தொ. பரமசிவன் பேட்டி

நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளின் வழி திராவிட மரபின் உன்னதங்களைப் புதிய தலைக்குக் கடத்திய ஆய்வாளர் தொ.பரமசிவன், அடுத்தடுத்த அறுவைச் சிகிச்சைகளுக்குப் பின் ஒரு அறைக்குள் முடங்கிவிட்டார். தன் பேச்சுகளாலும் எழுத்துகளாலும் ஒரு மாணவப் படை யையே உருவாக்கிய பேராசிரியரின் பேச்சு, எழுத்து எல்லாம் கிட்டத்தட்ட முடங்கி விட்டன. ஆனால், திராவிட அரசியல் என்று சொன்ன மாத்திரத்தில் தன் ஆற்றல் அத்தனையையும் பெருக்கிக்கொண்டு எழுந்தார்.

இன்றிலிருந்து பார்க்கும்போது திராவிட எதிர்காலம் எப்படித் தெரிகிறது?

எனக்கு வயது 15. காரைக்குடிக்கு பெரியார் வந்திருந்தார். போய்ப் பார்த்தேன். அன்று அவர் பேசியதெல்லாம் இன்று காலை பேசியதைப் போலத் தான் இருக் கிறது. ஏன் கர்நாடகத்தில் இந்தியை எதிர்த்து இன்றைக்குப் போராடுகிறார்கள்? அதே பிரச்சினைகள் தொடர்வதால் தானே? திராவிடக் கருத்தியல் உயிர்த் துடிப்போடு இருப்பதால் தானே? இந்துத் துவ வெறியர்கள் மாட்டுக்கறிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று வன்முறையில் ஈடுபடும்போது, திராவிட நாட்டைப் பற்றிக் கேரளம் பேசுகிறது? தனிப்பட்ட சுக துக்கங்கள், பதவி, அதிகாரங்களை எல்லாம் தூக்கியெறிந்து விட்டு, இந்தச் சமூகத் திற்காக ஓடி உழைத்துத் தன் முழுச் சொத் துக்களையும் பொதுவாக்கிவிட்டுப் போன தலைவர் பெரியார்! அந்தத் தியாகம் எல்லாம் வீண் போகாது. ‘தென்னை வச்ச வன் தின்னுட்டு சாவான்; ‘பனையை வச்ச வன் பார்த்துட்டு சாவான்’ என்று ஒரு பழமொழி உண்டு. “திராவிடம் பனை மரம். நின்று பயன் தரும்“.

திராவிடக் கட்சிகள் பலவீனமடைந்து வருகின்றன. வலுவான தலைவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லையே?

உலகமே மூக்கில் கை வைக்கும்படி பத்து இலட்சம் மக்கள் பங்கேற்ற ஜல்லிக் கட்டுக்கான போராட்டத்தை எந்த இயக்கம், தலைவர்கள் நடத்தினர்? திராவிட அரசி யல் என்பது இந்த மக்களின் அரசியல். இரு திராவிடக் கட்சிகளும் ஒன்றும் இல்லா மல் போகட்டுமே? அதனால் திராவிட அரசியல் அழிந்து விடுமா? அதிலிருந்து புதுப்புது இயங்கங்களும் தலைவர்களும் ஊற்றெடுப் பார்கள்.

- “தெற்கிலிருந்து ஒரு சூரியன்” நூலிலிருந்து...