சனி, 7 நவம்பர், 2020

மனிதநேயம் துளியுமில்லாத இரக்கமற்ற மனுநீதிக்கொள்கை

ஆத்திரம் ஆவேசம் அடையாதீர்கள் ; படித்த பின்..... பிராமணன் எழுதிவைத்துள்ள மனிதநேயம் துளியுமில்லாத இரக்கமற்ற  மனுநீதிக்கொள்கை
(தயவுசெய்து ஆழ்ந்து கருத்தூண்றி கவனமாகப் படியுங்கள்... குறிப்பாக பெண்கள் கண்டிப்பாக படித்துணர்ந்து சிந்திக்க வேண்டும்)
1. *"பிராமண குலத்தில் பிறந்தவன் ஆச்சாரமில்லாதவனாயினும், அவன் நீதி செலுத்தலாம். சூத்திரன் ஒரு போதும் நீதி செலுத்தலாகாது"*
 (அத்தியாயம் 8. சுலோகம் 20.)

2. *"சூத்திரர் நிறைந்த தேசம் எப்பொழுதும் வறுமை உடையதாயிருக்கும்"*
 (அத்தியாயம்8. சுலோகம்.22.)

3. *"சூத்திரனாகவும், மிலேச்சனாகவும் (இழிவானவன்) பன்றியாகவும் பிறப்பது தமோ குணத்தின் கதி"*
 (அத்.8. சுலோ. 22.)

4. *"ஸ்திரிகள்(பெண்கள்) புணர்ச்சி விஷயத்திலும், பிராமணரைக் காப்பாற்றும் விஷயத்திலும் பொய் சொன்னால் குற்றமில்லை"* 
(அத்.8. சுலோ.112.)

5. *"நீதி ஸ்தலங்களில் பிரமாணம் செய்ய வேண்டிய பிராமணனை 'சத்தியமாகச் சொல்லுகிறேன்' என்று சொல்ல செய்ய வேண்டும். பிரமாணம் செய்ய வேண்டிய சூத்திரனை பழுக்கக் காய்ச்சின மழுவை எடுக்கச் சொல்ல வேண்டும்; அல்லது தண்ணீரில் அமிழ்த்த வேண்டும். சூத்திரனுக்கு கை வேகாமலும், தண்ணீரில் அமிழ்த்தியதால் உயிர் போகாமலும் இருந்தால் அவன் சொன்னது 'சத்தியம்'என உணர வேண்டும்"*
 (அத். 8. சுலோ. 113 115.)

6. *"சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கை அறுக்க வேண்டும்"* 
(அத்.8. சுலோ. 270.)

7. *"சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி இவைகளை சொல்லித் திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும்"* 
(அத்.8. சுலோ.271.)

8. *"பிராமணனைப் பார்த்து, "நீ இதைச் செய்ய வேண்டும்" என்று சொல்லுகிற சூத்திரன் வாயிலும் காதிலும் எண்ணெயைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்* 
(அத்.8. சுலோ.272.)

9. *"சூத்திரன் பிராமணனுடன் ஒரே ஆசனத்தில் உட்கார்ந்தால் அவனது இடுப்பில் சூடு போட்டாவது அல்லது ஆசனப் பக்கத்தைச் சிறிது அறுத்தாவது ஊரை விட்டுத் துரத்த வேண்டும்"* 
(அத்.8. சுலோ.281.)

10. *"பிராமணனைக் காப்பாற்றும் பொருட்டு பிராமணரல்லாதாரைக் கொன்றவனுக்கு பாவமில்லை"* 
(அத்.8. சுலோ.349.)

11. *"சூத்திரன் பிராமணப் பெண்ணைப் புணர்ந்தால் அவனது உயிர்ப் போகும் வரையும் தண்டிக்க வேண்டும்."*
*"பிராமணன் கொலைக் குற்றம் செய்தாலும் அவனைக் கொல்லாமலும், எத்தகைய தண்டனைக்கும் ஆளாக்காமலும் பொருளைக் கொடுத்து அனுப்பிவிட வேண்டும்."* 
(அத்.8. சுலோ.380.)

12. *"அரசன் ; பிராமணர் முதலிய உயர்ந்த சாதிக்கு சூத்திரனை பணி விடை செய்யும்படி கட்டளையிட வேண்டும். சூத்திரன் மறுத்தால் அவனைத் தண்டிக்க வேண்டும்."* 
(அத். 8. சுலோ.410.)

13. *"பிராமணன் கூலி கொடுக்காமல் சூத்திரனிடம் வேலை வாங்கலாம்; ஏனென்றால் பிராமணனுக்குத் தொண்டு செய்யவதற்குத்தான் கடவுளால் சூத்திரன் படைக்கப் பட்டிருக்கிறான்"* 
(அத். 8. சுலோ.413.)

14. *"பிராமணன் சந்தேகமின்றி சூத்திரன் தேடிய பொருளைக் கைப்பற்றலாம். ஏனென்றால் அடிமையாகிய சூத்திரன் எவ்விதப் பொருளுக்கும் உடையவனாக மாட்டான்"* 
(அத். 8. சுலோ.417.)

15. *"சூத்திரன் பொருள் சம்பாதித்தால், அது அவனுடைய எஜமானனாகிய பிராமணனுக்குச் சேர வேண்டுமேயன்றி சம்பாதித்தவனுக்குச் சேராது"* 
(அத். 9. சுலோ.416.)

16. *"பிராமணனால் சூத்திர ஸ்திரீக்கு பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்கு தந்தை சொத்தில் பங்கில்லை"*
 (அத். 8. சுலோ.155.)

17. *"பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனை சித்தரவதை செய்து கொல்ல வேண்டும். ஆனால் சூத்திரனுடைய பொருளை பிராமணன் தம் இஷ்டப்படி கொள்ளையிடலாம்."* 
(அத்.9. சுலோ.248.)

18. *"பிராமணன் மூடனானாலும்(முட்டாள்) அவனே மேலானதெய்வம்"* 
(அத். 9. சுலோ. 317.)

19. *"பிராமணர்கள் இழி தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் பூஜிக்கத் தக்கவர்கள் (வணங்கத் தக்கவர்கள்) ஆவார்கள்."* 
(அத். 9. சுலோ.319.)

20. *"பிராமணனிடமிருந்து சத்திரியன் உண்டானவனாதலால் அவன் பிராமணனுக்கு துன்பஞ் செய்தால் அவனை சூன்னியம் செய்து ஒழிக்க வேண்டும்."* 
(அத்.9 சுலோ. 320.)

21. *"சூத்திரன் ;  பிராமணுக்குபணி விடை செய்வது  ஒன்றே பயன் தருவதாகும். அவன் பிராமணனில்லாதவிடத்தில் க்ஷத்திரியனுக்கும் க்ஷத்திரியனில்லா விடத்தில் வைசியனுக்கும் தொண்டு செய்ய வேண்டும். அதிகமான செல்வமும், பசுக்களும் வைத்திருக்கிறவன், பிராமணன் கேட்டுக் கொடுக்காவிட்டால்களவு செய்தாவது, அல்லது பலாத்காரம் செய்தாவது அவற்றை பிராமணன் எடுத்துக் கொள்ள உரிமையுண்டு."* 
(அத்.11. சுலோ.12.)

22. *"சூத்திரன் வீட்டிலிருந்து கேட்காமலும் யோசிக்காமலும் தேவையான பொருளைப் பிராமணன் பலாத்காரத்தினால் கொள்ளையிடலாம்." 
(அத்.11. சுலோ.13.)

23. *"யோக்கியமான அரசன் இவ்விதம் திருடிய பிராமணனைக் தண்டிக்கக் கூடாது."* 
(அத்.11. சுலோ.20.)

24. *"பெண்களையும் சூத்திரரையும் கொல்லுவது மிகவும் குறைந்த பாவமாகும்."* 
(அத்.11. சுலோ.66.)

25. *"ஒரு பிராமணன் தவளையைக் கொன்றால் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் என்னவோ ; அதைத்தான் சூத்திரனைக் கொன்றாலும் செய்ய வேண்டும்."* 
(அத்.11. சுலோ.131.)

25(அ). *"அதுவும் முடியாவிடில் வருண மந்திரத்தை 3 நாள் ஜெபித்தால் போதுமானது."* 
(அத்.11. சுலோ.132.)

26. *"க்ஷத்திரியன் இந் நூலில் (மநுதர்ம சாஸ்திரத்தில்) சொல்லப்பட்டபடி ராஜ்யபாரம் (அரசாட்சி) பண்ணுவதே தவமாகும். சூத்திரன் பிராமணுக்கு பணி விடை செய்வதே தவமாகும்."* 
(அத்.11 சுலோ.285.)

27. *"சூத்திரன் பிராமணனுடைய தொழிலைச் செய்தாலும் சூத்திரனே யாவன். பிராமணன் சூத்திரனுடைய தொழிலைச் செய்யின் பிராமணனேயாவன். ஏனெனில் கடவுள் அப்படியே நிச்சயம் செய்துவிட்டார்."*
 (அத்.10. சுலோ.75.)

28. *"பிராமணரல்லாதவன் உயர்குலத்தோருடைய தொழிலைச் செய்தால் ; அரசன் அவனது பொருள் முழுவதையும் பிடுங்கிக் கொண்டு அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும்."* 
(அத்.10. சுலோ.96.)

29. *"சூத்திரன் இம்மைக்கும், மோட்சத்திற்கும் பிராமணனையே தொழ வேண்டும்."* 
(அத்.10. சுலோ.96.)

30. *"பிராமணன் உண்டு மிகுந்த(மீதி) எச்சில் ஆகாரமும், உடுத்திக் கிழிந்த ஆடையும், கெட்டுப் போன தானியமும், சூத்திரனுடைய ஜீவனத்துக்கு கொடுக்கப்படும்."* 
(அத்.10. சுலோ.125.)

31. *"சூத்திரன் எவ்வளவு திறமையுடையவனாக இருந்தாலும் கண்டிப்பாக பொருள் சேர்க்கக் கூடாது. சூத்திரனைப் பொருள் சேர்க்கவிட்டால் அது பிராமணனுக்கு துன்பமாய் முடியும்."* (அத்.10. சுலோ.129.)
(கோபம் கொப்பளிக்க ; மனக்குமுறலுடன் படித்து முடித்திருப்பீர்கள்.....சிந்தித்துப் பாருங்கள்...)
பெண்களுக்கு எதிராக மட்டுமல்ல மனித குலத்திற்கே எதிரான மனுஸ்மிருதி...என்பதை புரிந்து கொள்ளுங்கள்; தமிழ் மக்களே...
-கட்செவி வழியாக...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக