்தால் எப்படி இருக்கும்?
பதில்: பெரியார் திடலில் நடப்பது ஈ.வெ.ரா. வழிபாடு தான். அதைச் செய்யும் வீரமணி பூஜாரி தான். அதை விடுங்கள். தமிழகத்தில் பிள்ளை யாரைப் போல் முச்சந்திகளில் இருப்பது ஈ.வெ.ரா. சிலைதான். பிள்ளையார் போல் ஈ.வெ.ரா.வுக்கும் கோவில் தேவையில்லை. ஈ.வெ.ரா.வையும், பிள்¬ ளயாரையும் வழிபடும் முறையில்தான் வித்தியாசம். பிள்ளையார் சிலைக்கு தேங்காய் உடைத்து வழி பாடு. ஈ.வெ.ரா. சிலைக்கு மாலை போட்டு வழிபாடு. பிள்ளையாரை வழிபடாத வர்களே கிடையாது. ஈ.வெ.ரா.வை வழிபடாத அரசியல்வாதியே கிடையாது. பா.ஜ.க. தலைவர் முருகனே ஈ.வெ.ரா.வுக்கு மாலை போட்டு வழிபட்டாரே!
'துக்ளக்' 4.8.2021 பக்.11
தந்தை பெரியார் சிலை நாடெங்கும் இருப்பது பார்ப்பனர்களின் அடி வயிற்றைக் கலக்கோ கலக்கு என்று கலக்கி - அது அவாளின் மூளையையும் (?)தாக்கோ தாக்கு என்று தாக்கி, அதனால் வாந்தியும், பேதியும் ஏற்பட்டு, அதனை பேனாவில் நிரப்பி 'துக்ளக்' கொட்டோ கொட்டென்று கொட்டி "ஆசுவாசம்' அடைவதைப் புரிந்துகொள்ள முடிகிறது!
234 உறுப்பினர்கள் கொண்ட தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒரே ஒரு பார்ப்பானைக்கூட உள்ளே நுழையவிடவில்லையே தமிழ்நாட்டு மக்கள் - ஆத்திரம் அலை மோதாதா அக்கிரகார அம்பி களுக்கு?
பெரியார் சிலை ஒன்றும் வழிபாட்டுக்குரிய ஒன்றல்ல - மாறாகக் கடவுளை மறுக்கும் கம்பீரமான சிலை. மானமிகு வீரமணியும் பூஜாரியல்ல - பூணூல் கூட்டத்தின் ஆதிக்கத் திமிரைப் புரட்டிப் போடும் போராளி! மாலை போட்டு யாரும் வழிபடுவதும் கிடையாது. நாமும்கூட சொல்லலாம் - செத்த வனுக்கு உயிர் இல்லை, சாமிகளுக்கும் சக்தியில்லை. எனவே இரு சாரார்க்கும் மாலை போடுவது அந்த அர்த்தத்தில் தானா?
ஒன்றைக் கவனித்தீர்களா? பெரியார் சிலைக்கு, தமிழ்நாடு பா.ஜ.க. தலைவராக இருந்த எல். முருகன் மாலை போட்டு விட்டாராம். அவருக்கு மந்திரி பதவி வேறு கொடுத்து விட்டார்கள் அல்லவா, அந்த ஆத்திரத்தில் இப்பொழுது குத்தி காட்டுகிறார் குருமூர்த்தி.
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவராக வந்த நிலையில் எல். முருகன் பெரியாரை அவமதித்துப் பேச வேண்டாம், எழுத வேண்டாம் என்று கூறி குருமூர்த்திகளுக்குச் சூடு போட்டார்.
அதனைக் கண்டித்து இதே குருமூர்த்தி என்ன எழுதினார் - பெரியாரை பா.ஜ.க. புகழக் கூடாது ('துக்ளக்' 14.10.2020 பக்கம் 5) என்று எழுதவில்லையா?
பெண்களுக்காக பெரியார் பெரிதும் பாடுபட் டவர் என்று பா.ஜ.க.வின் அகில இந்திய செயலாளர் வானதி சீனிவாசன் கருத்துக் கூறவில்லையா?
ஆக அங்கேயும் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லா தார் என்ற பிளவு உள்ளுக்குள் கனலாக தகித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பது வெளிப்படை.
அது சரி, திருப்பதி ஏழுமலையானுக்கும் திருப்பரங்குன்றம் முருகனுக்கும் பூணூல்போட்டு, கடவுள்களும் எங்கள் ஜாதிதான் என்று கூறும் ஜெயேந்திரர் சரஸ்வதியின் சீடகோடிகள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.
கடவுள்கள் எங்கள் ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று பார்ப்பனர்கள் சொல்லும் நிலையில், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, பெரியார் எங்கள் இனத்தின் பாதுகாவலர், வழிகாட்டி என்று காட்டிக் கொள்ளும்போது ஆத்திரப் பூணூல் 'லபோ துபோ' என்று கு(கொ)திப்பானேன்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக