திங்கள், 8 பிப்ரவரி, 2021

தமிழக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தித் திணிப்பை கைவிட வேண்டும்


மத்திய பா..அரசுக்கு தளபதி மு..ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை,பிப்.8- திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அவர்கள் நேற்று (7.2.2021) வெளியிட் டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள் ளதாவது:

தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாண வர்கள் கண்டிப்பாக சமஸ்கிருதம் படித்துதேர்ச்சி (பாஸ்அடைந்தால் மட்டுமே, 6ஆம் வகுப்பிலிருந்து 7ஆம் வகுப்பிற்குச் செல்ல முடியும்” என்றுதகவல் அறியும் உரிமைச் சட் டத்தின் வாயிலாகவெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. “சமஸ் கிருதத்திற்குப் பதில்தமிழை மொழிப் பாடமாக எடுத்து தமிழ்நாட்டு மாணவர்கள் படிக்க முடியாது” என்று வெளிவந்துள்ள இன்னொரு தகவல் பேரதிர்ச்சியளிக்கிறதுதமிழ்மொழியைசொந்தத் தமிழ் மண்ணிலேயே அவமதிக்கும் துணிச் சல்மத்திய பாஜ அரசுக்கு எப்படிஎங்கிருந்து வந்தது.

49 கேந்திரிய வித்யாலயா பள்ளி களிலும் தமிழ் கற்பிக்கும் ஆசிரி யர்களே இல்லை என்ற அவல நிலைஅதிமுக அரசுபாஜவிடம் கும்பிட்டுக் கூட்டணி வைத்து குழைந்து குழைந்து குற்றேவல் செய்வதால் விளைந்துள்ள விபரீதம் ஆகும்.

தமிழகத்தில் தமிழ்மொழிக்கு உரிய இடம் இல்லை-பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் நியமனமும் இல்லை என்று மதிமயங்கிச் செயல் படும் மத்திய பாஜ அரசு-இந்திப் பேசும் மாநிலங்களில் இது போன்று “இந்தி கட்டாயம் இல்லை”; “இந்தி கற்றுக் கொடுக்க ஆசிரியர்களை நியமிக்க மாட்டோம்” என்று சொல்லி  விட முடியுமாமாணவர்கள் தமிழில் தேர்ச்சி (பாஸ்அடைந்தால் மட்டுமே, 6ஆம் வகுப்பிலிருந்து

7-ஆம் வகுப்பிற்குச் செல்ல அனுமதிக் கப்படுவார்கள் என்று இந்தி பேசும் வட மாநிலங்களில் உத்தரவு பிறப் பித்து விட முடியுமாஆனால் அங் கெல்லாம் செய்ய சிறிதும் துணிச்சல் இல்லாத மத்திய பாஜ அரசு-“தமிழ் நாட்டில் தமிழ் சொல்லிக் கொடுக்க மாட்டோம் - தமிழாசிரியர்கள் நிய மிக்க மாட்டோம்'' என்று ஆணவ மாகக் கூறுவதற்குக் காரணம்தமிழ கமும் -தமிழர்களும் இளிச்சவாயர்கள்ஏமாந்த சோனகிரிகள் என்ற எண்ணமா?

தமிழ்நாட்டில் உள்ள 49 கேந் திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியைக் கற்கவும் - கட்டாயமாக கற்கவும் உத்தரவிட்டு-சமஸ்கிருதஇந்தித் திணிப்பை தமிழகத்தில் அறவே கைவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்தமிழ்ச் செம்மொழிக்கு, “அதிமுக-பா.அரசுகள்” கை கோத்து உருவாக்கும் பேராபத்தை தமிழகம் ஒருபோதும் மறக்காதுமன்னிக்காதுதமிழகத்தின் எதிர்காலமாம் இன் றைய மாணவமாணவியர் என் றைக்கும் மன்னிக்க மாட்டார்கள் என்று எடுத்துரைக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக