சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பயிற்சி முகாமில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
சென்னை, ஜன. 16 சாமி நான் உங்கள் பக்கத்தில் உட்கார முடியாது'' என்று அவனே சொல்லும் அளவிற்கு, அவனுடைய மூளைக்கு விலங்கு போட்டு விட்டார்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘ஹிந்துத்துவாவும், மதவெறி அபாயமும்!''
10.1.2021 அன்று சென்னை பெரியார் திடலில், சென்னை மண்டல கழகத்தின் சார்பில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் ‘‘ஹிந்துத்துவாவும், மதவெறி அபாய மும்!'' என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலி வாயிலாக உரையாற்றினார். அவரது உரை வருமாறு:
பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய சென்னை மண் டலத்தின் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்ட றையை சிறப்போடு ஏற்பாடு செய்துள்ள மண்டல தலை வர் மானமிகு முதுபெரும் பெரியார் தொண்டர் அய்யா தி.இரா.இரத்தினசாமி அவர்களே, மண்டல செயலாளர் செயல்வீரர் தே.செ.கோபால் அவர்களே,
இந்நிகழ்விற்குத் தலைமையேற்று இருக்கக்கூடிய மாநில அமைப்புச் செயலாளர் அருமை நண்பர் வி.பன்னீர் செல்வம் அவர்களே, முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய துணைப் பொதுச்செயலாளர் தோழர் ச.இன்பக்கனி அவர் களே, பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்த பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களே, இந்நிகழ்வில் கலந்துகொண்டு ‘‘பெரியார் ஓர் அறிமுகம்'' என்ற தலைப் பில் உரையாற்றியுள்ள, இறுதியில் சான்றிதழ்கள் வழங்க வுள்ள கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களே,
‘‘நீதிக்கட்சி- சுயமரியாதை இயக்கம் ‘‘திராவிடர் கழகம்'' என்ற தலைப்பில் உரையாற்றவுள்ள பேராசிரியர் தோழர் ந.க.மங்களமுருகேசன் அவர்களே,
‘‘கடவுள் மறுப்புத் தத்துவம்'' என்ற தலைப்பில் உரை யாற்றவுள்ள முதுபெரும் பெரியார் தொண்டரும், கழகத் தின் செயலவைத் தலைவருமான மானமிகு சு.அறிவுக்கரசு அவர்களே,
‘‘அறிவியலும் மூடநம்பிக்கையும்'' என்ற தலைப்பில் உரையாற்றவுள்ள தோழர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களே,
‘‘ஜாதி ஒழிப்பும், திராவிட இயக்கமும்'' என்ற தலைப்பில் உரையாற்றவுள்ள பிரபல வழக்குரைஞரும், வடசென்னை மாவட்டத் கழகத் தலைவருமான தோழர் சு.குமாரதேவன் அவர்களே
‘‘சமூகநீதி போராட்ட வரலாறும் தத்துவமும்'' என்ற தலைப்பில் உரையாற்றவுள்ள கழக வெளியுறவுச் செயலாளர் தோழர் கோ.கருணாநிதி அவர்களே,
‘‘மத்திய அரசின் பாசிச சட்டங்கள்'' என்ற தலைப்பில் உரையாற்றவுள்ள கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்களே,
தோழர்களுக்கு இயக்கத்தின் சார்பில் வாழ்த்துகள்!
இப்பயிற்சி முகாமில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற அருமை மாணவச் செல்வங்களாக இருக்கக்கூடிய தோழர் கள் 48 பேர் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்; அதுபோல, மகளிர் தோழர்கள் 28 பேர்; சிறுவர்களாக இருக்கக்கூடிய அன்புத் தோழர்கள் 20 பேர்; கழகத் தோழர்கள் 35 பேர் ஆக மொத்தம் 131 பேர் பங்கேற்கக்கூடிய இந்த அருமை யான பயிற்சி வகுப்பு காலையில் தொடங்கி, சிறப்பாக நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்து, பங்கேற்று உரையாற்ற, கலந்துகொள்கின்ற அத்துணை தோழர்களுக்கும் இயக்கத் தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புத்தாண்டு, திராவிடர் திருநாளான தமிழர் திருநாள் வாழ்த்துகளையும் முதற்கண் உங்கள் தொண்டன், தோழன் என்ற முறையில் உங்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சியடை கிறேன். நேரிலே கலந்துகொள்ளாவிட்டாலும், காணொலி மூலம் உங்களைச் சந்திப்பதில் ஒரு புத்துணர்ச்சியை நீங்கள் பெறுவதைப்போலவே, நானும் பெறுகிறேன்.
எனக்கு அளிக்கப்பட்டு இருக்கிற தலைப்பு ‘‘ஹிந்துத் துவாவும், மதவெறி அபாயமும்'' என்பதாகும்.
20 நிமிடங்களிலிருந்து 30 நிமிடங்களுக்குள்ளாக என்னுரையை முடிக்கவேண்டும். ஏனென்றால், இது போன்ற பயிற்சி முகாம் குற்றாலத்தில் 5 நாள்கள் நடை பெறும். ஆனால், இன்று நடைபெறுவது ஒரு நாள் பயிற்சி வகுப்பாக சுருக்கி வைத்திருக்கிறார்கள். ஆனாலும், சுருங்கச் சொல்லி விளங்க வைக்கவேண்டும் என்பதுதான் இதனுடைய பொருள்.
இப்பயிற்சி முகாமில் கலந்துகொள்கின்ற நம்முடைய தோழர்கள் அத்துணை பேரும் மனதில் நன்றாக உள்வாங் கக் கூடிய ஆற்றல் படைத்தவர்கள். எனவே, உங்களிடம் லேசாக சொன்னால்கூட, அதை நீங்கள் நன்றாகப் புரிந்து கொண்டு பயன்படுத்துவீர்கள் என்பது நமது நம்பிக்கையாகும்.
அமெரிக்காவே இன்றைக்குத்
திணறிக் கொண்டிருக்கின்றது
"ஹிந்துத்துவா" என்பதுதான் இப்போது இந்த நாட்டை யும், உலகத்தையும் மிரட்டிக் கொண்டிருக்கிறது. உலகத் தையும் என்று சொல்கின்றபொழுது ஜனநாயகத்தில் மிகச் சிறப்பான நாடு என்கிற அமெரிக்காவே இன்றைக்குத் திண றிக் கொண்டிருக்கின்றது. அதற்குக் காரணம், வலதுசாரி தத்துவமும், காலித்தனமும், வன்முறையும் அண்மையில் அந்த நாட்டையே தலைகுனிய வைத்திருக்கிறது.
அதேபோலத்தான், மிகப்பெரிய அளவிற்கு வலதுசாரி தத்துவத்தைக் கொண்டதுதான் ஹிந்துத்துவா என்பது.
ஹிந்துத்துவா என்று எழுதும்பொழுதுகூட, உங்களுக்கு ஒரு வேண்டுகோள் - தயவு செய்து நீங்கள் ‘ஹிந்துத்துவா' என்றே எழுதுங்கள்; இந்துத்துவா என்று எழுதாதீர்கள். ‘ஹி' என்ற எழுத்தையே போடுங்கள்; தமிழில் ‘இ' என்று போடாதீர்கள். ஏனென்றால், ஹிந்துத்துவா என்ற வார்த்தை நம்முடையதல்ல. இந்துத்துவா என்று எழுதினால், ஏதோ நமக்கு சொந்தம் போன்று, நம்மை நெருங்கி வருவதுபோன்று இருக்கும்.
‘திராவிடம்' என்ற தத்துவத்திற்குநேரிடை எதிரான ஒரு தத்துவம் ‘ஹிந்துத்துவா' தத்துவமாகும்.
இதைப்பற்றி 20 நிமிடம் அல்லது 30 நிமிடங்களில் சொல்வது என்றால், உங்களையெல்லாம் ஒரு விமானத்தில் ஏற்றி, சென்னையைச் சுற்றிக் காண்பிப்பதுபோன்றதாகும்.
இதுதான் மெரீனா கடற்கரை; இதுதான் கலங்கரை விளக்கம்; இதுதான் தலைமைச் செயலகம்; இதுதான் அண்ணா சாலை; இதுதான் பெரியார் திடல்; இதுதான் பெரியார் நெடுஞ்சாலை; இதுதான் அண்ணா அறிவாலயம்; இதுதான் நினைவிடங்கள்; இதுதான் விமான நிலையம் என்று காட்டுவதைப்போல, வேக வேகமாகக் காட்டிவிட்டு, உங்களை இறக்கிவிடுகின்ற சூழல்தான் இந்த 20, 30 நிமிடங்களில் ஏற்படும். என்றாலும், சில நேரங்களில் அதுவும் தேவைப்படுகிறது, காலச் சூழ்நிலையைக் கருதி.
அந்த குறுகிய நேரத்தில், நான் சொல்கின்ற கருத்து களை நீங்கள் உள்வாங்கி, கேட்டும், குறித்தும், உள்ளத்தில் பதிவு செய்யக்கூடிய உங்களுக்கு, சில புத்தகங்களை நான் முதலில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன்.
"ஹிந்துத்துவா" என்ற தலைப்பில் முன்பு மூன்று சொற் பொழிவுகளை காணொலிமூலம் உரையாற்றிய கருத்துகள் விரைவில் நூலாக வெளிவரவிருக்கிறது. அந்த நூல் இன்னும் மிகத் தெளிவாக, ஆதாரப்பூர்வமாக பல்வேறு செய்திகளை, விரிவாக உங்களுக்கு விளங்கக்கூடிய வாய்ப் பைத் தரும்.
ஹிந்துத்துவா என்ற சொல்லை
முதன்முதலாகப் பயன்படுத்தியது...
ஹிந்துத்துவா என்ற சொல்லை முதன்முதலாகப் பயன் படுத்தியது வி.டி.சவார்க்கார் ஆவார்.
காந்தியார் கொலை வழக்கில் ஈடுபட்டு, சரியான சாட்சி யம் இல்லை என்பதற்காக விடுவிக்கப்பட்ட, பலமுறை மன்னிப்பு கேட்டுக்கொண்ட மிகப்"பெரிய தேசபக்தர் வீரசவார்க்கர்" என்று சொல்லப்படுகின்ற விநாயக் தாமோ தர் சவார்க்கர் என்ற மகாராஷ்டிரிய சித்பவன் பார்ப்பனர்.
அவர்தான் ஹிந்துத்துவா என்ற சொல்லை உருவாக் கியது. ஹிந்து மதம் என்பது வேறு; ஹிந்துத்துவா என்பது வேறு என்று ஒரு ஏமாற்று யுக்தியை சொல்வார்கள். துவா என்றால், கொள்கை; ஹிந்து கொள்கை என்பதுதான் அதனுடைய அர்த்தம்.
பசுத்தோல் போர்த்திய ஓநாய்
ஹிந்து கொள்கையை தேசியமயமாக்கவேண்டும் ; அதனை ஆட்சிக்குக் கொண்டு வரவேண்டும் என்று அவர்கள் நினைத்து, திட்டமிட்டு, பல்வேறு அவதாரங் களை எடுத்து, பல வகையான ஒப்பனைகளை செய்து இன்றைக்கு எப்படியோ ஆட்சியைப் பிடித்துவிட்டார்கள். தேர்தல் பிரச்சாரத்தில்
முதலில் வளர்ச்சி, வளர்ச்சி என்றார்கள் -
வேலை கொடுப்போம் என்றார்கள் -
பொருளாதாரத்தை உயர்த்துவோம் என்றார்கள் -
நம்மவர்கள் ஏமாந்தார்கள்.
நாங்கள் அப்பொழுதே சொன்னோம் - இது பசுத்தோல் போர்த்திய ஓநாய் என்று சொன்னோம். ஆனால், அவர்களுக்கு அடையாளம் தெரியவில்லை.
சவால் விட்டவர்கள், வரலாற்றில் உலகத்தில் குப்பைத் தொட்டிக்குள் போய்க் கொண்டிருக்கிறார்கள்
ஆனால், பசுத்தோல் கொஞ்சம் கொஞ்சமாக இப் பொழுது கிழிந்துவிட்டது - நகர்ந்து கொண்டு இருக்கிறது. இரண்டாவது முறையாக அவர்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன், அந்தத் தோலையே அவர்கள் கழற்றி வைத்து விட்டு, ‘‘நாங்கள் இப்படித்தான் செய்வோம்; உங்களால் முடிந்ததைப் பார்த்துக் கொள்ளுங்கள்'' என்று சவால் விடக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள். மக்கள் அதிர்ந் திருக்கிறார்கள்.
ஆனால், ஏற்கெனவே சவால் விட்டவர்கள், இறுதியில் வரலாற்றில் குப்பைத் தொட்டிக்குள் போய்க் கொண்டிருக் கிறார்கள் என்பது இன்றைக்கு நடந்துகொண்டிருக்கின்ற காட்சி - அதைப்பற்றி பின்னால் பேசுவோம்.
