22.6.23ம் நாள் பகல் 1.00 மணியளவில் செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழக தலைவர் பூ.சுந்தரம் அவர்களின் இளைய மகள் சு.புவியரசி B.Sc., மெ.வெங்கடேஷ் B.E., ஆகியோர்களுக்கு சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் மிக எளிய முறையில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையில் கழக தோழர்கள் மற்றும் மணமக்கள் உறவினர்கள் முன்னிலையில் மிக சிறப்பாக திருமணம் நடைபெற்றது.
பரப்புரை செயலாளர் அ.அருள்மொழி, பிரின்ஸ் என்.ஆர். எஸ். பெரியார், வழக்கறிஞர் பா. மணியம்மை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மணமக்கள் வாழ்க.
சுந்தரம், ஆனந்தி ஆகியோரின் மகள் புவியரசிக்கும் - பொறியாளர் வெங்கடேசுக்கும் ஜாதி மறுப்பு இணையேற்பு விழா நடைபெற்றது. மணமக்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்.
(பெரியார் திடல் - 22-06-2023)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக