புதன், 21 ஏப்ரல், 2021

நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!


நேற்று (13.4.2021) நெடுஞ்சாலைத் துறையின் அறிக்கையில் ‘பெரியார் .வெ.ராநெடுஞ்சாலைபெயர் மாற்றப்பட்ட கொடுமையைப் போலவேஅண்ணா சாலை'யின் பெயரும் கிராண்ட் சதர்ன் டிரங்க் ரோடு' என்றும்சென்னை காமராசர் சாலை (கடற்கரை சாலை)யின் பெயரும் கிராண்ட் நார்தென் டிரங்க் ரோடுஎன்றும் குறிக்கப்பட்டிருப்பதாக நமக்கு சில தகவல்கள் வந்துள்ளன.

அதாவது ‘மவுண்ட் ரோடுஎன்பது ‘அண்ணா சாலைஎன்று மாற்றப்பட்ட நிலையில்மீண்டும் பெரியாருக்கு இழைக்கப்பட்ட அநீதியைஅண் ணாவுக்கும்காமராசருக்கும் செய்துள்ளனர்!

விமான நிலையத்தில் அண்ணாகாமராசர் பெயர்களும் அகற்றப்பட்டுஅப்படியே நீடிக்கும் கொடுமையில் மாற்றமில்லை.

விரைவில் இந்த அநியாய அக்கிரமங்களைக் கண்டித்துமாபெரும் மக்கள் போராட்டத்தைத் தொடங்க மக்களை தமிழ்நாட்டு .தி.மு.அரசு ஏனோ தூண்டுகிறது!

வீண் வம்பை விலைக்கு வாங்கவேண்டாம்!

அரசே இப்படி போராட்டங்களைத் தூண் டலாமாஅண்ணா பெயரில் கட்சி - ஆனால்அண்ணா பெயருக்கும் ஆபத்து என்றால்இதன் ‘‘மூலப் புருஷர்கள்'' யார்எந்தப் பின்னணியில் இந்த விஷமங்கள் விதைக்கப் பட்டன?

தமிழ்நாட்டு மக்களேஅறைகூவல்கள் எப்படி உருக்கொள்கின்றன பார்த்தீர்களா?

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

14.4.2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக