செவ்வாய், 18 மே, 2021

கல்வித் துறையில் இயக்குநர் பதவியை ரத்து செய்யக்கூடாது!

புதிய கல்விக் கொள்கை: அமைச்சர்களை அழைக்காமல் அதிகாரிகளை மத்திய அரசு அழைத்ததால் தமிழக அரசு நிராகரித்தது சரியான முடிவே!

கல்வித் துறையில் இயக்குநர் பதவியை ரத்து செய்யக்கூடாது!

புதிய கல்விக்  கொள்கை என்னும் குலக்கல்வியை என்றைக்கும் தமிழகம் ஏற்காது - அதனைக் கைவிடுக!

மத்திய கல்வி அமைச்சரின் புதிய கல்விக் கொள்கைபற்றிய ஆலோ சனைக் கூட்டத்தில் மாநில அமைச்சர்களை அழைக்காமல்அதிகாரிகளை அழைத்தது சரியானதல்லஅதிகாரிகள் கொள்கை வகுப்பாளர்கள் அல்லர் - அந்த வகையில்தமிழ்நாடு அரசு அந்தக் கூட்டத்தில் பங்கேற்காமல் நிராகரித்தது சரியானதேமத்திய பா..அரசு திணிக்க விரும்பும் புதிய தேசியக் கல்விக் கொள்கை - 2019 என்பது குலக் கல்வித் திட்டமே - இந்திசமஸ்கிருதத் திணிப்பே - கார்ப்பரேட்டுகளின்  நலனுக்கே என்பதால்தமிழ்நாட்டு மக்களும்தமிழ்நாடு அரசும் எந்த நிலையிலும் ஏற்கப் போவதில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

கல்வியில் சிறந்த தமிழ்நாடுஎன்ற பெருமையை குலைக்கும் வகையிலும்மீண்டும் புதுவகை மனுதர்மம் - குலதர்மம் கல்வித் துறையில் தனது கொடுங்கரங்களை நீட்டவுமான முயற்சியே புதிய கல்விக் கொள்கை என்னும் மத்திய கல்விக் கொள் கையாகும்.

இதற்குத் தமிழ்நாடு தொடக்கம் முதலே தனது எதிர்ப்பைப் பதிவு செய்தே வந் துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்தலைவர் உள்பட வெளிப்படையாகவே பிரகடனப்படுத்தி உள்ளனர்

மக்களாட்சி என்பதன் தனித்துவம் மாநில உரிமைகளின் பாதுகாப்புமுன்னே வேகமாகச் செல்லும் மாநிலத்தை பல ஆண்டுகள் பின்னே இழுப்பது போன்ற வைதான் இப்புதிய கல்விக் கொள்கை.

மத்தியில் ஆட்சி செய்யும் பா... - அதன் அரசியல் வழிகாட்டியும்ஆணை யருமான ஆர்.எஸ்.எஸ்வகுத்துத் தந்த கல்வித் திட்டம்தான் இது என்பதைஆர்.எஸ்.எஸ்தலைவர் உள்பட வெளிப் படையாகவே பிரகடனப்படுத்தி உள்ளனர்!

இதனை தமிழ்நாட்டில் பா..ஒன்றைத் தவிரமற்ற அத்துணைக் கட்சிகளும்பெரும்பாலான கூர்த்த மதி படைத்த கல்வி யாளர்களும் கடுமையாக எதிர்த்தே வந் துள்ளனர் - கடந்த ஓராண்டுக்கு மேலாக.

அரசமைப்புச் சட்டப்படி ‘கல்விஎன்பது மத்திய அரசின்கீழ் மட்டுமே உள்ள அதி காரம் அல்ல. (It is not in the Union List); ஒத்திசைவுப் பட்டியல் என்ற (Concurrent List) இல் உள்ள அதிகாரம் ஆனதால்மத்திய அரசுக்கு உள்ள உரிமை அளவு மாநிலங்களுக்கும் உண்டுமேலும் இந்தியா ஒரு கூட்டாட்சி (Union of States) என்ப தாலும்பல கலாச்சாரங்கள்பல மொழிகள் என்ற பன்முகத் தன்மை கொண்ட பரந்த நாட்டில்அவரவர் அவர்தம் மொழிபண்பாடுகலைநாகரிகம் இவற்றைப் பாதுகாக்க - பரப்ப - இளம்தலைமுறைகளை ஆயத்தப்படுத்த - அந்த மக்களின் உரிமை களைப் பாதுகாக்க கல்வி என்பது மிக முக்கியமானது ஆகும்!

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் விளக்கம்!

இதனை ஏதோ ஒற்றை ஆட்சியாகவே கருதிக்கொண்டு,  வகுக்கப்பட்டுத் திணிக் கப்படும் இக்கல்வித் திட்டத்திற்கு தமிழ் நாட்டின் எதிர்ப்பு ஏன் என்பதை நேற்று (17.5.2021) கூட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்கள் தெளிவாக விளக்கி யுள்ளார்.

அதற்குமுன் உயர்கல்வித் துறை அமைச்சர் திரு..பொன்முடி அவர்களும்புதிய கல்விக் கொள்கையின் பல அம்சங் களை எங்களால் ஏற்க இயலாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

பொதுநலவாதிகளும் கடுமையாக எதிர்க்கின்றனர்

1. குலக்கல்வித் திட்டத்தை மறைமுக மாகப் புகுத்துதல்

2. கடந்த 54 ஆண்டுகளாக செயல் பாட்டில் இருந்துவரும் அறிஞர் அண்ணா பிரகடனப்படுத்திய இருமொழிக் கொள்கைக்கு வேட்டு வைத்துமும்மொழிக் கொள்கைத் திணிப்பு.

3. 22 மொழிகளை அரசமைப்புச் சட்டம் ஏற்றிருக்கும் நிலையில்மக்களிடம் ஒரு சதவிகிதம்கூட புழக்கத்தில் இல்லாத சமஸ் கிருதத்திற்கே முக்கியத்துவம்திணிப்பு.

4. கல்வியை அனைவருக்கும் கற்றுத் தருவதற்குப் பதிலாக, 5 ஆவது வகுப்பு, 8 ஆவது வகுப்பு நுழைவுத் தேர்வு - அதன் பின்னரும் கல்லூரிப் படிப்புக்கும் நுழைவுத் தேர்வு என்ற வடிகட்டும் பன்னாடை முறை திணிப்பு.

5. இட ஒதுக்கீடு என்ற சமூகநீதியை அறவே பறித்துஒப்புக்கு  ஏதோ கூறி சமூகநீதியைத் தகர்த்தல்.

6. இலவசக் கல்விஏழைஎளிய மற்றும் மக்களுக்கு இனி எட்டாக் கனி - கார்ப்ப ரேட்டுகளுக்குக் கதவு திறக்கும் கல்வி முறை என்று இத்திட்டம் தயாரிக்கப்பட் டிருப்பதால்அத்துணை பொதுநலவாதி களும் கடுமையாக எதிர்க்கின்றனர்.

இந்நிலையில்தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் முடிவுகள் வந்துகடந்த 7 ஆம் தேதிமுதலமைச்சர் திரு.மு..ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.ஆட்சிப் பொறுப்பேற்றுஅமைச்சர்கள் பல துறை களுக்குப் பொறுப்பேற்றுகரோனா கொடுந் தொற்றிலும் முதல்வர் தொடங்கி அனை வரும் ‘பம்பரமாகசுழன்று செயல்பட்டு வருகின்றனர் - கடும் சோதனைகளுக் கிடையில்!

தமிழ்நாடு பங்கேற்காமல்நிராகரித்து தவிர்த்துள்ளது!

இந்நிலையில்மத்திய கல்வி அமைச்சர் புதிய கல்வித் திட்டம்பற்றி விவாதிக்கும் கூட்டத்தினை மாநிலக் கல்வித் துறை அமைச்சர்களை அழைத்து நடத்துவதும் தானே அரசமைப்புச் சட்டப்படியும்ஜன நாயக முறைப்படியும் சரியானது. (5 மாநிலத் தேர்தல்கள் நடந்து முடிந்து புதிய அரசுகள் வந்துள்ள நிலையில்ஏதோ குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறுவதுபோலவெறும் மாநிலபள்ளிக் கல்வித் துறை செயலாளர்களை மட்டுமே அழைத்து (அய்..எஸ்அதிகாரிகள்கூட்டம் அறிவித்தபோதுதமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்மாநிலக் கல்வி அமைச்சர்களை அழைத்து விவாதிப்பதே சரி என்ற கோரிக்கையை சில நாள் களுக்குமுன் வைத்ததைமத்திய அரசின் கல்வித் துறை அமைச்சர் கண்டுகொண்ட தாகக் காட்டிக் கொள்ளாமல்தானடித்த மூப்பாகவே அந்தக் கூட்டத்தை - தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்காமல் கூட்டம் நடத்தியதால்தமிழ்நாடு அக்கூட்டத்தில் பங்கேற்காமல்நிராகரித்து தவிர்த்துள்ளது!

இதுபற்றி  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்செய்தியாளர்களிடையே காரண காரியங்களையும் நன்கு விளக்கி யுள்ளார்!

கொள்கைபூர்வமாகவே

அறிவித்திருக்கிறார்கள்

தி.மு..வைப் பொறுத்தவரை - மத்திய அரசுடன் எப்படி உறவு (கூட்டாட்சி என்பதால்இருக்கும் என்பதை அறிஞர் அண்ணாகலைஞர் ஆட்சியில் விளக்க மாக - கொள்கைபூர்வமாகவே அறிவித் திருக்கிறார்கள்.

‘‘உறவுக்குக் கைகொடுப்போம் -

உரிமைக்குக் குரல் கொடுப்போம்!''

என்பதாகும்.

பிரச்சினைக்குரிய புதிய கல்விக் கொள்கையை எதிர்த்த நிலைப்பாட்டுடன் தமிழ்நாட்டு மக்கள் தி.மு.கூட்டணிக்கு வாக்களித்துள்ள நிலையில்அந்த அரசின் நிலைப்பாட்டை (ஷிtணீஸீபீமத்திய கல்வித் துறை அமைச்சர் அறியசரியான வழி - தமிழ்நாட்டு கல்வித் துறை அமைச்சரை அழைத்து அறிவதுதானே நியாயம்முறையானது?

ஒத்துழைப்பு நல்கும் கூட்டாட்சி'

பா...வே ஒரு புதிய ‘சொற்றொடரை'  ‘சிஷீஷீஜீமீக்ஷீணீtவீஸ்மீ திமீபீமீக்ஷீணீறீவீsனீ' - ‘ஒத்துழைப்பு நல்கும் கூட்டாட்சிஎன்ற சொற்றொடரை கையாளுகின்றனரேஅதன்படி மாறுபட்ட கருத்து ஏன் - அதற்கான காரண காரியங்கள் என்னவென்று ஆராய வாய்ப்பு பெறஅமைச்சர்கள்தானே தெளிவுபடுத்த முடியும்?

அய்..எஸ்அதிகாரிகள் முழு சுதந்திரம் பெற்றவர்கள் அல்லகொள்கை வகுப்பாளர்கள் அல்ல.

எனவேதமிழகத்தின் கரோனாவோடு போராடும் நிலையில்இப்படி மாநில உரிமைகளையும் பாதுகாப்பதும்தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தந்த ஆணையை (விணீஸீபீணீtமீசெயல்படுத்தும் வகையில்கடமையாற்றி வரும்போதுதமிழ்நாட்டு கல்விக் கண் குத்தப்படாமல் பாதுகாக்க எடுத்த எடுப்பிலேயே கவனமாக இருப்பது என்பது முக்கியம் என்பதை எடுத்துக்காட் டியுள்ள முதல்வர்அமைச்சர் பெருமக் களை நம் மக்கள் - கல்வியாளர்கள் பாராட்டுவர்!

கல்வித் துறையில் இயக்குநர் பதவியை ரத்து செய்யக்கூடாது!

மற்றொரு முக்கிய பிரச்சினை முதல்வர் அவர்களும்அரசும் மறுபரிசீலனை செய்யவேண்டும்.

பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்களின் பதவிகளை ரத்து செய்துஅனைத்தும் ஒருங்கே ஆணையர் என்ற அய்..எஸ்அதிகாரியின் மூலம் என்று ஆக்குவது அதிகாரப் பரவலைத் தலைகீழாக்கிஒரே ஒருவரிடம் குவிப்பதுகல்வி வளர்ச்சியை வெகுவாகப் பாதிக்கும்!

அய்..எஸ்அதிகாரிகள் ஒரே துறையில் இருப்பவர்கள் அல்லர் - மாற்றப்படுபவர்கள்.

கல்வித் துறையில் ஆழ்ந்த அறிவும்அனுபவமும் பெற்றவர்களாலேயே சாதனை செய்ய முடியும்கல்விநெறிக் காவலர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் காமராசர் ஆட்சிக் காலத்தில் செய்த கல்விப் புரட்சிதான் இன்றைய மாபெரும் வளர்ச்சிக்கு அடித்தளம்எனவேஇந்தப் புதிய மாற்றத்தை ரத்து செய்தோமாற்றியோ பழையபடி இயக்குநர்கள்கல்வி அறிஞர் களால் நிர்வகிக்கப்படுவதே சிறந்த வளர்ச்சி யைப் பெருக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தும்.

இதே தத்துவம் பல ஆட்சித் துறை களிலும் பரவலானால் - ஆளுமை சிறந் தோங்கும் என்பது உறுதி!

மாண்பமை முதல்வர் இதுபற்றி காலந்தாழ்த்தாமல் விரைந்து மறு ஆய்வு செய்துஇயக்குநர்களை மீண்டும் கொண்டு வருவது அவசியம் ஆகும்.

கி.வீரமணி 

தலைவர்

திராவிடர் கழகம் 

சென்னை      

18.5.2021             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக