புதன், 28 ஜூலை, 2021

தொண்டறச் செம்மல் தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு ‘தகைசால் தமிழர்' விருது!

 

முதலமைச்சருக்கு தமிழ்கூறும் நல்லுலகம் சார்பில் பாராட்டு - நன்றி!

இவ்வாண்டு நூறா வது ஆண்டில் அடியெ டுத்து வைக்கும் கம்யூ னிஸ்ட் (மார்க்சிஸ்ட்மூத்த தலைவரும்நீண்ட நாள் - மாணவப் பருவந்தொட்டுகொள்கைலட்சியம் இவற்றிற்காகப் போராடி 8 ஆண்டுகளுக்குமேல் சிறைவாசம் செய்தவரும்எளிமையும்தொண்டும் இரண்டறப் பிணைந்த சீரிய தொண்டறச் செம்மலான தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்குநேற்று (27.7.2021) நமது முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட புதிய தொண்டற அங்கீகார விருதான ‘‘தகைசால் தமிழர் விருது'' - முதல் விருதாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப் பட்டிருப்பது கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.

தகுதிமிக்க ஒருவரை இவ்விருதின் முதல் விருதாளராகத் தேர்வு செய்துள்ளது மிகவும் பொருத்தமானதாகும்அவருக்கு நமது வாழ்த்துகள்!

விருது பெறும் தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு அளித்த விருதுதமிழர் ஒருவர் - அவரது மாணவப் பருவம் தொட்டே பொதுத் தொண்டில்சுயமரியாதை இயக்கத்தில் தொடங்கிபொதுவுடைமை கொள்கையில் பூத்துகாய்த்துகனிந்துதொண்டில் பழுத்தவருக்கு சரியான நேரத்தில் கொடுக்கப்பட்ட விருது!

இதனை அறிவித்த உழைப்பின் உருவமாம் - எதனை எப்போது யாருக்குச் செய்வது என்பதில் சரியான முடிவெடுக்கும் ஆற்றல்மிகு முதலமைச் சரான மு..ஸ்டாலின் அவர்களுக்கும்தமிழ்கூறும் நல்லுலகம் சார்பில் நமது பாராட்டும்நன்றியும்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை      

28.7.2021            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக