*அமைதி ஊர்வலம்             * கருத்தரங்கம்          *விருது வழங்கும் விழா

சென்னைடிச. 24- தந்தை பெரியார் அவர்களின் 47ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சிகள்  இன்று (24.12.2020) சென்னையில் எழுச்சியுடன் நடை பெற்றன.

இன்று காலை 8.45 மணிக்கு சென்னை அண்ணா சாலை பெரியார் பாலம் அருகில் தந்தை பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்தார்.  கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்பொருளாளர் வீ.குமரேசன்பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் .அருள்மொழிசட்டத்துறை தலைவர் வழக்குரைஞர் .வீரசேகரன்வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதிதுணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் .இன்பக்கனிஅமைப்புச்செயலாளர் வி.பன்னீர்செல்வம்மாணவர் கழக மாநில செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் மாநிலமண்டல பொறுப்பாளர்கள்,  தென்சென்னைவடசென்னைஆவடிதாம்பரம்கும்மிடிப்பூண்டிசோழிங்கநல்லூர்திருவொற்றியூர் கழக மாவட்டப் பொறுப்பாளர்கள்மகளிரணி,  மகளிர் பாசறைஇளைஞரணிமாணவர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அணி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் அண்ணாசாலை பெரியார் சிலை அருகிலிருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டுசிந்தாதரிப்பேட்டைபெரியார் .வெ.ராநெடுஞ்சாலை வழியே பெரியார் திடலை அடைந்தது

பெரியார் .வெ.ராநெடுஞ்சாலையில் அமைந் துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு கழக மகளிரணிமகளிர் பாசறை பொறுப்பாளர்கள் மாலை அணிவித்தனர்பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் 21 அடி முழு உருவச்சிலைக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் தலைமையில் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கப் பட்டதுதமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கூறஅவரைத் தொடர்ந்து கழகப்பொறுப்பாளர்கள் சூளுரை ஏற்றனர்.

அன்னை மணியம்மையார் நினைவிடம்சுயமரி யாதை சுட ரொளிகள் நினைவிடங்களில்  மலர் வளை யம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில்  தனி மனித இடைவெளிமுகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா பரவல் தடுப்புக்கான கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சிகள் நடை பெற்றன.  கரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளின் காரணமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஊர்வலத் தில் பங்கேற்காமல் அரங்க நிகழ்வில் பங்கேற்றார்கள்.

Ôசமூக நீதிக்கான கி.வீரமணி விருதுÕ

வழங்கும் விழா

காலை 10 மணி முதல் முற்பகல் 11 மணி வரை பெரியார் பன்னாட்டமைப்பு (அமெரிக்காசார்பில்  Ôசமூக நீதிக்கான கி.வீரமணி விருதுÕ வழங்கும் விழா காணொலியிலும்நேரிலும் நடைபெற்றது.

காணொலிமூலம் பன்னாட்டளவில் பலரும் பங்கேற்றனர்விழாவில் பெரியார் பன்னாட்டமைப்பு (அமெ ரிக்காதலைவர் டாக்டர் சோம.இளங்கோவன் காணொலிமூலம் வரவேற்புரை ஆற்றினார்.

பெரியார் பன்னாட்டு அமைப்பு (அமெரிக்காசார்பில்  2020ஆம் ஆண்டுக்கான Ôசமூகநீதிக்கான கி.வீரமணி விருதுÕ விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் டாக்டர் தொல்.திருமாவள வன் அவர்களுக்கு  வழங்கப்பட்டதுடாக்டர் இலக்கு வன்தமிழ் காணொலிமூலம் விருதினை வழங்கினார்மருத்துவர் மீனாம்பாள் விருதினை நேரில் வழங்கினார்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர்திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுச்சித்தமிழர் தொல்திருமா வளவன் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துரை ஆற்றினார்விருதினைப் பெற்றுக் கொண்டு எழுச்சித்தமிழர் டாக்டர் தொல்.திருமா வளவன் ஏற்புரை ஆற்றினார்.

 பேராசிரியர் டாக்டர் ரவிசங்கர் கண்ணபிரான் காணொலிமூலம் நன்றி கூறினார்.

விருது வழங்கும் விழாவில் விடுதலை சிறுத்தை கள் கட்சி செய்திதொடர்பாளர்வன்னியரசுதுணைப் பொதுச்செயலாளர் பாலாஜிமந்தைவெளி அசோக்சி.ராஜ்குமார் உள்பட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநிலமாவட்ட பொறுப்பாளர்கள்மகளிர் அணி பொறுப்பாளர்கள் பெருந்திரளானவர்கள் பங் கேற்றனர்.

தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம்

முற்பகல் 11.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை  தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களுக்கு பயனாடை அணி வித்து இயக்க வெளியீடுகளை வழங்கி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்பு செய்தார்.

கழகத் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் .இன்பக்கனி வரவேற்றார்.  கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுக உரையாற்றினார்.

சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி து.அரிபரந்தாமன் கருத்தரங்க சிறப்புரையாற்றினார்.

நூல் வெளியீடுபெரியார் விருது

‘’தந்தை பெரியாரின் சமூகநீதி சிந்தனைகள்’’ நூலை வெளியிட்டும்பெரியார் விருதினைப் பெற்றுக் கொண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினர் தோழர் தா.பாண்டியன் ஏற்புரையாற்றினார்.

திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக் குரைஞர் பா.மணியம்மை இணைப்புரை வழங்கினார்.

தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகளில் கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்பொருளா ளர் வீ.குமரேசன்அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம்சென்னை மண்டல செயலாளர் தே.செகோபால்வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன்தென்சென்னை  மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்,  ஆவடி பா.தென்னரசுதிருவொற்றியூர் மாவட்டத் தலைவர்  வெ.மு.மோகன்பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன்பெரியார் புத்தக நிலைய மேலாளர் .நடராசன்,  கே.கே.சி.எழிலரசன்மோகனா வீரமணிசி.வெற்றிசெல்விஆம்பூர் வடசேரி மீரா ஜெகதீசன்அகிலா எழிலரசன்உமா செல்வராசுடெய்சி மணியம்மைபசும்பொன் செந்தில்குமாரி உள்ளிட்ட கழகப்பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

சி.பி.அய்., சி.பி.எம்கட்சிகளின் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள்திராவிடர் கழகத்தின் பல்வேறு அணிகளின் மாநிலமண்டல பொறுப்பாளர்கள்தென்சென்னைவடசென்னைதாம்பரம்ஆவடிகும்மிடிப்பூண்டிசோழிங்கநல்லூர்திருவொற்றியூர் கழக மாவட்டங்களின்  பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.