வெள்ளி, 12 நவம்பர், 2021

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கழகத்தின் சார்பில் உணவு வழங்கல்

 

சென்னை,நவ.11- திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின்படிசென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள் ளான பகுதிகளில் பாதிக்கப்பட்ட பொதுமக் களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரணப்பொருள்கள் வழங்கப்பட்டன.

திராவிடர் கழக இளைஞரணிதிராவிட மாணவர் கழகம்பெரியார் தொண்டறத்தின் சார்பில் தமிழர் தலைவரின் வழிகாட்டுதலில் நேற்று (10.11.2021) சென்னை புளியந்தோப்பு மோதிலால் நேரு தெருவிலும்பட்டாளம் மார்க்கெட்கே.எம்.கார்டன் பகுதிகளிலும் இடுப்பளவு நீரில்மிதவைகளிலும்மீன்பாடி வண்டியிலும்தலைச்சுமையாகவும்வீடு வீடாகச் சென்று இரவு உணவு விநியோகம் செய்யப்பட்டது.

தொண்டறப் பணியில் நேற்று  பங்கேற்றோர்

தளபதி பாண்டியன்மங்களபுரம் பாஸ்கர்சா.தாமோதரன்பூந்தமல்லி தமிழ்ச்செல்வன்சண்முகப்பிரியன் மகேந்திரன்,  சேகர்பசும்பொன் செந்தில் குமாரிமு.பவானிகாரல்மார்க்ஸ்வை.கலையரசன்திவாகரன்தமிழ்செல்வன்இளந்தமிழ் சேரன்சோ.சுரேஷ்பிரபு.பிரின்சு என்னாரெசு பெரியார்வீரப்பார் சுரேஷ்ராமகிருஷ்ணன்வில்லியம்ஸ்வேல்முருகன்ஆனந்த்ரங்கநாதன்ஓட்டுநர்கள் மகேஷ்கணேஷ்மாலதிஇந்திராநாகமணிஆதி லெட்சுமிராவணம்மாள்நித்யகுமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக