முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் தலைவர்கள் பங்கேற்பு
சென்னை, டிச. 19- மறைந்த மேனாள் தி.மு.க. பொதுச் செயலாளர் நினைவில் வாழும் இனமானப் பேராசிரியர் க.அன்பழகனாரின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக் கூட்டம் நேற்று (18.12.2022) மாலை சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்றது.
சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பொதுக்கூட்டத்துக்கு தி.மு.க. பொதுச்செயலா ளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரை முருகன் தலைமை தாங்கினார்.
சென்னை கிழக்கு மாவட்ட செயலாள ரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச் சருமான பி.கே.சேகர்பாபு அனைவரையும் வரவேற்றார்.
திமுக பொருளாளரும், நாடாளுமன்ற மக்களவை தி.மு.க. குழு தலைவருமான டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, கட்சியின் துணைப்பொதுச் செயலாளர்கள் இ.பெரியசாமி, க.பொன்முடி, நாடாளுமன்ற உறுபபினர்கள் ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைவர்கள் உரை
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி யின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவ ளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹி ருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் பங் கேற்று பேராசிரியர் க.அன்பழகனாரின் தொண் டினை விளக்கி வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக எழும்பூர் தெற்கு பகுதிச் செயலாளர் வி.சுதாகர் நன்றி கூறினார்.
சிறப்பிதழ் வெளியீடு
இவ்விழாவில் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா முரசொலி சிறப்பிதழை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் முன்னிலையில் அமைச்சர் துரைமுரு கன் வெளியிட திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பெற்றுக்கொண்டார்.
ஒளிப்பட கண்காட்சி
முன்னதாக நிறைவு விழா பொதுக்கூட் டத்தின் ஒரு பகுதியாக பேராசிரியர் க.அன்பழகனாரின் ஒளிப்பட கண்காட் சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை யில் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த ஒளிப்பட கண்காட் சியை பார்வையிட்டார்.
இவ்விழாவில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், வழக்குரை ஞரணித் தலைவர் த.வீரசேகரன் மற்றும் அமைச்சர் பெருமக்கள் தி.மு.க. நாடாளுமன்ற, சட்ட மன்ற மேனாள், இந்நாள் உறப்பினர்கள், பல்வேறு நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பித்தனர்.