எனவே, ஹிந்துத்துவா என்று சொல்லக்கூடிய, ஹிந்து மதம் என்று சொல்லக்கூடியவை நம்முடைய கொள் கைக்குநேர் எதிரான தத்துவமாகும்.
திராவிடம் என்பதற்குநேர் எதிரான தத்துவம் ஆரியம்.
ஆரியத்திற்கு மறுபெயர்தான் - அரசியல் பெயர்தான் - ஹிந்துத்துவா என்பது!
அந்த ‘ஆரியம்' என்பதற்கு அவர்கள் எப்படி பெயர் வைத்திருக்கிறார்கள் என்றால், ‘மேன்மை'யானதாம்.
பெயரிலேயே கேவலத்தை உண்டாக்கி வைத்துவிட்டார்கள்
நம்மவர்களை எல்லாம் கீழாக்கி வைத்திருக்கிறார்கள். ‘சூத்திரன்' என்றால், அவன் அடிமை; ‘பஞ்சமன்' என் றால், அவன் மிகக் கீழ்ஜாதிக்காரன். உழைக்கின்றவர்கள், பாடுபடுகிறவர்கள் தொடக்கூடாதவர்கள்; எட்டி நிற்க வேண்டியவர்கள்; படிக்கக் கூடாதவர்கள்; சண்டாளர்கள்; தஸ்யூக்கள், தீயர்கள்; மிலேச்சர்கள்; இழிவானவர்கள்; கறுப்பர்கள் என்றெல்லாம் ஒதுக்கி, ஒதுக்கி பெயரிலேயே கேவலத்தை உண்டாக்கி வைத்துவிட்டார்கள்.
மனதில் ஒருவனுக்கு உயர்ந்தவன், உயர்ந்தவன் என்று நினைப்பையும், இன்னொருவனுக்கு, தாழ்ந்தவன், தாழ்ந்த வன் என்று சொல்லியே அவனுக்கு அந்த உணர்வை உண்டுபண்ணி வைத்திருக்கிறார்கள். அவனே, ‘‘சாமி நான் உங்கள் பக்கத்தில் உட்கார முடியாது'' என்று அவனே சொல்லும் அளவிற்கு, அவனுடைய மூளைக்கு விலங்கு போட்டு விட்டார்கள்.
வி.டி.சவார்க்கார் ஹிந்துத்துவா தத்துவத்தை உருவாக்கியவர் அல்ல!
ஒப்பற்ற திராவிடர்களின் மூளைக்கு விலங்கு போட்ட ஒரு தத்துவம்தான் ஆரியம்.
திராவிடம் முந்தையது;
திராவிடம் நாகரிகமானது
திராவிடம் பண்புள்ளது
சிந்துவெளி நாகரிகம், இப்பொழுது கீழடி நாகரிகத்தை யெல்லாம் மறைப்பதற்குக்கூட காரணம் அதுதான்.
ஹிந்துத்துவா என்ற பெயரை உருவாக்கியவர்தான் வி.டி.சவார்க்காரே தவிர, ஹிந்துத்துவா தத்துவத்தை முதன் முதலில் உருவாக்கியவர் அல்ல. புரிந்து கொள்ளுங்கள்.
ஹிந்துத்துவா தத்துவத்தை எப்பொழுது பார்ப்பனர்கள் ஆரம்பிக்கிறார்கள் தெரியுமா? வெள்ளைக்காரர்கள் வந்த 19 ஆம் நூற்றாண்டில் இருந்து பார்த்தீர்களேயானால், அந்த ஆண்டிலிருந்துதான் ஹிந்துத்துவா என்ற பெயரைக் கொடுக்கிறார்கள் பார்ப்பனர்கள்.
ராஜாராம் மோகன்ராய் ‘‘பிரம்ம சமாஜ்'' என்ற அமைப்பைத் தொடங்கினார். அவர் ஒரு பார்ப்பனர். பெரிய சீர்திருத்தக்காரர், விதவைகள் - உடன்கட்டை ஏறு வதை ஒழித்தார் என்பது மட்டுமல்ல, மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர்; சமஸ்கிருதத்தை ஏற்காதவர் அவர்.
இடத்திற்குத் தகுந்தவாறு பேசியவர் விவேகானந்தர்
ஆனால், அதற்கடுத்து வந்த தயானந்த சரசுவதி என்பவர். ‘ஆரிய சமாஜ்' என்பதில், ஆரியரை உயர்த்திக் காட்டவேண்டும் என்பதற்காகவும், ஆரிய கலாச்சாரம்தான் உயர்ந்தது; ஆரிய மொழிதான் உயர்ந்தது என்று சொன்னவர்தான் அவர். குஜராத்தில் வாழ்ந்து மறைந்த ஒரு பார்ப்பனர் அவர். அவர் உண்மையான பெயர் தயானந்த சரசுவதி அல்ல. மூல சங்கர் திவாரி என்பதாகும்.
அதற்கடுத்து இதனை உலகளாவிய அளவிற்கு ‘மார்க் கெட்டிங்' செய்து, அந்தந்த இடத்திற்குத் தகுந்தவாறு பேசி யவர் யார் என்றால், ‘விவேகானந்தர்' என்ற நரேந்திரர்.
அதற்கடுத்து, வங்காளத்தில் படித்துவிட்டு, வெள்ளைக் காரர்களை எதிர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டு, பாண்டிச்சேரியில் ஆசிரமத்தைத் தொடங்கிய அரவிந்த கோஷ் என்கிற அரவிந்தர். இவரும் பார்ப்பனர்தான். விவேகானந்தர் மட்டும் பார்ப்பனர் அல்ல- உயர்ஜாதிக் காரர். இவர் (காயஸ்தா) பார்ப்பனர்களால் பாதிக்கப்பட்ட பொழுது மட்டும், பார்ப்பனர்களைப்பற்றி கண்டித்துப் பேசியிருக்கிறார்.
இவர்களுக்கெல்லாம் என்ன தேவை? வெள்ளைக் காரர்கள் மத்தியில் தாங்கள் மிகவும் உயர்ந்தவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக, வேத நாடு என்று சொன்னார்கள்; லேண்ட் ஆஃப் வேதாஸ் (Land of Vedas) .
ஆரிய வேதம் முக்கியம் என்று சொல்லி, அதை மொழி பெயர்த்தார்கள்; வேதம் என்றால் முன்பு, வாயால்தான் சொல்ல முடியுமே தவிர, அதனை அச்சிட முடியாது. வெள்ளைக்காரன் கண்டுபிடித்த அச்சு இயந்திரத்தில்தான் அது முதன்முதலாக அச்சாகி வந்தது!
அதற்கு முன்பு, பத்து அவதாரக் கதைகளைச் சொல் லும்பொழுது, அசுரன் வேதங்களைத் திருடிக் கொண்டு கடலுக்குள் புகுந்துவிட்டான்; அதனை மீட்பதற்காகத்தான் மகாவிஷ்ணு பத்து அவதாரம் எடுத்ததில், ஒரு அவதாரம் கூர்ம அவதாரம்; மச்ச அவதாரம் போன்ற 10 அவதாரங் களை எடுத்தார் என்று புராணம் எழுதினர்.
பெரியார் கேட்ட கேள்வி!
பெரியார் கேட்டார், ‘‘வேதம் என்பது வாயால் சொல்வதுதானே - அதனைத் திருட முடியுமா? திருடிக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைக்க முடியுமா? அது என்ன புத்தகமா? அல்லது பொருளா?'' என்று கேட்டார், அந்தக் கேள்விக்கு இதுவரையில் பதில் கிடையாது.
அதே கருத்தை, ஆரியர்கள் தரையின் மூலமாகவும், விமானம் மூலமாகவும், கடல் மூலமாகவும் வந்து திணித்து ஆக்கிரமித்தார்கள் என்பதைத்தான், அந்த வேதங்கள் என்பதை, 18 ஆம் நூற்றாண்டிலேயே மிகப்பெரிய அள விற்கு இந்தப் போராட்டத்தைத் தொடங்கிய, மகாராட்டி ராவில் இருந்த ஜோதிபாபூலே எடுத்துச் சொன்னார். அந்தத் தகவல்களையெல்லாம் புத்தகங்களில் நீங்கள் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.
மிக எளிதாக உங்களுக்குச் சொல்லவேண்டுமானால், திராவிடம் நம்முடைய பண்பாடு. சில பேர் சொல்வார்கள், தமிழா? திராவிடமா? என்பார்கள். அதற்கான பதிலை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அருமையாக சொன்னார்.
திராவிடம் என்பதும், தமிழ் என்பதும் வேறொன்று மில்லை. மொழி என்பதைவிட, தத்துவம் என்பது மிக முக்கியமானதாகும்.
திராவிடம் என்பது ஒரு தத்துவம்.
இப்போது ஹிந்துத்துவா என்று சொல்லக்கூடியது அதற்கு நேர் எதிரான தத்துவம்.
திராவிடம் என்பது,
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
ஆரியம் என்பது
பிறவியினால் பேதம்
மனிதர்கள் சமமில்லை
ஒருவன் உயர்ந்த ஜாதி - இன்னொருவன் தாழ்ந்த ஜாதி. இதை யார் உருவாக்கியது என்றால், மனிதன் உரு வாக்கினான் என்றால், அதனை மாற்றிக் கொள்ளலாம். கடவுள் உருவாக்கினார் என்று கெட்டிக்காரத்தனமாக சொன்னார்கள். பிரம்மாவின் முகத்தில், தோளில், காலில், தொடையில் பிறந்தான் என்று.
பகவத் கீதையில் கண்ணன் சொன்னான் என்பார்கள்!
இன்னொன்று, கடவுள்களுக்குள் போட்டி - மகாவிஷ்ணு மும்மூர்த்திகளில் கிருஷ்ணன் அவதாரம் எடுத்தார்; அவர் எப்படி உண்டாக்கினார் என்றால்,
‘‘சதுர்வர்ணம் மயாசிருஷ்டம்''
நான்கு ஜாதிகளை நானே உண்டாக்கினேன். ஆனால், நானே நினைத்தால்கூட அதனை மாற்ற முடியாது என்று பகவத் கீதையில் கண்ணன் சொன்னான் என்பார்கள்.
இந்த நாட்டில் உள்ள ஒருவன், மதம் மாற முடியும்; கட்சி மாற முடியும்; ஆனால், ஜாதியை மாற்ற முடியாது.
இன்னமும் சட்டத்தில், உச்ச, உயர்நீதிமன்றங்களில் ஆணி அடிக்கப்பட்டு இருக்கின்ற ஒரு செய்தி இது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
எனவே, நம்முடைய திராவிடம் என்று சொல்லக்கூடிய, தமிழர் பண்பாடு, திராவிடப் பண்பாடு என்று சொல்லக் கூடிய, நம்முடைய இனத்தினுடைய பண்பாடு, நாகரிகம் - செம்மொழியினுடைய தத்துவத்தினுடைய அடிப்படை என்னவென்றால், சமத்துவம்.
‘யாதும் ஊரே' என்பது மட்டுமல்ல - உலகமே ஒரு குலம் - மனித நேயம் - மனிதப் பார்வை என்பதுதான் நமக்கு மிக முக்கியம்.
அவர்களுக்கு அப்படியில்லை,
உயர்ந்தவன் - தாழ்ந்தவன்
தொடக்கூடியவன் - தொடக்கூடாதவன்
படித்தவன் - படிக்கக் கூடாதவன் என்ற பிரிவினை தான் ஹிந்துத்துவா ஆகும்.
வேதத்தை நிலைநாட்டுவது ஹிந்துத்துவா -
பேதமற்ற பெருவாழ்வு வாழ்வது என்பது திராவிடம்.
- தொடரும்
சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பயிற்சி முகாமில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
சென்னை, ஜன. 17 ஹிந்துத்துவாவில் வேதங்கள் முக்கியம்; திராவிடத்தில் திருக்குறள் முக்கியம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘ஹிந்துத்துவாவும், மதவெறி அபாயமும்!''
10.1.2021 அன்று சென்னை பெரியார் திடலில், சென்னை மண்டல கழகத்தின் சார்பில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் ‘‘ஹிந்துத்துவாவும், மதவெறி அபாய மும்!'' என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலி வாயிலாக உரையாற்றினார். அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
பாதியில் நுழைந்தது ஜாதி
ஆதிகாலத்தில் ஜாதி கிடையாது; பாதியில் நுழைந்தது ஜாதி. பார்ப்பனர்கள் வருவதற்கு முன்பு ஜாதி கிடையாது.
தமிழ்நாட்டு சங்க இலக்கியங்களில்கூட, பிற்காலத்து சங்க இலக்கியம் திருவள்ளுவர் காலத்தில் ஜாதி உள்ளே நுழைகிறது. அப்பொழுது அவருடைய கருத்தால், அதனுடைய மண்டையில் ஓங்கி அடித்தார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
அவனவன் செய்கிற தொழில் வெவ்வேறு. இவன் இவன் இன்னின்ன தொழில்தான் செய்யவேண்டும் என்று கருத்து உள்ளே நுழைகின்றபொழுது, அதைத் தடுத்து நிறுத்தக் கூடியது - ஹிந்துத்துவா கருத்து என்று சொல்லக் கூடிய ஆரியக் கருத்து படையெடுத்து உள்ளே நுழைகின்ற பொழுது, அதற்கு மக்கள் தெரிந்தோ தெரியாமலோ ஏமாறக்கூடிய ஒரு காலகட்டம் வந்தபொழுது, அதற்கு அவர்கள் தலையிட முடியாத அளவிற்கு மூளைக்கு விலங்கு போடுகின்ற நேரத்தில், அந்த விலங்கை எச் சரித்தது குறள்.
ஹிந்துத்துவாவில் வேதங்கள் முக்கியம்; திராவிடத்தில் திருக்குறள் முக்கியம்
எனவேதான், ஹிந்துத்துவா வலியுறுத்துவது
மனுதர்மம், புராணங்கள், இராமாயணம், பாரதம், சாஸ் திரங்கள், ஸ்மிருதிகள் இவை அத்தனையும்!
அதேநேரத்தில் திராவிடத்தை வலியுறுத்துவது,
திருக்குறள்
ஹிந்துத்துவாவில் வேதங்கள் முக்கியம்; மனுவும், இராமாயணமும், பாரதமும், பகவத்கீதையும் முக்கியம்
திராவிடத்தில் திருக்குறள் முக்கியம்.
ஹிந்துத்துவாவில், நம்பு, யாரும் கேள்வி கேட்கக் கூடாது. கண்ணை மூடி நம்பவேண்டும்; கேள்வி கேட்டால், அவன் நாஸ்திகன், அவனை நரகத்தில் தள்ளவேண்டும்.
திராவிடம்,
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்ப தறிவு
கேள்வி கேள், நம்பாதே! இதற்கு முன் யார் இதைச் சொன்னது - வேதத்தை மறுத்து சொன்னவர் புத்தர்.
எனவே, புத்தமும், திராவிடத் தத்துவம்தான்.
திராவிடத்திற்கு எல்லைக்கோடு போடக்கூடாது; சிந்துவெளி நாகரிகத்திற்கு நாம் எங்கே போகிறோம் -அதற்குக் கீழேதானே வருகிறது.
ஆகவே, திராவிடத் தத்துவம் என்பது சமத்துவம் என்றால், பவுத்தம் என்பது திராவிடத் தத்துவம். புத்தம் என்றால், அறிவு.
புத்தியைப் பயன்படுத்துகின்றவன் புத்தன்
பெரியார் மிக எளிதாக சொன்னார், புத்தியைப் பயன் படுத்துகின்றவன் புத்தன் என்று.
புத்தியைப் பயன்படுத்தாதே என்று சொன்னது ஹிந் துத்துவா.
வேதங்கள், கண்ணை மூடிக்கொண்டு நம்பு. உனக்குப் புரிகிறதோ, புரியவில்லையோ, சடங்கு சம்பிரதாயத்தை நம்பவேண்டும்.
பெண்கள், அடிமைகள்;
பெண்கள் சமத்துவமானவர்கள் என்பது திராவிடம்.
மானமும், அறிவும் மனிதருக்கு அழகு என்பதுதான் திராவிடம்.
மானமும், அறிவும் மனிதனுக்கு அடையாளம். மனிதன் மற்றவர்களுக்காக இருப்பவன்.
அறிவுச் சுதந்திரத்தோடு நடந்து பார்
என்பது திராவிடம்
ஆனால், நீ மானத்தைப்பற்றி கவலைப்படாதே - அறிவுக்கும் வேலை கொடுக்காதே என்பது ஹிந்துத்துவா.
அறிவுச் சுதந்திரத்தோடு நடந்து பார் - இது திராவிடம்.
சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவம் இம்மூன்றும் திராவிடம்.
உனக்கு சுதந்திரம் கிடையாது -
வேதங்கள் என்ன சொல்லியிருக்கிறது -
சாஸ்திரங்கள் என்ன சொல்லியிருக்கிறது -
சம்பிரதாயங்கள் என்ன சொல்லியிருக்கிறது -
கடவுள் என்ன சொல்லியிருக்கிறார் -
அதைவிட முக்கியமானது பார்ப்பான் என்ன சொல்கிறான்? என்பதுதான் ஹிந்துத்துவா.
கடவுளுக்கும் மேலானவன் ‘பிராமணன்' என்பதுதான் ஹிந்துத்துவா!
‘பிராமணன்' தன்னை உயர்த்திக் கொள்வதற்காக, ஜாதியைப் பிரித்தது மட்டுமல்லாமல், ஹிந்துத்துவா தத்துவத்தில், மிக முக்கியமாக எந்த அளவிற்கு அவன் உயர்த்திக் காட்டியிருக்கிறான் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ராதீனம் துதெய்வதம்
தன்மந்த்ரம் பிரம்மணாதீனம்
தஸ்மத் பிரம்மணம் பிரபு ஜெயத்.
- ரிக் - 62 ஆவது பிரிவு 10ஆவது சுலோகம்
உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது
கடவுள் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவர்
மந்திரம் பிராமணனுக்குக் கட்டுப்பட்டது.
எனவே, கடவுளை வணங்குவது முக்கியமல்ல - பிராம ணனை வணங்கவேண்டும். கடவுளுக்கும் மேலானவன் பிராமணன் இதை நடைமுறைப்படுத்துவதுதான் ஹிந்துத்துவா.
இராமன் பிராமணனை வணங்கினான் என்றார்கள்.
ஏன் பிராமணச் சிறுவன் இறந்து போனதற்குக் காரணம் சூத்திரன், சம்பூகன் தவம் செய்ததினால்தான் -ஆகவே, அவன் தலையை வெட்டு - அதுதான் இராமராஜ்ஜியம் - அதுதான் ஹிந்துத்துவம்.
அது தவறு; சமத்துவம் என்று சொல்வதும், சகோதரத்துவம் என்று சொல்வதும், அறிவுக்குச் சுதந்திரம் கொடு என்று சொல்வதும்தான் திராவிடம்.
திராவிடம் என்பது ரத்தப் பரிசோதனை செய்து நாம் பார்ப்பதில்லை. இரு வேறு தத்துவங்கள் - இரு வேறு பண்பாடுகள். நேர் எதிரானவை - விழுமியர்கள், ஒழுக்கங்கள்.
கருப்பு - வெள்ளை வண்ணங்கள் எப்படி நேர் எதிரானதோ அதுபோன்றதுதான்.
வெண்ணையும் - சுண்ணாம்பும் எவ்வளவு வித்தியாசமானதோ அதுபோன்றதுதான்.
- தொடரும்
சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பயிற்சி முகாமில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
சென்னை, ஜன. 18 பல வருடங்களாக ஒரு கிரிமினல் லா போன்றே மனுநீதி சமூகத்தை தன் கட்டுக்குள் வைத்திருந்தது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘ஹிந்துத்துவாவும், மதவெறி அபாயமும்!''
10.1.2021 அன்று சென்னை பெரியார் திடலில், சென்னை மண்டல கழகத்தின் சார்பில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் ‘‘ஹிந்துத்துவாவும், மதவெறி அபாய மும்!'' என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலி வாயிலாக உரையாற்றினார். அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
ஆகவே, மிகத் தெளிவாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பண்பாட்டுப் படையெடுத்து, நம் மூளைக்கு விலங்கு போட்டு, மேற்கண்ட அத்தனையையும் செய்துவிட்டார்கள்.
எப்படி ஆரியர்கள் உள்ளே நுழைந்ததால்.
இதை யார் சொல்லுகிறார்கள் தெரியுமா?
நாம் சொல்லவில்லை. ஆதாரப்பூர்வமாக சொல்லியிருக்கிறார் ஒரு பார்ப்பனர்.
‘‘இந்து மதம் எங்கே போகிறது?'' என்ற தலைப்பில் எழுதிய நூலில், அக்னிஹோத்திரம் இராமானுஜ தத்தாச் சாரியார் எழுதியிருக்கிறார்.
அதில்,
உயர்ஜாதிப் பெண்களாக இருந்தாலும், பார்ப்பனப் பெண்களாக இருந்தாலும் அவர்கள் நமோ சூத்திரர்கள். அவர்களும் சூத்திரர்களுக்குக் கீழேதான்!
அம்பேத்கர் இதை மிக அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
முகத்தில் பிறந்தவன் பிராமணன்
தோளில் பிறந்தவன் சத்திரியன்
தொடையில் பிறந்தவன் வைசியன்
காலில் பிறந்தவன் சூத்திரன்
நான்கு ஜாதி வருணம்.
அவுட் கேஸ்ட் (Out Caste) - அவர்ணஸ்தர்கள் - வருணத்திற்கு அப்பாற்பட்டவர்கள் - இன்னும் கீழான வர்கள். அய்ந்தாம் ஜாதி பஞ்சமர்கள். இன்றைக்கு ஆதிதிராவிடர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் என்று சொல்லுகின்றோமே அவர்கள்.
சூத்திரர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றவர்கள்.
பஞ்சமர் என்றால், அய்ந்தாம் ஜாதி - இந்த அய்ந்து வருணத்திற்கும் கீழே என்பது - எல்லா ஜாதிப் பெண்களும் என்றார்கள்.
எல்லா ஜாதிப் பெண்களையும், அவன் ஜாதிப் பெண்களையும் சேர்த்துதான் சொன்னான் என்றால், ஆரியர்கள் வரும்பொழுது பெண்களோடு வரவில்லை. ஆண்கள் மட்டும்தான் வந்தார்கள்.
அக்னிஹோத்திரம்
இராமானுஜ தாத்தாச்சாரியார்
இதை யார் சொல்கிறார் என்றால், அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார்.
‘‘நதிக்கு கரையில்லாத காலமது. காடு, மலை, விலங் குகள் இவற்றையெல்லாம் தாண்ட ஆரிய பெண்களுக் குத் தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத் தார்கள். அது புறக்கணிக்கப்பட்டது.
‘வரும் பெண்கள் வரலாம். வராதவர்கள் இங்கேயே இருக்கலாம்.’
ஆப்கானிஸ்தானைவிட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்தபோது, கூட வந்த பெண்கள் கம்மி.வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இங்கு வந்த ஆண்களின் எண்ணிக்கையோடு, பெண்களின் எண் ணிக்கையை ஒப்பிட்டால் அது புறக்கணிக்கத்தக்கதுதான். ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந் தார்கள்.
ஆனால், மனு ஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்.
மனு வேதங்களை எல்லாராலும் படிக்க முடியாது. அஃதை விளங்கிக் கொள்ள அனைவருக்கும் அறிவு குறைவு.
அதனால் வேதம் வகுத்த கர்மாக்களை, கட்டளை களை விளக்கி, புரியும்படி சொல்கிறோம் என எளிமை என்ற பெயரில் செய்யப் பட்டதுதான் மனுதர்மம்.
பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை ‘மனு’ பிளவாக்கியது.
கூடவே, இவர்களைத் தாண்டி ‘சூத்திரர்கள்’ என்ற பிரிவினரை உருவாக்கி அவர்களை வெறும் வேலைக் காரர்களாகவே ஆக்கியது மனு.
பிராமணனுக்கு தவம், வேத அறிவு, ஞானம், விஞ்ஞானம் உள்பட 11 குணங்களை வகுத்த மனு - சூத் திரனைப்பற்றி இப்படி எழுதியது.“சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்மோ பதேசம் பண்ணாதே. சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை உதை” இப்படிப் போகிறது மனு.
வந்தேறிய இடத்தில் அனைவரும் சூத்திரர்கள் என்றும், அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என்றும் பிராமணர்கள் செய்த திட்டம் ‘நன்றாகவே’ வேலை செய்தது.
ஏற்கெனவே பிராமணர்களின் கட்டுப்பாட்டில் இருந்த க்ஷத்திரியர்களும், வைசியர்களும் சூத்திரர்களை வேலைக்காரர்களாக எடுபிடிகளாக வைத்திருப்பது என்ற பிராமணர்களின் கோட்பாட்டுக்கு குழைந்தனர்.
‘அடே,,, குழந்தாய் இந்தா பால். இதைக் குடித்து மகிழ்வாய் வாழு’ என்ற வேதத்தை மனு திரித்து, “இந்த பாலை இவன் குடிக்க வேண்டும், இவன் குடிக்கக் கூடாது. இவன் எச்சில் படாமல் குடிக்க வேண்டும். இவன் பால் கறக்கும் மாட்டை மேய்க்கவேண்டும்” என பிளவு செய்தது.
ஆரியர்கள் பெண்களை அழைத்து வரவில்லை என்று சொன்னேன் அல்லவா? இதற்குக் காரணம் என எடுத்துக்கொள்ள ஏதுவான மனு ஸ்லோகம் ஒன்றை பாருங்கள்.
“பால்யே பிதிர்வஸே விஷ்டேதுபாணிக்ரஹா யௌவ் வனேபுத்ரானாம் பர்த்தரீ ப்ரேதுநபஜேத் ஸ்த்ரீ ஸ்வ தந்த்ரதாம்”
“பெண்ணே, நீ குழந்தைப் பருவம் வரை அப்பன் சொன்னதை கேள். வளர்ந்து மணமானதும் கணவன் சொன்னதைக் கேள். உனக்கு குழந்தை பிறந்து தலையெடுத்ததும் உன் மகன் சொல்வதைக் கேட்க வேண்டும். உனக்கு இது தான் கதி. நீ சுதந்திரமாக வாழத் தகுதியவற்றவள், ஆண் சொல்படி கேள்.”
இப்படி ‘பெண்ணுரிமை’ பேசும் மனு இன்னொரு இடத்தில் சொல்கிறது.
“பெண்கள் அசுத்தமானவர்கள். உனக்கு விதிக்கப் பட்டுள்ள மந்த்ரோப தேச சம்ஸ்காரங்கள் அவளுக்கு கிடையாது. அவளை மதிக்காதே.” பிராமண ஆணுக்கு சொல்லுவதாய் வந்த கருத்து இது.
மனுவின் இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு ‘பூம் பூம்’ மாடுகள்போல தலையாட்டினார்கள் மற்ற வர்ணத்த வர்கள்.
வைதீக கட்டுப்பாடுகள் சர்வாதிகாரமாக விதிக்கப் பட்டன. “கடவுள் இப்படித்தான் செய்யச் சொல்லியிருக்கிறான். இதுபடி கேள். இல்லையேல் நீ பாபியா வாய்” என மந்த்ரங்களால் மிரட்டப்பட்டனர் மக்கள்.
பல நூறு வருடங்கள். ஒரு கிரிமினல் லா போன்றே மனுநீதி சமூக கட்டமைப்பை தன் கட்டுக்குள் வைத்திருந்தது. வைதீக கர்மாக்களை பிறருக்கு எடுத்துச் சொல்லி நீதி பரிபாலனம் செய்ய வேண்டிய பிராமணன், க்ஷத்ரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் எல்லோரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.
இப்படிப்பட்ட ஒரு ‘சாஸ்திர ஏகாதிபத்ய’ சூழ்நிலையில்தான் இன்றைய நேபாளத்திலிருந்து ஒரு குரல் புறப்பட்டது.“கடவுள் பெயரை சொல்லியும், கர்மாக்கள் பெயரைச் சொல்லியும் சிந்தனை வளராத அப்பாவி களை ஏமாற்றிப் பிழைக்கிறீர்களே?
உங்களுக்கு இந்த உரிமையை யார் கொடுத்தது? கடவுளா? அவன் எங்கே இருக்கிறான்?
வேதத்தை சாதத்துக்கு (பிழைப்புக்கு) பயன்படுத்தா தீர்கள். பேதம் வளர்க்காதீர்கள். கொடுமைதான் உங்கள் கொள்கை என்றால் வேதம் வேண்டாம். மனு வேண்டாம். கடவுள் வேண்டாம். கர்மாக்கள் வேண்டாம். மனித தர்மம் மட்டும் தான் வேண்டும்” என அந்த சூழ்நிலையில் மிகமிக வித்தியாசமான குரல் தொனித்தது. அது புத்தர் குரல்.''
அவர்களுடைய தத்துவம் நம்முடையதல்ல; வெளிநாட்டிலிருந்து படையெடுத்து வந்த தத்துவம்
ஆகவே, அவர்களுடைய தத்துவம் நம்முடைய தல்ல; வெளிநாட்டிலிருந்து படையெடுத்து வந்த ஒரு தத்துவம். இன்றைக்கு நம்மை ஆண்டு கொண்டிருக் கின்றது; நம்மை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது; நம்மை அழிக்கவேண்டும் என்று துடிக்கிறது.
இதுதான் மிக முக்கியமான ஒரு அடிப்படையான கலாச்சாரப் படையெடுப்பு - மிக முக்கியமான பண் பாட்டுப் படையெடுப்பு.
தந்தை பெரியாரைப் போன்று தெளிவாக சொன்ன தலைவர் வேறு யாரும் கிடையாது.
அவர் சொன்னார்,
வெள்ளைக்காரன் வந்தான், ஆட்சியைப் பிடித்தான் என்பது அரசியல் அடிமைத்தனம் - அது கைகளில் போடப்பட்ட விலங்கு - அது பளிச்சென்று தெரியும்.
பொருளாதார அடிப்படை என்பது கால்களில் போட்ட விலங்கு. ஏழை - பணக்காரன்; ஆண்டான் - அடிமை;வர்க்கம் என்பது கால்களில் போடப்பட்ட விலங்கு, அதனை உடைத்துவிடலாம்.
ஆனால், பண்பாட்டு படையெடுப்பு என்பது இருக்கிறதே, அது மூளையில் போடப்பட்ட விலங்கு. அந்த மூளையில் போட்ட விலங்கு மிக ஆழமானதுதான் - அதற்கு அஸ்திவாரமான தத்துவம்தான் ஹிந்துத்துவா. பேதம் - அதனைச் சொல்லிக் கொடுப்பது வேதம்.
பெண்கள் அடிமைகள் அவர்களுக்கு.
ஆனால், பெண் வாழ்க்கைத் துணைநலம் நமக்கு. பெண்களை வித்தியாசமாகப் பார்ப்பதில்லை நாம்.
கருநாடகாவில் அரசு பணம் பார்ப்பனர்களுக்கு இறைக்கப்படுகிறது!
பி.ஜே.பி. ஆட்சி நடைபெறும் கருநாடகாவில் எவ்வளவு தைரியமாக செய்கிறார்கள் பார்ப்பனர்கள். அவர்களுக்கு அரசு பணம் கொடுக்கிறோம் என்கிறதே, மக்களின் வரிப் பணத்தை எடுத்து - இதனைத் தட்டிக் கேட்காமல் நம்ம ஆட்கள் அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்களே, அதை நினைத்தால் நமக்கு ரத்தம் கொதிக்கிறதே!
ஹிந்துத்துவா என்கிற "ஆக்டோபஸ்" (எட்டுக்கால் பிராணி) தன்னுடைய கால்களை கொடூரமாக விரித்துப் பிடித்துக் கொண்டிருக்கின்றது.
அதேபோன்று சூத்திரர்களுக்கு எதைக் கொடுத் தாலும், படிப்பைக் கொடுக்காதே - அறிவைக் கொடுக் காதே என்று சூத்திரர்களுக்குக் கல்வியை மறுத்தார்கள்.
அதற்கு நேர் எதிரான திராவிடம் என்ன சொல்கிறது - அனைவருக்கும் அனைத்தும். எல்லோரும் சமம் என்பது மட்டுமல்ல - எல்லோருக்கும் சம வாய்ப்பு. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று சொல்வது திராவிடம்.
சட்டத்திற்கு முன் எல்லோரும் சமம் அல்ல என்று சொல்வது ஆரியம்.
எப்படி?
இங்கே திருக்குறள் -
அங்கே மனுதர்மம்.
ஜாதியை மாற்ற முடியுமா என்றால், முடியாது!
ஒரு ஜாதிக்கு ஒரு நீதி; ஜாதியை மாற்ற முடியுமா என்றால், முடியாது. நீ என்னதான் முயற்சி செய்தாலும் மாற்ற முடியாது.
அதுமட்டுமல்ல, இன்றைக்கு டில்லியில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
‘உழுவோர் உலகத் தேருக்கு அச்சாணி' என்று நினைத்த தத்துவமும், பண்பாடும் திராவிடம்.
‘விவசாயம் பாவகரமான தொழில்; அதைச் செய்பவர்களை ஒதுக்கவேண்டும்' - மனுதர்மம்.
இன்றைக்கு விவசாயப் பிரச்சினையை ஏன் அலட்சியப்படுத்துகிறார்கள் என்றால், ஹிந்துத்துவாதான் காரணம்.
எந்தக் காரணம் கொண்டும், கலப்பை எடுத்து ஏர் உழக்கூடாது பார்ப்பனன். வடுவூரில் ஏர் உழுத பார்ப்பனர்களை அந்த ஜாதிக்காரர்கள் கண்டித்தார்கள்; காந்தியார் வரைக்கும் அந்தப் பிரச்சினை சென்றது; இதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால், தமிழ்நாட்டில் காந்தி என்ற புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்!
ஆக, இப்படி எல்லாக் கருத்துகளையும் பார்த்தீர்க ளேயானால், ஒவ்வொரு கருத்திலேயும், அறிவு, அறிவுச் சுதந்திரம் இவை அத்தனையிலும் வித்தியாசமாக இருக்கக்கூடியதுதான் ஹிந்துத்துவா.
சமூகநீதி ஏன் தேவைப்பட்டது?
ஏன் திராவிட இயக்கம் தேவைப்பட்டது?
நம்முடைய மக்கள் அடிமைப்பட்டு இருந்தபொழுது, ஒரு 112 ஆண்டுகளுக்கு முன்பு, நம்முடைய இயக்கம் திராவிடர் இயக்கம் பிறந்தது. திராவிடர் இயக்கம் என்று நேரிடையான பெயர் இல்லை. பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்றுதான் இருந்தது.
இப்பொழுது நாம் பாதிக்கப்பட்டுள்ள கரோனா தொற்று நோய்க்குத் தடுப்பு ஊசி கண்டுபிடிப்பது போன்று, அன்றைக்கு மிக அழகாக, மிக முக்கியமாக ஏற்படுத்தினார்கள். அதுதான் நீதிக்கட்சி, திராவிடர் இயக்கம்.
எங்களுக்கு நீதி தேவை? ஏனென்றால், சமூக அநீதி நடைபெறுகிறது. 100-க்கு மூன்று பேராக இருக்கின்ற பார்ப்பனர்கள் எல்லாவற்றையும் அனுபவிக்கிறார்கள், வெள்ளைக்காரர்களின் தயவினால்.
பார்ப்பனர்கள் என்ன சொன்னார்களோ, அதனை அப்படியே வெள்ளைக்காரர்கள் நம்பினார்கள்
கிழக்கிந்திய கம்பெனியில் இருந்து வந்த வெள்ளைக் காரர் ஆட்சிக்கு இங்கே வந்தவுடன், அவர்களின் நிர்வாக இயந்திரத்தை நடத்துவதற்கு ஆட்கள் தேவை. அதற்குப் படித்தவர்கள் தேவை. அன்றைக்கு யார் படித்திருந்தார்கள் என்றால், பார்ப்பனர்கள்தான். அவர்கள்தான் பதவிக்கும் போக முடிந்தது. நம்மாட்கள் மூட்டைதான் தூக்கமுடிந்தது. காரணம், நம்மாட்களுக்கு காலங்காலமாக படிப்பு மறுக்கப்பட்டதால்.
அந்த சூழ்நிலையால், வெள்ளைக்காரர்களும், பார்ப்பனர்களும் நெருக்கமாகி விட்டார்கள். நாங்கள் எல்லாம் தேவர்கள் - நாங்கள் எல்லாம் மேலே பிறந்த வர்கள் என்றார்கள். சமஸ்கிருதத்தை தேவ பாஷை என்றார்கள். பார்ப்பனர்கள் என்ன சொன்னார்களோ, அதனை அப்படியே வெள்ளைக்காரர்கள் நம்பினார்கள்.
18 ஆம் நூற்றாண்டிலேதான் ஜோதிபாபூலே போன்றவர்கள் இதனை எடுத்துச் சொல்கிறர்கள்.
ஆக நண்பர்களே,இது ஒரு பெரிய போராட்டமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. கல்வி வாய்ப்புகள், உத்தியோக வாய்ப்புகளை மூன்று பேராக மட்டுமே இருப்பவர்கள் நூற்றுக்கு நூறு சதவிகிதம் அனுபவிக் கிறார்கள்; 97 பேராக இருக்கின்றவர்கள் வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் வகுப்புவாரி உரிமை. சமூகநீதி இவை அத்தனையும் வந்தது. அதனை செய்வதற்காகப் பிறந்த ஆட்சிதான் நீதிக்கட்சி ஆட்சி.
சமூகநீதியை ஒழிப்பதற்காக, இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் காட்டி - அதிலிருந்த ஓட்டைகளைக் காட்டி - அம்பேத்கர் போன்றவர்கள் அதனை சிறப்பாக செய்தாலும்கூட, அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய ஆறு பேரில், நான்கு பேர் பார்ப்பனர்கள் என்பதால், உள்ளுக்குள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில்தான் இருந்தார்கள்.
- தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக