செவ்வாய், 10 நவம்பர், 2020

ஆண்ட பரம்பரை – ஓரு சிறப்பு பார்வை (சத்திரியர் உண்டா?)

சமீபகாலமாக, முகநூலில் மட்டுமல்ல, போதுவெளிகளிலும், நான் கவனித்த ஒரு போக்கு என்னவென்றால்.

ஆங்கிலேயன் வருவதற்கு முன் நாங்கள் எல்லோரும் சாதி என்றால் என்னவென்றே தெரியாமல் ஒற்றுமையாக வாழ்ந்தோம் அவன் வந்து தான் சட்டம் போட்டு, எங்களை இப்படி பிரித்துவிட்டான் தெரியுமா என்பது ஒரு சாராரின் வாதம்

இந்துமதத்தின் மூலமுமாக தமிழுக்கு பார்பனர் எவ்வளவு தொண்டு செய்திருக்கிறார்கள் என்பது ஒரு சாராரின் வாதம்

எல்லோருமே, யாரை பார்த்தாலும் நாங்கெல்லாம் அந்த காலத்துல ஆண்டபரம்பரை தெரியுமா என்ற ஒரு முரட்டு வாதம் வைக்கிறார்கள்.

சரி முன்னோர் பெருமை பேசுகிறார்கள் என்று நினைத்தால், எல்லோருமே சொல்வது நாங்க மட்டும் தான் ஆண்டபரம்பரை மற்றவர்கள் எல்லாம் எங்களுக்கு அடிமை பணி செய்த பரம்பரை என்று வேறு ஒரு வாதத்தை வைக்கிறார்கள்.

இவர்கள் எல்லோருமே, பார்பானை திட்டினால் கண்டிப்பாக பார்பானுக்கு முன்னால் ஒடிவந்து உனக்கு என்னடா தெரியும் என்று கேட்கிறார்கள்.

மொத்தத்தில் நான் புரிந்து கொண்டது என்னவென்றால், தமிழர்கள் என்று தன்னை, ஆண்டபரம்பரையாக அடையாளப்படுத்தி கொள்ள இந்துமதம் அடையாளமாக தேவைபடுகிறது, அந்த மதபுராணக் கதைகள் சொல்லிகொடுக்கும் பார்பனன், தன் பாரம்பரிய காவலனாக தமிழர்கள் கண்களுக்கு தெரிகிறான்.

பிராமணன் என்று தனக்கு மேலே ஒருவன் இருப்பதை ஒப்புக்கொண்டால் தான் தன்னை ஆண்டபரம்பரை சத்திரியன் என்று சொல்லிக்கொள்ள முடியும் என்றாலும் பரவாயில்லை, அதற்காக நான் பார்பானுக்கு ஆதரவு கொடுப்பேன் என்பதே இவர்களின் நிலைப்பாடாக இருக்கிறது. 

சரி பார்பானின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது என்று பார்ப்போம், வெறும் அனுமானங்கள் மூலம் அல்ல வரலாற்று பூர்வமாக பார்ப்போம்.

1600-களில் மாவீரன் சத்திரபதி சிவாஜியையே சத்திரியன் அல்ல, அவனுக்கு மன்னனாக பட்டம் சூட்ட மாட்டோம் என்று சொன்னவர்கள் தான் இந்த திருட்டு பார்பனர்,

மாவீரன் சிவாஜி, தவிர வேறு யாருமே அவுரங்கசீபை எதிர்த்து போராடவும் இல்லை வெற்றி பெறவும் இல்லை, அவனுக்கே பார்பனரால் அந்த கதி என்றால் மற்ற ஆண்ட பரம்பரைகளை என்ன செய்தார்கள் என்று பார்ப்போம்

(இது பற்றி விரிவாக படிக்க எனது சத்ரபதி சிவாஜியின் - தெரியாத பக்கங்கள் பகுதியை  பாருங்கள்)

குப்தர்கள் காலத்திலிருந்து மொகலாயர் காலம் வரை பார்பனருக்கு தங்கள் மனுதர்ம நாலு வருண விதிகளை மக்கள் மேல் செலுத்தி நோகாமல் வாழ எந்த தடையும் ஏற்படவில்லை.

ஆனால் ஆங்கிலேயர் காலத்தில் அது முடியவில்லை, அவர்கள் குழந்தை திருமணம் முதல் பெண்களை உயிருடன் எரிக்கும் உடன்கட்டை ஏரும் வழக்கம் வரை பலவற்றை தடுத்து சட்டம் போட்டார்கள்,

அவர்களிடம் பார்பனரின் பருப்பு வேகவில்லை.

1837-ல் கிழக்கிந்திய கம்பனி ஆட்சியில், கிருஸ்துவர்களுக்கு இங்கிலாந்து நாட்டின் சட்டம், இஸ்லாமியர்களுக்கு ஷரியத் சட்டம் உள்ளது

இந்துகளுக்கு ஏற்ற மாதிரி எப்படி சட்டம் இயற்றுவது என்று ஆங்கிலேயர் பார்பனரை கேட்டார்கள்.

இது நடந்ததது 1837 முதல் 1928 வரை
பார்பனர் சொன்னது இந்தியாவில் சத்திரியர்கள் என்று யாரும் இல்லை

இந்தியாவில் சத்திரியர்கள் என்று யாரும் இல்லை என்று பார்பனர் தொடுத்த வழக்கு எண் – 1 

பார்பனர்களின் வாதம், இந்துகளில் பிராமணர், சத்திரியர்கள் இருவரை தவிர யாருக்கும் சொத்துகளை வாங்கவோ விற்கவோ உரிமையில்லை,

மனுதர்மபடி பிராமணர் மற்றும் சத்திரியர் மட்டுமே சொத்துகளை வைத்து கொள்ள உரிமை உண்டு.

புராண காலத்தில் பரசுராமர், தன் தந்தையை ஒரு சத்திரியன் கொன்ற கோபத்தில் இந்தியாவில் எல்லா சத்திரியர்களையும் கொன்றுவிட்டார், எனவே இந்தியாவில் இப்போது மீதம் இருப்பவர்கள் அனைவரும் பார்பனர், சூத்திரர், பஞ்சமர் என்ற பிரிவுகளில் மட்டுமே வருவார்கள், மனு தர்மப்படி இவர்களில் பார்பனரை தவிர வேறு யாருக்கும் சொத்து வைத்து கொள்ள உரிமையில்லை,

எனவே, பார்பனரை தவிர வேறு யாருக்கும் சொத்து வைத்து கொள்ள உரிமையில்லை என்று சட்டமியற்ற கோரி கிழக்கிந்திய கம்பெனி அரசுக்குக்கு 1837-ல் பார்பனர் மனு கொடுத்தனர்.

நல்லவேளை கிழக்கிந்திய கம்பெனியின் பிரைவி கவுன்சில் இப்படி ஒரேஅடியாக உங்கள் புராணக்கதைகளை ஏற்றுக்கொண்டு வேறு யாருக்குமே சொத்து வைத்து கொள்ள உரிமையில்லை என்றெல்லாம் ஒத்துகொள்ளமுடியாது, நிச்சயம் சத்திரியர்கள் இருப்பார்கள் ஏன்று சொல்லி அந்த முதல் வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இந்தியாவில் சத்திரியர்கள் என்று யாரும் இல்லை என்று பார்பனர் தொடுத்த வழக்கு எண் – 2 – ஆங்கிலேயரின் சட்ட ஆவண எண் (I.L.R.10 மற்றும் I.L.R.12) 1886

இந்த வழக்கு வரும் போது கம்பெனி ஆட்சி முடிந்து பிரிட்டிஷ் ஆட்சி வந்துவிட்டது.

பார்பானுக்கு சிப்பாய் கலக்கம் பற்றியெல்லாம் கவலை இல்லை, இந்தியாவில் சத்திரியர்கள் யாருமே இல்லை என்பதை நிருபணம் செய்ய மீண்டும் போராடுகிறான்

இந்த வழக்கு வழக்கம் போல பார்பனருக்கும், வங்காள கயஸ்தா மற்றும் பீகாரின் கயஸ்தா பிரிவினர் இவர்களில் யார் சத்திரியர் என்று பிரிட்டிஷ் கோர்ட்களில் நடைபெறுகிறது 

இந்த வழக்கில் வங்காளத்தில் உள்ள கயஸ்தா பிரிவினர் சத்திரியர் தான் என்று தீர்ப்பு பிரிட்டிஷ் கோர்ட்களில் வழங்குகிறார்கள்

இந்தியாவில் சத்திரியர்கள் என்று யாரும் இல்லை என்று பார்பனர் தொடுத்த வழக்கு எண் – 3 – ஆங்கிலேயரின் சட்ட ஆவண எண் (1916) 20 Cal. W.N.901 1916-ல் மறுபடியும் பார்பனர் வழக்கு தொடர்ந்து வங்காளத்தில் உள்ள கயஸ்தா பிரிவினர் சத்திரியர் அல்ல என்று ஆங்கிலேய கோர்டில் தீர்ப்பை பெறுகிறார்கள். இந்த வழக்கு 1926-ல் தான் முடிகிறது.

இந்தியாவில் சத்திரியர்கள் என்று யாரும் இல்லை என்று பார்பனர் தொடுத்த வழக்கு எண் – 4 – ஆங்கிலேயரின் சட்ட ஆவண எண் .L.R. (1928) 52 Bom.497 மறுபடியும் சிவாஜி பரம்பரையை விடாமல் வம்புக்கிழுத்த  பார்பனர், 1926-ல் வெங்கோஜி அல்லது எக்கோஜி என்று அழைக்கப்பட்ட சிவாஜியின் தம்பியின் வழி வந்தவர்கள் தஞ்சை மன்னர்களாக இருக்கிறார்கள் அவர்கள் சத்திரியர்கள் அல்ல சூத்திரர்கள் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார்கள். 

அந்த வழக்கின் 229 பக்க தீர்ப்பில், மகாராஷ்டிரத்தில் உள்ள சிவாஜி வம்சம் என்று சொல்பவர்களை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம் (long gap from 1600-1900)

முதல் ஐந்து குடும்பங்கள் 
இரண்டாவது 96 குடும்பங்கள் 
மற்றவர்கள் 

என்று பிரிக்கலாம், இவர்களில் முதல் இரண்டு பிரிவினரும் சத்திரியர்கள், அதனால் வெங்கோஜி அல்லது எக்கோஜி என்று அழைக்கப்பட்ட சிவாஜியின் தம்பியின் வழி வந்தவர்கள் சத்திரியர்களே என்று பிரிட்டிஷ் கோர்ட்டு தீர்ப்பு வழங்குகிறது

இந்தியாவில் சத்திரியர்கள் என்று யாரும் இல்லை என்று பார்பனர் தொடுத்த வழக்கு எண் – 5 

மதுரையை சேர்ந்த யாதவர்கள் 1927-ல் நாங்களும் யாதவ குலத்தில் பிறந்த கிருஷ்ணனின் வம்சம் நாங்களும் சத்திரியர்கள் தான் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க, எதிர்த்து வாதாடிய பார்பனர் அந்த வழக்கை தள்ளுபடி செய்ய வைக்கிறார்கள்.

இப்படியாக ஆங்கிலேயர் காலத்திலும் பார்பனர் நிறுவ முயன்றது என்னவென்றால், இந்தியாவில் சத்திரியன் என்று யாரும் இல்லை.

இந்து மனு தர்மப்படி பிராமணன் மட்டுமே சொத்து வைத்து கொள்ளலாம் படிக்கலாம், இன்னும் பிற பிற லாம் லாம் லாம்

ஆகவே, தன்னை ஆண்ட பரம்பரை என்று சொல்லிக்கொள்ள ஆசைப்படும் எல்லோரும் ஒன்று புரிந்து கொள்ளுங்கள்,

 பார்பான்  உங்களை நேரில் பார்க்கும் போது ஆமா அய்யா நீங்கள் எல்லாம் எவ்வளவு பெரிய ஆண்டபரம்பரை என்றுதான் சொல்லுவான்

ஆனால் உங்களை சூத்திரன் ஆக்க சட்டப்படி எல்லா வேலையும் செய்வான்.

எல்லா சாதியிலும் உங்கள் சொந்தகாரன் (என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்) உங்களை ஆண்டபரம்பரையில் சேர்க்க பல டகால்டி வேலை செய்வான் அதையெல்லாம் காதில் போட்டுகொள்ளாதீர்கள்

உண்மையில் உங்களுக்கு உங்கள் சாதி உங்கள் சமுகத்தின் மீது அன்பு இருந்தால், ஆண்ட பரம்பரை, புராண கதை சொல்லி பெருமை பேசுவதை விட்டு விட்டு, உங்கள் சமுகத்தில், கல்வியில், அறிவில் நாம் இப்போது என்ன செய்கிறோம் என்று சிந்தியுங்கள்

குறைந்த பட்சம் உங்கள் சொந்த சமுகத்தில், உள்ள ஏழை மாணவர்கள் படித்து முன்னற உதவுங்கள், பணமாக முடியவில்லை என்றாலும் உங்கள் நேரத்தை கொடுங்கள், படிப்புக்காக வங்கியில் கடன் வாங்க உதவுங்கள்  

ஆண்ட பரம்பரை கதை பேசினால், பார்பான் உண்டியல் மட்டுமே நிரம்பும், அப்போதும் நீங்கள் ஆண்ட பரம்பரை இல்லை என்று அவன் எங்காவது கோர்டில் கேஸ் போட்டு கொண்டுதான் இருப்பான்.

இது போன்று இந்தியாவின் வரலாற்றில் தெரியாத பல்வேறு பக்கங்களை படிக்க இன்றே "தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்" நூலை கீழ்கண்ட லிங்கில் வாங்கவும்

விலை - Rs.200/- மட்டுமே, COD வசதியும் உண்டு 

http://tamilnool.club/index.php?route=product/product&product_id=137

- கிருஷ்ணாவேல் TS, முகநூல் பதிவு,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக