தமிழ் மலர்

மனிதப்பற்று, தன்மானம், பகுத்தறிவு, சரிநிகர், இனவுணர்வு, மொழி உணர்வு இவற்றிற்காகவும் நலவாழ்வு,வரலாறு மற்றும் சிந்தனைத் தூண்டலுக்காகவும் பயன்பட

பக்கங்கள்

  • முகப்பு
  • பெரியார் உலகம்
  • சுயமரியாதை உலகு
  • பகுத்தறிவு உலகு
  • சமூக நீதி
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • திராவிடர் இனம்
  • தமிழ் உலகு
  • சிந்தனை செய்வோம்
  • மகளிர் மாண்பு
  • தென் சென்னை திராவிடர் கழகம்

திங்கள், 19 டிசம்பர், 2022

இனமானப் பேராசிரியர் அவர்களுடைய நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் புகழாரம்!



  December 19, 2022 • Viduthalai

 தமிழன் இருக்கும்வரை, தமிழ்நாடு இருக்கும்வரை, திராவிடம் இருக்கும்வரை, 

திருக்குறள் இருக்கும்வரை இனமானப் பேராசிரியரின் புகழ் இருக்கும் 

கலைஞரும், பேராசிரியரும் காட்டிய வழியிலேயே 'திராவிட மாடல்' ஆட்சியை நடத்திக் கொண்டுள்ளோம்

இனமானப் பேராசிரியர் அவர்களுடைய நூற்றாண்டு 

நிறைவு விழாவில் முதலமைச்சர் புகழாரம்!

சென்னை, டிச.19 தலைவர் கலைஞரும், இனமானப் பேராசிரி யரும் போட்டுத் தந்த 'திராவிட மாடல்' அரசை சிறப்பாக நடத்துவோம் - அவர்கள் வழியில் நம் கொள்கைப் பயணம் தொடரும் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

நேற்று (18.12.2022)  மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற மேனாள் திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலை வர்கள்  பங்கேற்கக்கூடிய என் பெரியப்பா இனமானப் பேராசிரியர் அவர்களுடைய நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்திற்கு தலைமையேற்று உரையாற்றியிருக்கக் கூடிய தி.மு.கழகத்தின் பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான ஆருயிர் அண்ணன் துரைமுருகன் அவர்களே,திராவிடர் கழகத் தலைவர். தமிழர் தலைவர் மானமிகு அய்யா ஆசிரியர் அவர்களே,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மதிப்பிற் குரியகே.எஸ்.அழகிரி  அவர்களே, மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான என்னுடைய ஆருயிர் அண்ணன் வைகோ அவர்களே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன் அவர்களே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர்  இரா. முத்தரசன் அவர்களே,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எழுச்சித் தமிழரும், நாடாளுமன்ற உறுப்பின ருமான என்னுடைய இனிய சகோதரர் தொல். திருமாவளவன் அவர்களே,

இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் அவர்களே,

மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப் பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா அவர்களே,

கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈ. ஆர். ஈஸ்வரன் அவர்களே,

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான  அருமை சகோதரர் தி.வேல்முருகன் அவர்களே,

இந்த நிகழ்ச்சிக்கு முன்னிலை ஏற்றுள்ள தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அய். பெரியசாமி அவர்களே,

தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என். நேரு அவர்களே,

உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி அவர்களே,

மாநிலங்களவை உறுப்பினரும் தி.மு.க. துணை பொதுச் செயலாளருமான அந்தியூர் செல்வராஜ் அவர்களே,

தொடக்கத்தில் அனைவரையும் வரவேற்று அமர்ந் திருக்கக்கூடிய தி.மு.க. மாவட்டச் செயலாளர், அமைச்சர், என்னுடைய இனிய சகோதரர் சேகர் பாபு அவர்களே,

மாண்புமிகு அமைச்சர் பெருமக்களே,  சட்டமன்ற, நாடா ளுமன்ற மேனாள், இந்நாள் உறுப்பினர்களே, வணக்கத் திற்குரிய மேயர் ஆர்.பிரியா அவர்களே, 

உள்ளாட்சிப் பிரதிநிதிகளே, தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகளே,  மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளே,

இந்த நிகழ்ச்சியிலே பங்கேற்று இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்துக் கொண்டிருக்கக்கூடிய என்னுடைய இனிய சகோதரர்,  பேராசிரியருடைய அருமை மைந்தன் அன்புச் செல்வன் உள்ளிட்ட அந்தக் குடும்பத்தைச் சார்ந்திருக்கக் கூடிய அருமை சகோதரர்களே, சகோதரிகளே, 

மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைச் சார்ந்த தோழர்களே, செயல் வீரர்களே,

பத்திரிகை மற்றும் ஊடகத்துறையைச் சார்ந்திருக்கக்கூடிய தோழர்களே, நண்பர்களே,

என் உயிரோடு கலந்திருக்கக்கூடிய தலைவர் கலைஞர் அவர்களின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே,

இனமான பேராசிரியர்பற்றி  கலைஞர் எழுதிய கவிதை

உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.

தலைவர் கலைஞர் அவர்களின் கவிதை வரிகளைச் சொல்லி எனது உரையைத் தொடங்கலாம் என நினைக் கிறேன்...

* காலத்தால் மூத்தமொழி பெற்ற பிள்ளை

* ஞானத்தைத் தொழில் கேட்க வைத்திட்ட

  கோலச்சொல் அறிஞர்க்கு வாய்த்த தம்பி

* ஆலமரக் கழகத்தின் ஆணிவேர்த் தொணடர்க்கும் தோழன்

* ஓலமிகும் எதிர்ப்புதனை ஒடுக்குகின்ற உடன்பிறப்பு

* சீலமிகு பேராசிரியர் அன்பழகர்க்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்வோம்!

- என்று எழுதிய கலைஞரின் வரிகளால் இனமானப் பேராசிரியப் பெருந்தகையின் புகழைப் போற்றுவோம் என்று முதலில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இங்கே பலர் குறிப்பிட்டுச் சொன்னார்கள். 

முதலில் நான் மனிதன்.

இரண்டாவது நான் அன்பழகன்.

மூன்றாவது நான் சுயமரியாதைக்காரன்.

நான்காவது நான் அண்ணாவின் தம்பி.

அய்ந்தாவது கலைஞரின் தோழன் - என்று சொல்லி இறுதிமூச்சு வரையில் வாழ்ந்தவர் நம்முடைய இனமானப் பேராசிரியர் அவர்கள்.

ஆறாவது, உரிமையோடு நான் கூற விரும்புவது,  அவர் எனது பெரியப்பா.

'எனக்கு இரண்டு அக்காள் உண்டு - ஆனால் அண்ணன் இல்லை. அண்ணனாக நினைப்பது பேராசிரியர் அவர்களைத் தான்" என்று தலைவர் கலைஞர் அவர்கள் சொல்வார்கள். சொன்னது மட்டுமல்ல அப்படியே நினைத்தார். மதித்தார், போற்றினார்.

அந்த வகையில் நானும் பேராசிரியர் அவர்களை பெரியப்பாவாக நினைத்தேன். மதித்தேன், போற்றி வந்தேன், இப்போதும் அப்படித்தான். 

இன்று அவருக்கு நூற்றாண்டு விழாவை எடுத்துக் கொண்டு இருக்கிறோம். இனமானப் பேராசிரியரின் நூற் றாண்டு தொடக்க விழாவினையொட்டி, சென்னை நந் தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் கடந்த 19.12.2021 அன்று அவருடைய மார்பளவு சிலையை திறந்து வைத்தோம். 

இனமானப் பேராசிரியருக்கு செய்த சிறப்புகள்

கருவூல கணக்குத் தொடர்பான அலுவலகங்கள் உள் ளிட்ட 15 அரசு அலுவலகங்கள் இயங்கி வரும் அந்த வளாகத்திற்கு “பேராசிரியர் அன்பழகன் மாளிகை” எனப் பெயர் சூட்டியிருக்கிறோம்.

இனமானப் பேராசிரியர் அவர்கள் படைத்த நூல்களையும் நாட்டுடைமையாக்கி, அந்த நூலுரிமைத் தொகையை முழுமையாக பேராசிரியர் அவர்களின் குடும்பத்தாருக்கு வழங்கியிருக்கிறோம்.

பேராசிரியருக்கு நிரந்தரப் புகழ் சேர்க்கும் வகையில் 7,500 கோடி ரூபாய் மதிப்பில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது இந்த திராவிட மாடல் ஆட்சியில். 

நேற்று முன்தினம் 16 ஆம் தேதி தமிழகம் முழுவதும் பேராசிரியர் நூற்றாண்டு விழாவை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழக அமைப்புகளின் சார்பில் இது வரையில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு 100 பொதுக் கூட்டங்களை நடத்தி முடித்திருக்கிறோம். நேற்று அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நம்முடைய  கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தலைமையில் கவியரங்கம் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது.

இன்று நம்முடைய மதச்சார்பற்ற கூட்டணியில் இடம் பெற்றிருக்கக்கூடிய கட்சியின் தலைவர்கள் பங்கேற்கக்கூடிய இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. 

நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வி இயக்ககத்தில் அவரது உருவச்சிலை இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதக் காலத்திற்குள்ளாக திறக்கப்படவிருக்கிறது. அதற்கு முன் கூட்டியே நாளையதினம் அந்தக் கட்டடத்திற்கு பேராசிரியர் அன்பழகன் அவர்களுடைய பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.  

இப்படி இந்த ஆண்டு முழுவதும் அவருடைய நூற்றாண்டு விழாவை நிறைவு விழாவாக நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இன்று இந்த விழா பெரியார் திடலில் நடப்பது  மிகமிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது. 

ஏற்கனவே குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள், பேராசிரியருடைய மணிவிழா இதே பெரியார் திடலில் அவர் யாரை தலைவராக ஏற்றுக் கொண்டோரோ அந்தத் தலைவர் கலைஞர் அவர்களே முன்நின்று நடத்திய அந்த மணிவிழா.

கலைஞர் கோப்பெருஞ்சோழன் - பேராசிரியர் பிசிராந்தையார்

அந்த விழாவில் பேராசிரியர் அவர்கள் பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார்-

''கலைஞர் கோப்பெருஞ்சோழன் என்றால் 

நான் பிசிராந்தையாராக என்றும் இருப்பேன்" என்று குறிப்பிட்டார்.

சொன்னபடியே இறுதிவரை இணைபிரியாது வாழ்ந்தார்.

இதே பெரியார் திடலில் பேராசிரியர் அவர்களின் வாழ்வும் தொண்டும் நூல் வெளியீட்டு விழா 2015 ஆம் ஆண்டு நடந்தது. அந்த விழாவிற்கு கலைவர் கலைஞர் அவர்கள் வரவேண்டும், சிறிது உடல்நலிவுற்று வீட்டில் இருக்கிறார்.  அவர் பங்கெடுப்பாரா, பங்கெடுக்க மாட்டாரா என்ற ஒரு கேள்விக்குறி. 

பேராசிரியர் இல்லத்தினர் கூட கோபாலபுரம் வந்து தலைவரிடத்தில் கேட்டார்கள். ”நான் நல்லாதான் இருக்கேன்... உடல் நலமில்லாமல் இருந்தாலும் நிச்சயம் வருவேன்” என்று தலைவர் கலைஞர் அவர்கள் அவரிடத்திலே சொன்னார். “நான் வரவில்லை என்பதற்காகப் பேராசிரியர் வருந்துகிறாரோ இல்லையோ- நான் நலமாக இருந்தால் போதும் என்று கருதுகிற உயிர் நண்பர் பேராசிரியர்" என்று உருக்கமாக குறிப்பிட்டுச் சொன்னார்.

என்னைப் பொறுத்தவரையில் அரசியல் வரலாற்றில் இரண்டு பெரும் ஆளுமைகள் இத்தகைய நட்பு - புரிதலோடு இருந்துள்ளார்கள் என்றால் அது கலைஞரும் பேராசிரியரு மாகத்தான் இருக்க முடியும். எதையும் பேராசிரியர் அவர்களிடம் சொல்லிவிட்டுச் செய்ய வேண்டும் என்று நினைப்பார் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். கலைஞர் செய்தால் சரியாகத்தான் இருக்கும் என்று நினைப் பார் பேராசிரியர். இத்தகைய நண்பர்களை அரசியலில் பார்ப்பது என்பது மிக மிக மிக அரிது.

இந்த இயக்கத்தை தலைவர் கலைஞர் அவர்களுக்குப் பிறகு - தனக்குப் பிறகு வழிநடத்தத் தகுதியானவன் ஸ்டாலின்தான் என்பதை முதலில் சொன்னவர் எனது பெரியப்பா பேராசிரியர் அவர்கள்தான். அதாவது கலை ஞருக்கு முன்னதாகவே சொன்னவரும் என்னுடைய பெரியப்பா நம்முடைய பேராசிரியர் தான். 

என்னுடைய அரசியல் வாழ்க்கை ஆரம்பமே பெரியப்பா இனமானப் பேராசிரியரிடமிருந்துதான்!

என்னுடைய அரசியல் வாழ்க்கையே அவரிடத்தில் தான் ஆரம்பித்தது. பதின்மூன்று வயதில் பள்ளிச் சிறுவனாக, பள்ளி மாணவனாக இருந்தபோது, கோபாலபுரம் பகுதியில் இளைஞர் தி.மு.க. என்ற ஒரு அமைப்பை 20, 25 சிறுவர் களோடு சேர்ந்து நடத்தி, அதற்கென்று ஒரு அலுவலகத்தை உருவாக்க வேண்டும் என்று கோபாலபுரத்தில் தெருவின் மூலைப் பகுதியில், அய்ந்தாறு கடைகள் இருக்கிறது, அதில் ஒரு கடை முடிதிருத்தும் நிலையம். அந்த இடத்தில் தான் என்னுடைய அலுவலகத்தை ஆரம்பித்தேன். அதைத் திறந்து வைக்க வேண்டுமென்று தலைவர் கலைஞரிடத்தில், பேராசிரியரிடத்தில் சொல்லிக் கொண்டிருந்தபோது இரு வரும் கிளம்பினார்கள். நடந்தே வந்தார்கள், கோபாலபுரம் தெருவில் நடந்தே வந்து, அதைத் திறந்துவைக்க கத்திரிக் கோலை எடுத்து தலைவரிடத்தில் கொடுக்கிறேன், தலைவர் உடனே, நான் திறக்க மாட்டேன், அவரிடத்தில் கொடுத்து திறக்கச் சொல்லு என்ற பேராசிரியரிடத்தில் கொடுத்தார். 

ஆக, முதன்முதலில் அந்த அலுவலகத்தை திறந்து வைத்ததே என் பெரியப்பா பேராசிரியர் அவர்கள். அவர் கொடுத்த அந்த உற்சாகத்தின், ஊக்கத்தின் அடிப்படையில் தான் இன்று அண்ணா அறிவாலயத்தையே கட்டிக் காக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய பொறுப்பை ஏற்கக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. நான் அதைத்தான் நினைத்து பார்க்கிறேன். ஏன், கோட்டையைக் காக்கக்கூடிய அந்தப் பொறுப்பும் இன்றைக்கு கிடைத்திருக்கிறது என்றால், இந்தத் தமிழகத்தைக் காக்கக்கூடிய அந்தப் பொறுப்பும் எனக்கு கிடைத்திருக்கிறது என்றால், அந்த இளைஞர் அணிக்கு முதன்முதலாக அன்பகம் எங்களுக்கு எப்படி கிடைத்தது? அதற்கும் காரணம் பேராசிரியர் தான். 

இளைஞரணியின் செயலாளராக நான் பொறுப்பேற்று பணியாற்றிக் கொண்டிருந்தபோது, தலைமைக் கழகமாக செயல்பட்டுக் கொண்டிருந்த அன்பகத்திலிருந்து காலி செய்து அறிவாலயத்திற்கு தலைமைக் கழகம் வருகிறது. அப்போது அன்பகத்தை எப்படி பயன்படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, தொழிலாளர் அணி கேட்கிறது, மாணவர் அணி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், இப்படி பல அணிகள் கேட்டுக் கொண்டிருக்கும்போது, இளைஞர் அணியின் சார்பாக நானும் போய்க் கேட்டேன். கலைஞர் முடியவே முடியாது, பிள்ளைக்கு கொடுத்து விட்டார்கள் என்று கெட்ட பெயர் எனக்கு வந்துவிடும், நான் கொடுக்க முடியாது என்று சொன்னார். 

அப்போது பேராசிரியர் ஒரு யோசனை சொன்னார், யார் இந்தக் கட்சிக்கு பத்து லட்சம் ரூபாய் நிதியை கொண்டுவந்து கொடுக்கிறாரோ அவரிடத்தில் கொடுக்கலாம் என்ற சொன்னார்.  ஆறு மாதம் கெடு கொடுத்தார்கள், அய்ந்தே மாதங்களில் பத்து இலட்சம் அல்ல, 11 லட்சம் ரூபாயை திரட்டிக் கொண்டுபோய் கொடுத்தோம். ஆக, போட்டி வைத்து, அந்தப் போட்டியின் மூலமாக அந்த இளைஞர் அணி அமைப்புக்கு அந்தக் கட்டடத்தைப் பெற்றுத் தந்த வரும் என்னுடைய பெரியப்பா பேராசிரியர் அவர்கள்தான். 

'கலைஞருடைய ஆற்றல் ஸ்டாலினின் செயலில் தெரிகிறது' என்று நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே என்னைப் பாராட்டியவர் பேராசிரியர் அவர்கள்.

''இன்னும் நூறு ஸ்டாலின்கள் வேண்டும்!''

மு.க.ஸ்டாலின் வளர்வதைப் போல் இன்னும் நூறு ஸ்டாலின்கள் வரவேண்டும் என்று மேடைகளில் என்னைப் பாராட்டியவரும் பேராசிரியர் அவர்கள். வாரிசு, வாரிசு என்று இன்றைக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, அந்த வாரிசு என்ற  குற்றச்சாட்டை என் மீது சுமத்தியபோது, கல்வெட்டு போல எனக்கு பாராட்டுப் பத்திரம் கொடுத்தவரும் நம்முடைய பேராசிரியர் அவர்கள்தான்.

அவர் சொன்னார், ''கலைஞருக்கு மட்டுமல்ல எனக்கும் ஸ்டாலின் வாரிசுதான். அடுத்த தலைமுறையைப் பாதுகாக்க வேண்டிய கடமை அவருக்கு உள்ளது” என்று துணிச்சலாகச் சொன்னவர் நம்முடைய பேராசிரியர் அவர்கள்தான். 

இவை அனைத்துக்கும் மேலாக, நம்முடைய பொதுச் செயலாளர் அவர்கள் சொன்னதுபோல, தி.மு.கழகத்தின் செயல் தலைவராக என்னை முன்மொழிந்தவர் நம்முடைய பேராசிரியர் அவர்கள்தான். தலைவர் கலைஞர் அவர் களுடைய மறைவிற்குப் பிறகு, என்னை தலைவராக முன்மொழிந்தவரும் என்னுடைய பெரியப்பா பேராசிரியர் அவர்கள்தான். நான் இன்று இந்தளவுக்குத் தகுதி பெற்றவனாக இருக்கக் காரணம், அனைத்துக்கும் காரணம் நம்முடைய பேராசிரியர் அவர்கள்தான்.

அவர் இன்னும் சில ஆண்டுகாலம் வாழ்வார் என்று நான் ஆசைப்பட்டேன். அவர் உடல் நலிவுற்று இல்லத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, நானும், நம்முடைய பொதுச்செயலாளர் அவர்களும், நம்முடைய தி.மு.கழக முன்னோடிகளும் எல்லாம் அடிக்கடி போய்ப் பார்த்தோம். நாங்கள் சொல்லிவிட்டு வருவோம், இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கப் போகிறீர்கள், நூற்றாண்டு விழாவை உங்களைவைத்து நாங்கள் கொண்டாடப் போகிறோம் என்று சொல்லிவிட்டு, சொல்லிவிட்டு வருவோம். ஆனால், அந்த வாய்ப்பு கிட்டாமல் போய்விட்டது. அந்த வாய்ப்பு கிட்டாமல் போனாலும், அவர் மறைவிற்குப் பிறகு, இந்த நூற்றாண்டு விழாவை எவ்வளவு சிறப்பாக நடத்த வேண்டுமோ அவ்வளவு சிறப்பாக நடத்த வேண்டும் என்று முடிவு செய்து நடத்திக் கொண்டிருக்கிறோம். கோப்பெருஞ்சோழனைத் தொடர்ந்த பிசிராந்தையாராகப் பேராசிரியர் அவர்கள் நம்மை விட்டுவிட்டுச் சென்று விட்டார்.

பேராசிரியருக்கு இணை பேராசிரியர்தான்!

உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த பேராசிரியரை வாரத் துக்கு இரண்டு மூன்று நாட்கள் நாங்கள் சென்று பார்க்கும் போது எல்லாம் அவர் சொல்வார், “எவ்வளவு பணிகள் இருக்கிறது, நீ ஏன் வருகிறாய், நான் நன்றாகத்தான் இருக் கிறேன்” என்று பலமுறை சொல்லியிருக்கிறார். அந்த புன்சிரிப்பு முகம் இன்னமும் என் நெஞ்சில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. அவர் எந்தளவுக்கு கோபக்காரரோ - அந்தளவுக்குப் பாசக்காரர் என்பதை மறந்துவிட முடியாது. 

பேராசிரியருக்கு இணை பேராசிரியர்தான். இன்றைக்கு அவர் புகழை நாம் போற்றிக் கொண்டு இருக்கிறோம் என்றால் அவரைப் பெருமைப்படுத்துவதற்காக மட்டுமல்ல, தலைவர் கலைஞரும்; இனமானப் பேராசிரியரும் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே அனைத்துப் பெருமைகளையும் பெற்றுவிட்டார்கள். இனிமேல் நாம் பெருமைப்படுத்த வேண்டிய அவசியமே கிடையாது. 

இன்றைக்கு பேராசிரியரை நாம் நினைவுகூருகிறோம் என்றால், அவருடைய வாழ்நாளில் பார்த்தீர்களென்றால், அவர் எழுதிய புத்தகங்களாக இருந்தாலும், அவர் பேசிய பேச்சுக்களாக இருந்தாலும், அவர் எழுதிய கட்டுரைகளாக இருந்தாலும், அவர், தன்மானம், சுயமரியாதை,  இனமானம், இந்த வார்த்தைகள் இல்லாமல் அவர் என்றைக்கும் இருந்ததே கிடையாது.  

வாழ்ந்தால் மக்களுக்காக வாழ்வேன்.

தமிழினத்துக்காக வாழ்வேன்.

தாழ்ந்து போன தமிழினம் தலைநிமிர வாழ்வேன்.

உரிமை இழந்த இனம் உரிமை பெற வாழ்வேன்- என்று உறுதி எடுத்துக் கொண்டு வாழ்ந்தவர் நம்முடைய பேராசிரியர் அவர்கள்.

ஆக, அவருடைய நூற்றாண்டு விழாவை கொண்டாடு கிறபோது,  நாமும் அவர் வழியிலே நடைபோட வேண்டு மென்று நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன், உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

இந்த தன்மானம், இனமானம் இரண்டையும் தமிழ் மக்கள் நெஞ்சினில் விதைத்தது திராவிட இயக்கத்தின் வெற்றி!

நமது 'திராவிட மாடல்' அரசு!

திராவிட இயக்கக் கொள்கையை மையப் பொருளாகக் கொண்டுதான் இன்று திராவிட மாடல் ஆட்சியை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை வலிமையை நான் கலைஞரிடம் இருந்தும் பேராசிரியரிடம் இருந்தும்தான் கற்றுக் கொண்டேன். அதே போல் அனைவரும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், நம்முடைய இளைஞர் அணியின் சார்பில், மாணவர் அணியின் சார்பிலே 234 தொகுதிகளில் திராவிட மாடல் பயிற்சி  பாசறைக் கூட்டம் என்ற அந்தக் கூட்டங்களை நாம் நடத்தி முடித்திருக்கிறோம். நடத்தி முடித்திருக்கக்கூடிய இளைஞர் அணிக்கும், மாணவர் அணிக்கும் என்னுடைய வாழ்த்துகளை இந்த நேரத்தில் தெரிவிக்கின்ற அதே நேரத்தில், அது ஒன்றிய அளவிலே, கிராம அளவிலே, பட்டித் தொட்டிகள்தோறும் அந்த பாசறைக்  கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும். இதுதான் பேராசிரியருக்கு செலுத்த வேண்டிய உண்மையான மரியாதையாக அமைந்திட முடியும், அவருடைய புகழுக்கு பெருமை சேர்த்திட முடியும். 

தமிழன் இருக்கும் வரை,

தமிழ்நாடு இருக்கும் வரை,

திராவிடம் இருக்கும் வரை,

திருக்குறள் இருக்கும் வரை,

பேராசிரியரின் புகழும் இருக்கும். 

நன்றி, வணக்கம்.

- இவ்வாறு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

நூற்றாண்டு நிறைவு விழாவில் பேராசிரியரின் படம் திறப்பு!
  December 19, 2022 • Viduthalai

இடுகையிட்டது parthasarathy r நேரம் 8:48 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: பேராசிரியர், முதல்வர், விழா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

செங்காந்த மலர்

செங்காந்த மலர்
தமிழ் நாட்டு மலர்
Powered By Blogger

இலங்கை பயணம்

இலங்கை பயணம்
யாழ்ப்பாணத்தில் வரவேற்பு

தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை

இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு அளிக்கவேண்டிய நிதியை அளிக்க மறுப்பது தி.மு.க. ஆட்சிக்கு நிதி நெருக்கடியை உண்டாக்கும் நோக்கம்தானே! ஒன்றிய அரசின் போக்கைக் கண்டித்து வரும் 3 ஆம் தேதி கழக மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

எனக்கு பிடித்தவை

  • 2.வாழ்வியல் சிந்தனைகள்
  • 1.தமிழர் தலைவர்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

பின்பற்றுபவர்கள்

Translate மொழிபெயர்

Wikipedia

தேடல் முடிவுகள்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • உமா மகேஸ்வரனார் பெயரன் த.கு. திவாகரனாரின் பவழ விழா கவியரங்கம் (கன்னிமேரா நூலகம்)
    சென்னை எழும்பூர் கன்னிமேரா நூலக அரங்கில் 21.12.2024 முற்பகல் 9.30 மணி அளவில் "கலசலிங்கம்- ஆனந்த சேவா சங்கம்" ஏற்பாட்டி...
  • போராட்டம் தீவிரமாகிறது! பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்து – தார் பூசி அழித்த தி.மு.க.வினர்
    விடுதலை நாளேடு Published February 25, 2025 பொள்ளாச்சி, பிப். 25- –ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கி...
  • ‘‘அம்பேத்கர்! அம்பேத்கர்! அம்பேத்கர்! அம்பேத்கர்!” சிறப்புக் கூட்டத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுச்சியுரை!
    புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்ததில் அன்றைக்கு அருண்சோரி, இன்றைக்கு அமித்ஷா – ‘‘அம்பேத்கர்! அம்பேத்கர்! அம்பேத்கர்! அம்பேத்கர்!” Published D...
  • ‘‘தீபாவளி’’யைக் கொண்டாடுபவர்களின் சிந்தனைக்குச் சில செய்திகள்!
    விடுதலை நாளேடு Published October 29, 2024   ‘‘தீபாவளி’’ வந்தது திருமலை நாயக்கன் காலத்தில்தான் – சோழர் காலத்தில் கிடையாது! ஒரே பண்டிகைக்குப்...
  • துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனியுடன் ஒரு நேர்காணல்
    இயக்க மகளிர் சந்திப்பு (28) மனுதர்மத்தை எரித்ததால் ஒன்றரை ஆண்டுகள் வழக்கு! Published August 24, 2024, விடுதலை ஞாயிறு மலர் வி.சி.வில்வம் ஒரு ...
  • காமராஜரைப் பட்டப் பகலில் கொலை செய்ய முயன்ற கூட்டம் எது?
      கருஞ்சட்டை கவிஞர் கலி.பூங்குன்றன் விடுதலை நாளேடு Published November 19, 2024 கருஞ்சட்டை புதுவையின் துணை நிலை ஆளுநராக இருந்து விட்டு, பிறகு...
  • ஹிந்தி பேசும் மாநிலங்களில் 90 சதவீதம் பேருக்கு வேறு மொழி தெரியாது ஆய்வில் அதிர்ச்சி தகவல்
    விடுதலை நாளேடு Published March 7, 2025 புதுடில்லி, மார்ச் 7  தாய்மொழியுடன் ஆங்கில கல்வி பெற்றவர்களின் வாழக்கைத் தரம் மேம்பட்டுள்ளதாக நெதர்லா...
  • இந்நாள் – அந்நாள் (30.1.1948) காந்தியார் படுகொலை தப்பி ஓட முயன்ற நாதுராம் கோட்சே!
    Published January 30, 2025 இந்திய வரலாற்றில் பெரும் மதக்கலவரம் மூழ்வதை தடுத்து நிறுத்த முக்கிய காரணமாக இருந்தவர்கள் ரகுநாத் நாயக் மற்றும் ஹெ...
  • புதுடில்லியில் தி.மு.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்!! ராகுல்காந்தி, அகிலேஷ் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரை! திராவிட மாணவர் கழகம் பங்கேற்பு!
      புதுடில்லியில் தி.மு.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்!! ராகுல்காந்தி, அகிலேஷ் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரை! திராவிட மாண...
  • பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் மருத்துவர் இரா. கவுதமன் பவள விழா – புத்தக வெளியீடு
    விடுதலை நாளேடு Published October 6, 2024   பெரியார் மருத்துவக் குழும இயக்குனர் மருத்துவர் இரா. கவுதமன் அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் (ப...

லேபிள்கள்

  • 10% ஒதுக்கீடு
  • 100 நாள் வேலை
  • 100நாள்வேலை
  • 2020
  • 2021
  • 2024
  • 27%
  • 60 ஆண்டு
  • 7 திட்டங்கள்
  • 91
  • அக்னிபாதை
  • அகவிலைப்படி
  • அஞ்சலகம்
  • அண்ணா
  • அண்ணா பல்கலை
  • அண்ணா பல்கலைக்கழகம்
  • அண்ணாமலை
  • அணி
  • அதிபர்
  • அதிரடி அன்பழகன்
  • அநீதி
  • அபராதம்
  • அபாயம்
  • அம்பத்தூர்
  • அம்பேத்கர்
  • அமிர்தலிங்கம்
  • அமிர்ஷா
  • அமெரிக்கா
  • அமைச்சர்
  • அய்.அய்.டி
  • அய்.அய்.டி.
  • அய்.ஏ.எஸ்.
  • அய்.நா.
  • அய்.பி.எஸ்
  • அய்தராபாத்
  • அயோத்திதாசர்
  • அயோத்திதாசர் மணி மண்டபம்
  • அர்ச்சகர்
  • அர்ச்சகர் உரிமை
  • அரக்கோணம்
  • அரசமைப்பு சட்டம்
  • அரசாணை
  • அரசு
  • அரசு அலுவலகங்கள்
  • அரசு அறிவிப்பு
  • அரசுப் பணி
  • அரபு மொழி
  • அவதூறு
  • அவமதிப்பு
  • அளிப்பு
  • அறநிலையத் துறை
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிவிப்பு
  • அறைஞாண்
  • அன்பழகனார்
  • அனுமதி மறுப்பு
  • அனுமான்
  • அனைத்து கட்சி கூட்டம்
  • அனைத்து சாதியினர்
  • அனைத்து ஜாதி
  • அனைத்து ஜாதியினர்
  • அனைத்துக் கட்சிக் கூட்டம்
  • அனைத்துக்கட்சி
  • அனைத்துக்கட்சி கூட்டம்
  • அஷ்டமி நவமி
  • ஆ.ராசா
  • ஆகமம்
  • ஆங்கிலம்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் பேட்டி
  • ஆசிரியர்அறிக்கை
  • ஆட்சி
  • ஆணை
  • ஆந்திரா
  • ஆபத்து
  • ஆய்வரங்கம்
  • ஆய்வுக்குழு
  • ஆயுத பூஜை
  • ஆயுர்வேதம்
  • ஆர்.எஸ்.எஸ்
  • ஆர்ப்பாட்ட அறிவிப்பு
  • ஆர்ப்பாட்டம்
  • ஆர்பாட்டம்
  • ஆரப்பா
  • ஆரியம்
  • ஆரியர்
  • ஆவணம்
  • ஆளுநர்
  • ஆளுநர் விருந்து
  • ஆன்மிக சொற்பொழிவு
  • ஆன்மீகம்
  • ஆனந்த விகடன்
  • ஆனைமுத்து
  • இ.டபில்யூ.எசு
  • இச்சை
  • இசை
  • இட ஒதிக்கீடு
  • இட ஒதுக்கீடு
  • இடிப்பு
  • இணையதளம்
  • இந்தி
  • இந்தி அழிப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்திய இராணுவம்
  • இந்து சட்டம்
  • இந்து தமிழ் திசை
  • இந்து தமிழ்திசை நாளேடு
  • இந்து திருமணம்
  • இந்து நாளேடு
  • இந்து மாநாடு
  • இந்துத்துவா
  • இந்துமதப் பண்டிகைகள்
  • இந்துமதம்
  • இமாம் பசந்த்
  • இரங்கல்
  • இரங்கல் அறிக்கை
  • இரயில் எரிப்பு
  • இரயில்வே
  • இராசு
  • இராமராஜ்யம்
  • இராமன்
  • இராமன் பாலம்
  • இராமாயணம்
  • இராஜஸ்தான்
  • இல்லத்திறப்பு
  • இலங்கை
  • இலவசம்
  • இளங்கோவன்
  • இளைஞர் அணி
  • இன்பக்கனி
  • உ.வே.ச
  • உச்ச நீதிமன்ற தீர்ப்பு
  • உச்சநீதிமன்றம்
  • உடல்
  • உடைப்பு
  • உத்திரமேரூர்
  • உதயநிதி
  • உயர் நீதிமன்ற தீர்ப்பு
  • உயிரிழப்பு
  • உரம்
  • உரிமை
  • உரிமைத்தொகை
  • உரை
  • உலகத் தமிழ் மாநாடு
  • உள்ஒதுக்கீடு
  • உறுதிமொழி
  • ஊத்துக்கோட்டை
  • ஊதியம்
  • ஊரக வளர்ச்சி
  • எச்சரிக்கை
  • எடைக்கு எடை
  • எதிர்ப்பு
  • எழுத்தியல்
  • எழும்பூர்
  • எழும்பூர் ரயில் நிலையம்
  • என்எல்சி
  • ஒப்பீடு
  • ஒப்புதல்
  • ஒரே மொழி
  • ஒற்றை பத்தி
  • ஒற்றைப் பத்தி
  • ஒற்றைப்பத்தி
  • ஒன்றிய அரசு
  • ஓசூர்
  • ஓதுவார்
  • ஓபிசி
  • ஓய்வூதியம்
  • க்யூஆர் கோட்
  • கச்சத்தீவு
  • கட்டுமானத் தொழிலாளர்
  • கடவுள்
  • கடவுள் மறுப்பு
  • கடன்
  • கடிதம்
  • கண்டணம்
  • கண்டன ஆர்ப்பாட்டம்
  • கண்டனம்
  • கம்யூனிஸ்ட்
  • கர்நாடகம்
  • கர்நாடகா
  • கர்ப்பூரி தாகூர்
  • கருணை வேலை
  • கருத்தரங்கம்
  • கருத்தியல் பயிற்சி
  • கருத்து
  • கருத்துப்படம்
  • கருத்துரை
  • கருநாடக மாநிலம்
  • கரோனா
  • கல்
  • கல்வி
  • கல்வி அமைச்சர்
  • கல்வி நிலையம்
  • கல்வி வளாகம்
  • கல்வெட்டு
  • கலந்துரையாடல்
  • கலாச்சாரம்
  • கலி பூங்குன்றன்
  • கலிபூங்குன்றன்
  • கலைஞர்
  • கலைஞர் சிலை
  • கலைஞர் நூற்றாண்டு நூலகம்
  • கவிஞர்
  • கவிஞர் கலி
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கவிஞர் கலிபூங்குன்றன்
  • கவிதை
  • கவியரங்கம்
  • கவுதமன்
  • கழக நூல்கள்
  • கழகம்
  • கழுதை
  • கன்னிமேரா
  • கனடா
  • கனிம நிலங்கள்
  • கனிமொழி
  • காணொலி
  • காந்தி
  • காப்பீடு
  • காமராஜர்
  • காரணம்
  • காலை உணவு
  • காலை சிற்றுண்டி
  • கி.வீரமணி
  • கியூட்
  • கிரிமிலேயர்
  • கிருஷ்ணகிரி
  • கீழ்ப்பாக்கம்
  • கீழடி
  • குடந்தை
  • குடியரசுத் தலைவர்
  • குடியிருப்பு
  • குடியுரிமை
  • குடியுரிமை சட்டம்
  • குடியுரிமை திருத்தச் சட்டம்
  • குடியுரிமைச் சட்டம்
  • குமரி முதல்
  • குமுதம்
  • குலக்கல்வி
  • குவைத்
  • குழந்தை
  • குழந்தை திருமணம்
  • குழந்தை தொழிலாளர்
  • குழந்தையின்மை
  • குற்றச்சாட்டு
  • குற்றம்
  • குறள்
  • குன்றக்குடி அடிகளார்
  • குஜராத்
  • கூட்டம்
  • கூட்டமைப்பு
  • கூடுவாஞ்சேரி
  • கேதார்நாத்
  • கேந்திர வித்யாலயா
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளா
  • கேள்வி
  • கைது
  • கைபேசி
  • கொடும்பாவி எரிப்பு
  • கொடுமை
  • கொரோணா
  • கொலை
  • கொலை முயற்சி
  • கொலைக்கருவி
  • கொள்கை பரவல்
  • கோ.தங்கராசு
  • கோகுல்ராஜ்
  • கோத்ரா
  • கோத்ரேஜ்
  • கோயில்
  • கோரிக்கை
  • கோவிட்- 19
  • கோவில்
  • கோவை
  • ச்டாலின்
  • சகுனம்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சாரி
  • சங்கரையா
  • சங்கொலி
  • சட்ட எரிப்பு
  • சட்ட மன்றம்
  • சட்டசபை
  • சட்டத்திருத்தம்
  • சட்டம்
  • சட்டமன்ற தீர்மானம்
  • சத்திரியர்
  • சதி
  • சந்தா
  • சந்திப்பு
  • சந்துரு பரிந்துரை
  • சபரிமலை
  • சம்புகன்
  • சமசுக்கிருதம்
  • சமசுகிருதம்
  • சமஸ்கிருதம்
  • சமூக நீதி
  • சமூக நீதி நாள்
  • சமூகநீதி
  • சமூகநீதி நாள்
  • சரஸ்வதி
  • சனாதனம்
  • சாக்கோட்டை
  • சாகித்ய அகாடமி
  • சாதனை
  • சாதி
  • சாதி சான்றிதழ்
  • சாமி
  • சாமியார்
  • சாய்பாபா
  • சாலை
  • சான்றிதழ்
  • சிஏஏ
  • சிங்கப்பூர்
  • சிங்கப்பெருமாள் கோவில்
  • சிங்காரவேலர்
  • சித்தராமய்யா
  • சித்தராமையா
  • சித்திரபுத்திரன்
  • சிந்துவெளி
  • சிபிஎஸ்இ
  • சிபிஎஸ்சி
  • சிலம்பம்
  • சிலை
  • சிறப்பு
  • சிறப்பு கூட்டம்
  • சிறை
  • சீட்
  • சீனா
  • சுகாதாரத்துறை
  • சுடுகாடு இடுகாடு
  • சுதந்திரப் போராட்ட வீரர்
  • சுந்தரம்
  • சுற்றறிக்கை
  • சூத்திரன்
  • சூரிய கிரகணம்
  • சூளுரை
  • செக்கடி குப்பம்
  • செங்கல்பட்டு
  • செம்மொழி
  • செம்மொழி நூலகம்
  • செய்தி
  • செய்யாறு
  • செயலி
  • செயற்குழு
  • செல் எண்கள்
  • சென்னை
  • சேது
  • சேது கால்வாய்
  • சேது பாலம்
  • சேலம்
  • சேலம் மாநாடு
  • சொர்க்கவாசல்
  • சோசலிசம்
  • சோனியா
  • டாக்டர்
  • டி ஆர் பாலு
  • டி.ஆர்.பாலு
  • டில்லி
  • டெல்லி
  • டைம்ஸ்
  • தகவல் தொழில் நுட்பக்குழு
  • தகைசால் தமிழர்
  • தகைசால் தமிழர் விருது
  • தஞ்சை
  • தடுப்பு
  • தடுப்பூசி
  • தடை மறுப்பு
  • தண்டனை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியாரின் பெயர்
  • தமிழ்
  • தமிழ் அர்ச்சனை
  • தமிழ் இணையம்
  • தமிழ் கட்டாயம்
  • தமிழ் சங்கம்
  • தமிழ் தாய் வாழ்த்து
  • தமிழ் பண்பாட்டு மாதம்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் மாநாடு
  • தமிழ் மொழி
  • தமிழ் வீரர்கள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு முதல்வர்
  • தமிழர்
  • தமிழர் தலைவர்
  • தமிழில் குடமுழுக்கு
  • தர்மபுர ஆதீனம்
  • தர்மபுரி
  • தர்மம்
  • தலைப்பு உரை
  • தலைமை
  • தலைமை நீதி
  • தலையங்கம்
  • தலைவர்கள்
  • தள்ளுபடி
  • தனியார் நிறுவனங்கள்
  • தனியார்மயம்
  • தாய்லாந்து
  • தாழ்த்தப்பட்டோர்
  • தி.மு.க. அரசு
  • தி.மு.க. மாணவரணி
  • திடல்
  • திமுக
  • தியாகராயர் நகர்
  • திராவிட இயல்
  • திராவிட தேசியம்
  • திராவிட மாடல்
  • திராவிடப் பாரம்பரியம்
  • திராவிடம்
  • திராவிடம் வென்றது!
  • திராவிடர்
  • திராவிடர் இயக்கம்
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் திருநாள்
  • திரிபு வேலை
  • திருக்குறள்
  • திருச்சி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருமணம்
  • திருமா
  • திருமாவளவன்
  • திருமாவேலன்
  • திருமுருகன் காந்தி
  • திருவள்ளுவர்
  • திருவள்ளூர்
  • திருவாடுதுறை
  • தில்லி
  • திவாகரன்
  • திறப்பு
  • தினகரன்
  • தினசெய்தி
  • தினத்தந்தி
  • தினமணி
  • தினமணி கதிர்
  • தினமலர்
  • தீக்கதிர்
  • தீண்டாமை
  • தீபாவளி
  • தீர்ப்பு
  • தீர்மானம்
  • துக்லக்
  • துக்ளக்
  • துக்ளக் பதிலடி
  • துணை முதலமைச்சர்
  • துயர் துடைப்பு
  • துயர்துடைப்பு
  • துரை.சந்திரசேகரன்
  • துரைமுருகன்
  • துளக்
  • தெலுங்கானா
  • தென் சென்னை
  • தேசிய கல்வி
  • தேசிய சட்டக் கல்லூரி
  • தேர்தல்
  • தேர்தல் அறிக்கை
  • தேர்தல் பத்திரம்
  • தேர்வாணையம்
  • தேர்வு
  • தேவதாசி
  • தேவாரம்
  • தொடக்கம்
  • தொண்டு
  • தொப
  • தொல்.திருமாவளவன்
  • தொழில்படிப்பு
  • தொழிலாளர்
  • தொழிலாளர் போராட்டம்
  • தொழிற்சாலை
  • தோள்சீலை
  • நகை
  • நடராசன்
  • நடுவன் அரசு துறை
  • நடைபாதைக் கோயில்கள்
  • நம்பிக்கை
  • நரபலி
  • நரிக்குறவர்
  • நரேந்திரர்
  • நல வாரியம்
  • நவராத்திரி
  • நன்கொடை
  • நன்றி
  • நாகநாதன்
  • நாகை
  • நாங்குநேரி
  • நாத்திகம்
  • நால்வர்
  • நிகழ்வுகள்
  • நிதி
  • நியமனம்
  • நிறைவு
  • நினைவு
  • நினைவு நாள்
  • நினைவுநாள்
  • நீக்கம்
  • நீட்
  • நீட் எதிர்ப்பு
  • நீதிக்கட்சி
  • நீதித்துறை
  • நீதிபதி
  • நீதிபதி நியமனம்
  • நீதிபதி மோகன்
  • நீதிபதிகள்
  • நீதிமன்றம்
  • நீரிழிவு
  • நீலச் சட்டை பேரணி
  • நுங்கம்பாக்கம்
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூலகம்
  • நூற்றாண்டு
  • நூற்றாண்டு நிறைவு
  • நூற்றாண்டு விழா
  • நெய்வேலி
  • நெல்லை
  • நேர்காணல்
  • பக்தி
  • பகவத்கீதை
  • பகுத்தறிவாளர் கழக மாநாடு
  • பசு
  • பஞ்சாப்
  • படத்திறப்பு
  • படம் திறப்பு
  • பண்பாட்டுப் படையெடுப்பு
  • பணி
  • பணிஓய்வு
  • பணிநிறைவு
  • பணிபுரியும் பெண்கள்
  • பணியாளர்
  • பணியிடை நீக்கம்
  • பதக்கம்
  • பதவி உயர்வு
  • பதவி ஏற்பு
  • பதவியேற்பு
  • பதில்
  • பதிலடி
  • பதிவு
  • பயணம்
  • பரதம்
  • பரப்புரை
  • பரப்புரை திட்டம்
  • பல்கலைக்கழகம்
  • பல்லக்கு
  • பல்லாவரம்
  • பலகை
  • பவழ விழா
  • பழங்குடியினர்
  • பள்ளி
  • பள்ளிக்கல்வித்துறை
  • பஜனை
  • பா.இயேசுராஜா
  • பா.ஜ.க
  • பா.ஜ.க.
  • பாட திட்டம்
  • பாடம்
  • பாண்டே
  • பார்ப்பன ஆதிக்கம்
  • பார்ப்பன வெறி
  • பார்ப்பனத் திமிர்
  • பார்ப்பனர்
  • பாரத ரத்னா
  • பாரதிதாசன் விருது
  • பாரம்பரிய சின்னம்
  • பாராட்டு
  • பாராட்டு விழா
  • பாலபிரஜாபதி
  • பாலம்
  • பாலியல் லீலை
  • பாலியல் வன்கொடுமை
  • பாவாணர்
  • பாஜக
  • பி.எப்.
  • பிச்சை
  • பிணை
  • பிபிசி
  • பிரதமர்
  • பிராமண – சூத்திரப் போராட்டம்
  • பில்கிஸ் பானு
  • பிள்ளையார் ஊர்வலம்
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பு
  • பிற்படுத்தப்பட்டோர்
  • பிற இதழ்
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பிறந்தநாள் அறிக்கை
  • பிறமொழி கற்றோர்
  • பின்னணி
  • பிஜேபி அரசு
  • பீகார்
  • புகழாரம்
  • புகார்
  • புத்தக வெளியீடு
  • புத்தகக் காட்சி
  • புத்தாண்டு
  • புதிய கல்வி
  • புதிய கல்வி கொள்கை
  • புதிய சட்டம்
  • புதிரை வண்ணார்
  • புதுச்சேரி
  • புதுடில்லி
  • புரட்சிக்கவி
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்டு இமாலயப்புரட்டு
  • புலம்பெயர் தமிழர்
  • புலவர்
  • புலவர் வீரமணி
  • புலால் உணவு
  • புழல்
  • புறக்கணிப்பு
  • பூணூல்
  • பூமி பூஜை
  • பெங்களூரு
  • பெட்ரண்ட் ரஸல்
  • பெண்
  • பெண் ஏன் அடிமையானாள்?
  • பெண்கள்
  • பெண்கள் ஆணையம்
  • பெண்களுக்கான இடஒதுக்கீடு
  • பெண்களுக்கு இட ஒதுக்கீடு
  • பெண்ணுரிமை
  • பெரம்பூர் பி.சபாபதி
  • பெரியார்
  • பெரியார் 1000
  • பெரியார் உலகம்
  • பெரியார் சிலை
  • பெரியார் திடல்
  • பெரியார் நினைவிடம்
  • பெரியார் நூல்கள்
  • பெரியார் பணி
  • பெரியார் பல்கலைக்கழகம்
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் மண்
  • பெரியார் லைஃப்
  • பெரியார் விருது
  • பெருமை
  • பெல்
  • பேட்டி
  • பேரடை
  • பேரணி
  • பேராசிரியர்
  • பேரிடர்
  • பேருந்து
  • பொங்கல்
  • பொதுக்குழு
  • பொதுத்தேர்வு
  • பொருளாதாரம்
  • பொறுப்பாளர்
  • பொறுப்பு
  • போட்டித் தேர்வு
  • போதைப் பொருள்
  • போராட்டம்
  • மக்களவை உறுப்பினர்
  • மக்களவைத் தேர்தல்
  • மகப்பேறு விடுப்பு
  • மகளிர்
  • மகளிர் உரிமைத் தொகை
  • மகளிர் நாள்
  • மகாராணி
  • மகாவீரர்
  • மஞ்சை வசந்தன்
  • மடையர்
  • மணல் திட்டு
  • மணவழகர் மன்றம்
  • மணவிழா
  • மணிப்பூர்
  • மணிமண்டபம்
  • மணியம்மையார்
  • மணியரசன்
  • மத்திய அரசு
  • மதச்சார்பின்மை
  • மதசார்பின்மை
  • மதம்
  • மதவாதம்
  • மராட்டியம்
  • மருத்துவ படிப்பு
  • மருத்துவக் கல்லூரி
  • மருத்துவக் கல்வி
  • மருத்துவம்
  • மருத்துவமனை
  • மருத்துவர்
  • மலம்
  • மலர்
  • மலன்
  • மலேசியா
  • மலையாளம்
  • மழை
  • மழை வெள்ளம்
  • மறியல்
  • மறுப்பு
  • மறைவு
  • மனித உரிமை
  • மனித சங்கிலி
  • மனுதர்ம யோஜனா
  • மனுதர்மம்
  • மனுஷ்யபுத்திரன்
  • மனைவி சம்பளம்
  • மாணவர்
  • மாணவர் கழகம்
  • மாணவர்கள்
  • மாநாடு
  • மாநில அரசு
  • மாநில அரசுப் பணி
  • மாநிலங்களவை
  • மாம்பழம்
  • மார்கழி
  • மாலனுக்கு பதிலடி
  • மாற்றம்
  • மாற்றுத்திறனாளி
  • மாற்றுவோம்
  • மிரட்டல்
  • மின்சாரம்
  • மீட்பு
  • மீனவர்
  • மு க ஸ்டாலின்
  • மு.க. ஸ்டாலின்
  • மு.க.ஸ்டாலின்
  • முத்துக்கூத்தன் நூற்றாண்டு
  • முத்தையன்
  • முதல்வர்
  • முதலமைச்சர்
  • முரசொலி
  • முருகன்
  • முற்பட்டோர்
  • முஸ்லிம்
  • முஸ்லிம்கள்
  • மூட நம்பிக்கை
  • மூடநம்பிக்கை
  • மூடநம்பிக்கை ஒழிப்பு
  • மூடநம்பிக்கைப் பிரச்சாரம்
  • மூடப் பண்டிகை
  • மூதறிஞர் குழு
  • மே நாள்
  • மொழி
  • மொழிகள்
  • மொழிப்போர்
  • மோசடி
  • யாகம்
  • யாழ்ப்பாணம்
  • யுனெசுகொ
  • ரங்கராஜ்
  • ரசல்
  • ரமணர்
  • ரயில்வே
  • ரஜினி
  • ராகுல் காந்தி
  • ராணுவம்
  • ராமதாஸ்
  • ராமர் கோயில்
  • ராஜஸ்தான்
  • ரிசர்வ் வங்கி
  • வ.உ.சி.
  • வங்கதேசம்
  • வங்கி
  • வட்டாட்சியர்
  • வட இந்தியா
  • வட மாநிலம்
  • வடநாடு
  • வடமாநிலங்கள்
  • வரவு செலவு
  • வரவேற்பு
  • வரி
  • வருகை
  • வழக்கு
  • வழக்கு விசாரணை
  • வழிபாடு
  • வள்ளலார்
  • வன் கொடுமை
  • வன்கொடுமை
  • வன்புணர்வு
  • வன்முறை
  • வன உயிரியல் பூங்கா
  • வா உ சி
  • வாரியம்
  • வாரியார்
  • வாழ்த்து
  • வி.பி.சிங்
  • விசாரணை
  • விடுதலை
  • விடுதலை சந்தா
  • விடுதலை90
  • விடுதலைப் போர்
  • விடுமுறை
  • விபத்து காப்பீட்டுத் திட்டம்
  • விமானநிலையம்
  • வியப்பு
  • விருது
  • விருதுநகர்
  • விலக்கு
  • விவசாயி
  • விவேகானந்தர்
  • விழா
  • விளக்கம்
  • விளையாட்டு
  • விஜயபாரதம்
  • விஸ்வகர்மா திட்டம்
  • வீட்டுமனை
  • வெள்ளம்
  • வெள்ளை அறிக்கை
  • வெளியேற்றம்
  • வெற்றி
  • வேங்கை வயல்
  • வேதம்
  • வேர்ல்ட் ரெக்கார்ட்
  • வேலை நேரம்
  • வேலைவாய்ப்பு
  • வைக்கம்
  • வைக்கம் நூற்றாண்டு
  • வைகோ
  • வைரசு
  • ஜப்பான்
  • ஜாதி
  • ஜாதி உணர்வு
  • ஜாதி கொடுமை
  • ஜாதி நீக்கம்
  • ஜாதி பெயர்
  • ஜாதி பேதம்
  • ஜாதி முறை
  • ஜாதி வெறி
  • ஜாதிவாரி கணக்கெடுப்பு
  • ஜூனியர் விகடன்
  • ஜெர்மன்
  • ஸ்டாலின்
  • ஹிந்தி
  • ஹிந்தி எதிர்ப்பு
  • ஹிந்தி எழுத்து அழிப்பு
  • ஹிந்துத்துவா
  • CAB&NRC

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (11)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (3)
  • ►  2024 (69)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (10)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (5)
  • ►  2023 (104)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (10)
  • ▼  2022 (106)
    • ▼  டிசம்பர் (19)
      • ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ 50 ஆம் ஆண்டு மற்றும் தமிழர...
      • மீண்டும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை அமைக...
      • ஒப்புதல் வாக்குமூலம் ராமர் சேது பாலம் பற்றிய உறுதி...
      • தந்தை பெரியார் 49ஆம் ஆண்டு நினைவு நாள் மரியாதை - (...
      • பகுத்தறிவுப் பகலவனின் சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரி...
      • எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற நீதிக்கட்சியின் ...
      • தமிழக மூதறிஞர் குழு செயற்குழுக் கூட்டம் : தமிழர் த...
      • படையெடுப்புகளில் மிக ஆபத்தானது பண்பாட்டுப் படையெடு...
      • வாழ்க இனமானப் பேராசிரியரின் தொண்டு!
      • கல்வி வளாகத்துக்கு அன்பழகனார் பெயர் சூட்டு விழா பே...
      • இனமானப் பேராசிரியர் க.அன்பழகனாரின் நூற்றாண்டு நிறை...
      • இனமானப் பேராசிரியர் அவர்களுடைய நூற்றாண்டு நிறைவு வ...
      • அமைச்சராகப் பொறுப்பேற்ற மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின...
      • தமிழ்நாடு அமைச்சராகப் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின்...
      • அட, அண்டப் புளுகு - அவுட்டுத் திரி ‘தினமலரே!'
      • தமிழர் தலைவர் ஆசிரியருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலி...
      • தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 90ஆம் ஆண்டு பிறந்...
      • தமிழ்நாட்டின் மூத்த தலைவர் ஆசிரியர் அய்யா வீரமணி ம...
      • தமிழர் தலைவர் ஆசிரியரின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் ...
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (15)
  • ►  2021 (266)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (10)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (31)
    • ►  ஆகஸ்ட் (46)
    • ►  ஜூலை (26)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (17)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (24)
  • ►  2020 (155)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (14)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (33)
    • ►  பிப்ரவரி (31)
    • ►  ஜனவரி (42)
  • ►  2019 (149)
    • ►  டிசம்பர் (35)
    • ►  நவம்பர் (37)
    • ►  அக்டோபர் (58)
    • ►  செப்டம்பர் (19)

சிறப்புடைய இடுகை

அமெரிக்கா - வாஷிங்டன் நகரில் பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாடு கோலாகலமாகத் தொடங்கியது

வரவேற்புரை என்னும் தலைப்பில் உரையாற்றிய அமெரிக்க மேரிலாண்ட் மாகாணத்தின் 8-ஆம் மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி ஜாமி ரஸ்கின் அவர்களுக்கு தமி...

இந்த வலைப்பதிவில் தேடு

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (11)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (3)
  • ►  2024 (69)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (10)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (5)
  • ►  2023 (104)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (10)
  • ▼  2022 (106)
    • ▼  டிசம்பர் (19)
      • ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ 50 ஆம் ஆண்டு மற்றும் தமிழர...
      • மீண்டும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை அமைக...
      • ஒப்புதல் வாக்குமூலம் ராமர் சேது பாலம் பற்றிய உறுதி...
      • தந்தை பெரியார் 49ஆம் ஆண்டு நினைவு நாள் மரியாதை - (...
      • பகுத்தறிவுப் பகலவனின் சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரி...
      • எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற நீதிக்கட்சியின் ...
      • தமிழக மூதறிஞர் குழு செயற்குழுக் கூட்டம் : தமிழர் த...
      • படையெடுப்புகளில் மிக ஆபத்தானது பண்பாட்டுப் படையெடு...
      • வாழ்க இனமானப் பேராசிரியரின் தொண்டு!
      • கல்வி வளாகத்துக்கு அன்பழகனார் பெயர் சூட்டு விழா பே...
      • இனமானப் பேராசிரியர் க.அன்பழகனாரின் நூற்றாண்டு நிறை...
      • இனமானப் பேராசிரியர் அவர்களுடைய நூற்றாண்டு நிறைவு வ...
      • அமைச்சராகப் பொறுப்பேற்ற மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின...
      • தமிழ்நாடு அமைச்சராகப் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின்...
      • அட, அண்டப் புளுகு - அவுட்டுத் திரி ‘தினமலரே!'
      • தமிழர் தலைவர் ஆசிரியருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலி...
      • தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 90ஆம் ஆண்டு பிறந்...
      • தமிழ்நாட்டின் மூத்த தலைவர் ஆசிரியர் அய்யா வீரமணி ம...
      • தமிழர் தலைவர் ஆசிரியரின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் ...
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (15)
  • ►  2021 (266)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (10)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (31)
    • ►  ஆகஸ்ட் (46)
    • ►  ஜூலை (26)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (17)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (24)
  • ►  2020 (155)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (14)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (33)
    • ►  பிப்ரவரி (31)
    • ►  ஜனவரி (42)
  • ►  2019 (149)
    • ►  டிசம்பர் (35)
    • ►  நவம்பர் (37)
    • ►  அக்டோபர் (58)
    • ►  செப்டம்பர் (19)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.