பல கொலை வழக்குகளில் சிக்கியவர்களும்கேடிகளும் பா...வில் சேர்வது ஓர் ஆபத்தான போக்காகும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 அறிக்கை வருமாறு:

செங்கல்பட்டு பகுதியில் ஏரிக்கரையில் மணற் கொள்ளையைத் தடுப்பவர்களை தலையை வெட்டிக் கொலை செய்யும் கூலிப்படைத் தலைவன் சீர்காழி சத்யாகோவையில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட மூன்று கொலைகள் உள்பட 5 கொலை வழக்குகளோடு, 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளும் இவர்மீதுள்ளதாகக் கூறப்படுகிறதுஇப்படிப்பட்டவர் அண்மையில் பா..வில் இணைந்துள்ளார்.

சேலத்தில் 5 முறை குண்டர் சட்டத்தில் கைதான ரவுடி முரளிக்கு தமிழக பாஜகவில் இளைஞரணியில் பொறுப்பு வழங்கப்பட்டது.

வடசென்னையை கலக்கிய கல்வெட்டு ரவி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாஜகவில் இணைந்தார்கல்வெட்டு ரவி மீது 6 முறை குண்டர் சட்டம் பாய்ந்தது. 6 படுகொலை வழக்குகளில் தொடர்புடையவர் அந்த ரவிஇதேபோல் சென்னை சூர்யா என்ற ரவுடியும் பாஜகவில் இணைந்தார்.

வடசென்னை கஞ்சா வியாபாரியாக வலம் வந்த புளியந்தோப்பு அஞ்சலைக்கும் பாஜக அடைக்கலம் கொடுத்ததுஅவர் வடசென்னை மாவட்ட பாஜக மகளிர் அணி செயலாளராகி விட்டார்புளியந்தோப்பு அஞ்சலை மீது கொலை உள்ளிட்ட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன

அதேபோல் புதுச்சேரியை மிரளவைத்துக் கொண் டிருக்கும் பெண் தாதா எழிலரசியும் பாஜகவில் இணைந் துள்ளார்புதுவை முன்னாள் சபாநாயகர் வி.எம்.சிசிவகுமார் படுகொலை வழக்கில் முக்கிய குற்றவாளி எழிலரசிதான்சமூக சேவகி என்ற அடையாளத்துடன் வலம் வரும் தாதா எழிலரசி இப்போது பாஜக பிரமுகராகி விட்டார்.

 புதுச்சேரி ரவுடிகளான சோழன்விக்கிபாம்வேலு ஆகியோர் ஏற்கெனவே பாஜகவில் இணைந்து பதவி களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனந்த விகடன்இதழ் 2008 ஆம் ஆண்டு வெளியிட்ட செய்தியில் உள்ள பயங்கர கொலைகாரர் பட்டியலில் உள்ளவர்களில் பலர் இன்றைய பாஜக பிரமுகர்கள்தாம்.

 தி.மு.திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைச்செல்வன் கொலை மற்றும் மாங்குடி ஊராட்சிமன்றத் தலைவர் ஜெயக்குமார் கொலைகளில் சம்பந்தப்பட்ட நபர்கள் எந்தக் கட்சியில் சங்கமம் ஆகியுள்ளனர்இதில் ஜெயக்குமார் கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் தீவிரம் காட்டிவந்தவர்இதனால் இவருடைய கிராமத்துக்கு மத்திய அரசின் 'நிர்மல் புரஸ்கார்விருது கிடைத்தது.  இவரையும் கொலை செய்தனர்.

 இந்தக் கொலைகளுக்குப் பின்னால் இருந்தவர்   பி.ஜே.பி.யின் திருவாரூர் மாவட்டச் செயலாளரான மாணிக்கம்இந்த  மாணிக்கத்தின் கூட்டாளிகள் பலர் சிறையில் இருந்து பின்னர் பிணையில் வந்தனர்இவர்களில் குரங்கு ஆனந்த்குடவாசல் அருள்சீர்காழி ஆனந்த்சென்னை பாலாஜிகுடந்தை அரசன் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.

தஞ்சை 'பாம்பாலாஜி குரூப்பும் அதிவேகமாக வளர்ந்து வருகிறதுஅதில் ஸ்பீடு பாலாஜிஅரியமங்கலம் ஜாகிர்தஞ்சை பாக்கெட் ராஜாகுடவாசல் சீனுபல்லு கார்த்திக்பல்லு சீனுபூண்டு பதன்மெடிக்கல் காலேஜ் வெற்றிசுரேஷ் என்று அனைவருமே கூலிக்கு கொலை செய்யும் கும்பல்களாவர்பயங்கர கொலைச்செயலில் ஈடுபட்டவர்கள்இவர்களோடு தற்போது சீர்காழி ஆனந்த் உட்பட அனைவருமே பாஜகவில் சங்கமம்.

எந்த நோக்கத்தில் சேர்கிறார்கள்?

மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கக் கூடிய பா...வில் கொலைகாரர்களும்ரவுடிகளும் சேர்வது எந்த நோக்கத்தில் என்பது எளிதாகப் புரிந்துகொள்ளத் தக்கதே!

தார்மீகம் பேசும் பா...வின் தரம் எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு இவையெல்லாம் மிகமிக முக்கியமான எடுத்துக்காட்டுகளேயாகும்.

பாபர் மசூதி இடிப்பும் - விளைவும்

ஒரு பட்டப் பகலில் 450 ஆண்டுகால வரலாறு படைத்த - சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலமான அயோத்தியில் பாபர் மசூதியை மேல்மட்டத் தலை வர்கள் முன்னிலையில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடி அடித்து நொறுக்கியதும்அதில் ஒரு குற்றவாளிகூட தண்டிக்கப்படாதது மட்டுமல்லஅவர்கள் எல்லாம் மத்திய அமைச்சர்களாக அலங்கரிக்கிறார்கள் என்றால்நாட்டில் பயங்கரவாதமும்வன்முறையும் கண்மண் தெரியாமல் தாண்டவமாடித்தானே தீரும்!

பொதுமக்கள் தீர்ப்பு வழங்கவேண்டும்

கொலைகாரர்களையும்ரவுடிகளையும்வன்முறை யாளர்களையும் கட்சியில் சேர்த்துக் கொள்ளும் கட்சியின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் நிலை என்னநினைக்கவே பதறும் நிலைதான்!

எல்லா வகைகளிலும் பா..ஆட்சியில் நீடிப்பது நாட்டுக்கான பெருந்தீங்காகும் - பொதுமக்கள் தங்கள் தீர்ப்பை வழங்கத் தயாராக இருக்கவேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!


கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

22.1.2021