ஞாயிறு, 23 ஜனவரி, 2022

புண்படுத்துபவர் யார்? 'தினமலர்' 22.8.2021


பெரியார் மறைந்து 48 ஆண்டுகள் கழித்து, அவர் விரும்பிய 'அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் உரிமை' நிறைவேற் றப்படுகிறது என்றால் அதற்குக் காரணம், பார்ப்பனர்கள் (தினமலர் கூட்டம்) நீதிமன் றங்கள் சென்று காலதாமதம் செய்ததுதானே? தவறுக்குக் காரணமானவர்களே மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தும் இந்தக் குள்ளநரிப் புத்திக்குப் பெயர்தான் பார்ப்பனீயம் என்பது.

மத உணர்வுகளை அழிக்க 3000 ஆண்டுகள் ஆனாலும் முடியாதாம்! என்ன திமிர்வாதம்! மதத்தின் பெயரால் பெரும் பாலான மக்களை சூத்திரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும் இழிவுபடுத்துவது யார்? புண்படுத்துபவர் யார்? தென்னாட்டுப் பார்ப்பனர்கள் தாங்களே, துவேஷிகளாக இருந்து மற்றவர்களைப் பார்த்து 'துவேஷிகள், துவேஷிகள்' என்பார்கள் என்று லாலா லஜபதி(ராய்) சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக